Contact: +91 844 894 1008
bgwebsite_logo
Bhagavad Gita
The Song of God

Bhagavad Gita: Chapter 10, Verse 21

ஆதி3த்1யானாமஹம் விஷ்ணுர்ஜ்யோதி1ஷாம் ரவிரன்ஶுமான் |

மரீசிர்மருதா1மஸ்மி நக்ஷத்1ராணாமஹம் ஶஶீ ||21||

ஆதித்யானாம்--—அதிதியின் பன்னிரண்டு மகன்களில்; அஹம்—--நான்; விஷ்ணுஹு---விஷ்ணு பகவான்; ஜோதிஷாம்—--ஒளிரும் பொருட்களில்; ரவிஹி---சூரியன்; அந்ஶு-மான்--—ஒளிர்; மரீசிஹி---மரிசி; மருதாம்—--மருதுகளில்; அஸ்மி---— நான்; நக்ஷத்ராணாம்—--நட்சத்திரங்களில்; அஹம்—நான்; ஶஶீ-—சந்திரன்

Translation

BG 10.21: அதிதியின் பன்னிரண்டு மகன்களில் நான் விஷ்ணு; ஒளிரும் பொருட்களில், நான் சூரியன். மருதுகளில் மரீச்சியாகவும், இரவு வானில் உள்ள நட்சத்திரங்களில் சந்திரனாகவும் என்னை அறிந்துகொள்.

Commentary

காஷ்யப முனிவருக்கு அதி3தி1, தி3தி1 என்ற இரு மனைவிகள் இருந்ததை புராணங்களில் இருந்து நாம் அறிந்து கொள்கிறோம். அவரது முதல் மனைவியான அதி3தி1யிடமிருந்து, அவர் பன்னிரண்டு தேவலோக ஆளுமைகளை பெற்றார் – தா4தா1, மித்ர1, ஆர்யம, ஷக்ர, வருணன, அம்ஶ, ப4க, விவஸ்வன், பூ1ஷ, ஸவித1, த்1வஷ்ட1 மற்றும் வாமன. இவற்றில், வாமனன் மகா விஷ்ணுவின் அவதாரம். எனவே, ஆதித்யர்களில் (அதிதியின் பன்னிரண்டு மகன்கள்), விஷ்ணு (வாமன் வடிவில்) தனது செல்வச் செழிப்பை வெளிப்படுத்துகிறார் என்று ஸ்ரீ கிருஷ்ணர் கூறுகிறார்.

ஒளிரும் பொருட்களில், சூரியன் உயர்ந்தது. ராமாயணம் கூறுகிறது;

ராகா11தி1 ஷோட3ஸ வஹீன் தா1ராக1ன ஸமுதா3யி

ஸக1ல கி3ரின்ஹ ​​த3வ லாயிய பி 3னு ரபி 3 ராதி 1 ந ஜாயி

'இரவில், வானத்தில் உள்ள அனைத்து நட்சத்திரங்களுடன் அனைத்து விளக்குகளும், சந்திரனும் ஒன்றாக இரவின் இருளை அகற்ற போதுமானதாக இல்லை. ஆனால் சூரியன் உதிக்கும் தருணத்தில், இரவு கலைந்து விடுகிறது.’ அவ்விதமான சூரியனின் சக்தியை , ஸ்ரீ கிருஷ்ணர் தனது விபூ4தி1யாக (மகத்துவம்) வெளிப்படுத்துகிறார்.

பின்னர், அவர் இரவு வானத்திற்கு வருகிறார். 'ஆயிரம் நட்சத்திரங்களை விட ஒரு சந்திரன் சிறந்தது' என்று நன்கு அறியப்பட்ட பழமொழி உள்ளது. இரவு வானத்தில் உள்ள அனைத்து விண்மீன்கள் மற்றும் நட்சத்திரங்களில், அவர் சந்திரன், ஏனெனில் அது அவரது சிறப்பை சிறப்பாக வெளிப்படுத்துகிறது என்று ஸ்ரீ கிருஷ்ணர் கூறுகிறார்.

காஷ்யப முனிவர் தனது இரண்டாவது மனைவியான தி3தி1 விடமிருந்து தை3த்1தி1யர்களை (அஸூரர்களை) பெற்றதாக புராணங்கள் மேலும் கூறுகின்றன. தைத்தியர்களைத் தவிர, இந்திரனை விட (தேவலோக கடவுள்களின் அரசன்) சக்தி வாய்ந்த ஒரு மகனைப் பெற திதி விரும்பினார். அதனால், குழந்தையை ஒரு வருடம் வயிற்றில் வைத்திருந்தார். இதை அறிந்த இந்திரன் ஒரு இடியைப் பயன்படுத்தி அவளது கருவை பல துண்டுகளாகப் பிளக்க முயற்சி செய்தபொழுது, அது பல கருக்களாக மாறியது. இவை மாருதங்களாக அல்லது பிரபஞ்சத்தில் பாயும் நாற்பத்தொன்பது வகையான காற்றுகளாக மாறி, பெரும் நன்மையைச் செய்கின்றன. அவற்றில் முக்கியமானவை ஆவாஹ, ப்1ரவாஹ, நிவாஹ, பூ1ர்வஹ, உத்3வஹ, ஸம்வஹ மற்றும் ப1ரிவஹ. பிரதான காற்றான, பரிவஹ, மரிசி என்ற பெயரையும் கொண்டுள்ளது. ‘மரிசி’ என்ற காற்றில் அவரது சிறப்பு வெளிப்படுகிறது என்று ஸ்ரீகிருஷ்ணர் கூறுகிறார்.

Bookmark this Verse

Sign in to save your favorite verses.

Add a Note
Swami Mukundananda
10. விபூதி யோகம்

Quick Jump to Any Verse

Navigate directly to the wisdom you seek

Book with feather

Stay Connected!

Verse of the Day

Start your day with the timeless inspiring wisdom from the Holy Bhagavad Gita delivered straight to your email!

Thanks for subscribing to "Bhagavad Gita - Verse of the Day"!