நாஹம் ப்1ரகாஶ: ஸர்வஸ்ய யோக3மாயாஸமாவ்ருத1: |
மூடோ4யம் நாபி4ஜானாதி1 லோகோ1 மாமஜமவ்யயம் ||25||
ந—--இல்லை; அஹம்—--நான்; பிரகாசம்—--வெளிப்படையான; ஸர்வஸ்ய—--அனைவருக்கும்; யோக-மாயா----கடவுளின் உயர்ந்த (தெய்வீக) ஆற்றல்; ஸமாவ்ரிதஹ—மறைக்கப்பட்டு; மூடஹா—-மாயையால் ஆட்கொள்ளப்ட்டவர்கள்; அயம்--—இவை; ந—இல்லை; அபிஜானாதி—அறிக; லோகஹ--—நபர்கள்; மாம்--—நான்; அஜம்--—பிறக்காத; அவ்யாயம்—--மாறாதது. ந—-அபிஜானாதி—அறியார்
BG 7.25: எனது தெய்வீக யோகமாயா ஆற்றலால் மறைக்கப்பட்ட நான் அனைவருக்கும் வெளிப்படுவதில்லை. எனவே, அறிவு இல்லாதவர்கள் நான் பிறப்பில்லாதவன், மாறாதவன் என்பதை அறிவதில்லை.
Start your day with a nugget of timeless inspiring wisdom from the Holy Bhagavad Gita delivered straight to your email!
7.4 மற்றும் 7.5 வசனங்களில் அவருடைய இரண்டு ஆற்றல்களை விவரித்த ஸ்ரீ கிருஷ்ணர் இப்போது அவருடைய மூன்றாவது சக்தியான யோகமாயாவைக் குறிப்பிடுகிறார். இதுவே அவருடைய உன்னத ஆற்றல். விஷ்ணு புராணம் கூறுகிறது:
விஷ்ணு ஶக்1தி1ஹி ப1ரா ப்1ரோக்1தா1 க்ஷேத்1ரஞாக்2யா த1தா2 ’ப1ரா
அவித்4யா கர்1ம ஸஞ்ஞான்யா த்1ரிதீ1யா ஶக்1தி1ரிஷ்யதே1 (6.7.61)
'ஒப்புயர்வற்ற பகவான் ஸ்ரீ விஷ்ணுவுக்கு மூன்று முக்கிய ஆற்றல்கள் உள்ளன—யோகமாயா, ஆன்மாக்கள், மற்றும் மாயா.' ஜகத்குரு கிருபாலுஜி மஹராஜ் கூறுகிறார்:
ஶக்1தி1மான் கீ1 ஶக்1தி1யான், அக3னித1 யத1பி1 ப3கா2ந
தி1ன் மஹ 'மாயா', 'ஜீவ' அரு ‘ப1ரா' த்1ரிஶக்1தி1 ப்1ரதா4ன
(ப4க்1தி1 ஶத1க்1 வசனம் 3)
‘உச்ச உயர்நிலைக்குரிய ஆற்றல் வாய்ந்த ஸ்ரீ கிருஷ்ணருக்கு எல்லையற்ற ஆற்றல்கள் உள்ளன. இவற்றில், யோகமாயா, ஆன்மாக்கள் மற்றும் மாயா ஆகியவை முதன்மையானவை.'
தெய்வீக சக்தி, யோக3மாயா, கடவுளின் அனைத்து சக்தி வாய்ந்த ஆற்றல். அதன் மூலம், அவர் தனது தெய்வீக பொழுது போக்குகளையும், தெய்வீக அன்பு பேரின்பத்தையும், தெய்வீக இருப்பிடங்களையும் வெளிப்படுத்துகிறார். அந்த யோகமாயா சக்தியால், கடவுள் உலகில் அவதரித்து, பூமண்டலத்திலும் தனது தெய்வீக பொழுது போக்குகளை வெளிப்படுத்துகிறார். அதே யோக3மாயா சக்தியால், அவர் தன்னை நம்மிடமிருந்து மறைக்கிறார். கடவுள் நம் இதயத்தில் வீற்றிருந்தாலும், நமக்குள் அவர் இருப்பதைப் பற்றிய புலனுணர்வு நமக்கு இல்லை . அவருடைய தெய்வீக தரிசனத்திற்கு நாம் தகுதி பெறும் வரை யோக3 மாயையினால் அவருடைய தெய்வீகம் நம்மிடமிருந்து மறைக்கப்படுகிறது. எனவே, தற்சமயம் நாம் இறைவனை அவரது சுயரூபத்தில் பார்த்தாலும், அவரைக் கடவுளாக அடையாளம் காண முடியாது.
சி 1தா3னந்த3மய தே3ஹ து1ம்ஹாரி ,பி3கத பிகா1ர ஜான அதி4கா1ரி
(ராமாயணம் )
‘ஓ ‘கடவுளே நீங்கள் தெய்வீக வடிவம் உடையவர். யாருடைய உள்ளம் தூய்மையாக்கப்பட்டதோ அவர்களால் மட்டுமே உமது அருளால் உங்களை அறிய முடியும்.'
யோக3மாயா சக்தி உருவமற்றது மற்றும் ராதை, சீதா, துர்கா, காளி, லக்ஷ்மி மற்றும் பார்வதி போன்ற தனிப்பட்ட வடிவங்களில் வெளிப்படுகிறது. இவை அனைத்தும் மாயா ஆற்றலின் தெய்வீக வடிவங்கள், மேலும் அவை அனைத்தும் வேத கலாச்சாரத்தில் தாயாக மதிக்கப்படுகின்றன. மென்மை, இரக்கம், மன்னிப்பு, தியாகம், கருணை, காரணமற்ற அன்பு ஆகிய தாய்மைப் பண்புகளை அவை வெளிப்படுத்துகின்றன. மிக முக்கியமாக, அவர்கள் ஆன்மாவுக்கு தெய்வீக அருளை வழங்குகிறார்கள், மேலும் கடவுளை அறியக்கூடிய ஆழ்நிலை அறிவை அதற்கு வழங்குகிறார்கள். இதனால்தான் பிருந்தாவனத்தில் உள்ள பக்தர்கள் ராதே4 ராதே4, ஷ்யாம் ஸே மிலா தே3, ‘ஓ ராதா, தயவு செய்து உனது அருளைப் பெற்று, ஸ்ரீ கிருஷ்ணரை சந்திக்க உதவுங்கள்’ என்று பாடுகிறார்கள்.
இவ்வாறு, தெய்வீக சக்தி- யோகமாயா இரண்டு செயல்பாடுகளையும் செய்கிறது - இது தகுதியற்ற ஆன்மாக்களிடமிருந்து கடவுளை மறைக்கிறது மற்றும் சரணடைந்த ஆன்மாக்கள் அவரை அறியும் வகையில் அவர்களுக்கு அருள் செய்கிறது. கடவுளை நோக்கி முதுகைத் திருப்பியவர்கள் மாயையால் மூடப்பட்டு யோகமாயாவின் அருளைப் பெறுவதில்லை. கடவுளை நோக்கி முகத்தைத் திருப்புபவர்கள் மாயையிலிருந்து விடுபட்டு யோகமாயாவின் அடைக்கலத்திற்கு வருகிறார்கள்.