யஜ்ஞாத்1வா ந பு1னர்மோஹமேவம் யாஸ்யஸி பா1ண்ட1வ |
யேன பூ4தா1ன்யஶேஷேண த்3ரக்ஷ்யஸ்யாத்1மன்யதோ2 மயி ||35||
யத்—--எதை; ஞாத்வா—--அறிந்து; ந--—ஒருபோதும் இல்லை;புனஹ--—மீண்டும்; மோஹம்--—மாயையை; ஏவம்—--இப்படி; யாஸ்யஸி----நீ பெறுவாய்; பாண்டவ—--பாண்டுவின் மகன், அர்ஜுனா; யேன—--இதன் மூலம்; பூதானி--—உயிரினங்கள்; அஶேஷாணி—--அனைத்தும்; த்ரக்ஷ்யஸி—--நீ பார்ப்பாய்; ஆத்மனி—--என்னுள் (ஸ்ரீ கிருஷ்ணர்); அதோ—--அதாவது; மயி---என்னில்; (ந யாஸ்யஸி—--நீங்கள் பெற மாட்டீர்கள்)
BG 4.35: இந்த வழியைப் பின்பற்றி, ஒரு குருவிடம் ஞானம் பெற்ற பிறகு, ஓ அர்ஜுனா, இனி நீ மாயையில் விழமாட்டாய். அந்த அறிவின் வெளிச்சத்தில், எல்லா உயிரினங்களும் உன்னதத்தின் பகுதிகள் மற்றும் எனக்குள் இருப்பதை நீ பார்ப்பாய்.
Start your day with a nugget of timeless inspiring wisdom from the Holy Bhagavad Gita delivered straight to your email!
சூரியனை இருள் சூழ்ந்து கொள்ளாதது போல, ஒருமுறை ஞானம் பெற்ற ஆன்மாவை மாயையால் ஒருபோதும் வெல்ல முடியாது. த1த்3விஷ்ணோ: த1த்3விஷ்ணோ: ப1ரமம் ப1த3ம் ஸதா ப1ஷ்யந்தி1 ஸூர்யஹ (ரிக்3 வேத3ம்) 'கடவுளை உணர்ந்தவர்கள் எப்போதும் இறை உணர்வில் இருப்பார்கள்.
மாயாவின் மருட்சியில், நாம் உலகத்தை கடவுளிடமிருந்து பிரித்து, மற்றவர்கள் நம் சுயநலத்தை திருப்திப் படுத்துகின்றனரா, அல்லது தீங்கு விளைவிக்கின்றனரா என்பதை பொருத்து மனிதர்களுடன் நட்பு அல்லது பகைமையை ஏற்படுத்துகிறோம், அறிவொளியுடன் வரும் தெய்வீக அறிவு உலகத்தைப் பற்றிய நமது கண்ணோட்டத்தையும் பார்வையையும் மாற்றுகிறது. அறிவொளி பெற்ற துறவிகள் உலகத்தை கடவுளின் ஆற்றலாகப் பார்க்கிறார்கள் மற்றும் கடவுளின் சேவையில் தங்கள் வழியில் வரும் அனைத்தையும் பயன்படுத்துகிறார்கள். அவர்கள் எல்லா மனிதர்களையும் கடவுளின் பாகங்களாகப் பார்க்கிறார்கள் மற்றும் அனைவரிடமும் தெய்வீக அணுகுமுறையைக் கொண்டுள்ளனர். இவ்வாறு, ஹனுமான் கூறுகிறார்:
ஸீய ராமமய ஸப 3 ஜக3 ஜானீ க1ரௌன் ப்1ரணாம ஜோரி ஜுக1 பா1னீ
(ராமாயணம்)
‘எல்லோரிடமும் நான் ராமர் மற்றும் அன்னை ஸீதையின் வடிவங்களைக் காண்கிறேன், எனவே நான் அனைவரையும் எனது கைகளை கூப்பி வணங்குகிறேன்.’