அனன்த1ஶ்சா1ஸ்மி நாகா3னாம் வருணோ யாத3ஸாமஹம் |
பி1த்1ரீணாமர்யமா சா1ஸ்மி யம: ஸந்யமதா1மஹம் ||29||
அனந்தஹ-—அனந்த்; ச--—மற்றும்; அஸ்மி--—நான்; நாகானாம்--—பாம்புகளில்; வருணஹ----கடலின் தேவலோக கடவுள்; யாதஸாம்--—நீர்வாழ் உயிரினங்களில்; அஹம்--—நான்; பித்ரீணாம்--—இறந்து மறைந்த முன்னோர்களில்; அர்யமா—--அர்யமா; ச--—மற்றும்; அஸ்மி---ஆம்; யமஹ---மரணத்தின் தேவலோக கடவுள்; ஸன்யமதாம்--—சட்டத்தை வழங்குபவர்ககளில்; அஹம்----நான்
BG 10.29: பாம்புகளில் நான் அனந்தசேஷன்; நீர்வாழ் உயிரினங்களில், நான் வருணன். மறைந்த முன்னோர்களில், நான் அர்யமா; சட்டத்தை வழங்குபவர்களில், நான் மரணத்தின் அதிபதியான எமதர்மராஜன்.
அனன்த1ஶ்சா1ஸ்மி நாகா3னாம் வருணோ யாத3ஸாமஹம் |
பி1த்1ரீணாமர்யமா சா1ஸ்மி யம: ஸந்யமதா1மஹம் ||29||
பாம்புகளில் நான் அனந்தசேஷன்; நீர்வாழ் உயிரினங்களில், நான் வருணன். மறைந்த முன்னோர்களில், நான் அர்யமா; சட்டத்தை வழங்குபவர்களில், நான் மரணத்தின் அதிபதியான எமதர்மராஜன்.
Sign in to save your favorite verses.
Sign InStart your day with the timeless inspiring wisdom from the Holy Bhagavad Gita delivered straight to your email!
ஆதிசேஷன் விஷ்ணு பகவான் ஓய்வெடுக்கும் தெய்வீக பாம்பு. பத்தாயிரம் படங்களை உடைய ஆதிசேஷன் பிரபஞ்சம் தோன்றிய நாளிலிருந்து கடவுளின் மகிமைகளை தன்னுடைய ஒவ்வொரு படங்களால் விவரித்து வருகிறார் என்று கூறப்படுகிறது, ஆனால் விளக்கம் இன்னும் முழுமையடையவில்லை.
வருணன் கடலின் தேவலோக கடவுள். அதிதியின் மூன்றாவது மகனான அர்யமா மறைந்த முன்னோர்களின் தலைவனாக வழிபடப்படுகிறார். எமராஜன் மரணத்தின் தேவலோக கடவுள். மரணத்திற்குப் பிறகு ஆன்மாவை அதன் மரணச் சட்டத்திலிருந்து எடுக்க அவர் ஏற்பாடு செய்கிறார். அவர் இந்த வாழ்க்கையில் ஆன்மாவின் செயல்களின் அடிப்படையில் கடவுளின் சார்பாக நீதியை வழங்குகிறார், அடுத்த வாழ்க்கையில் தண்டனை அல்லது வெகுமதியை வழங்குகிறார். அவர் தனது கடமைகளில் இருந்து ஒரு அங்குலம் கூட விலகுவதில்லை. கடவுளின் மகிமையை நீதியை பரிபூரணமாக வழங்குபவராக அவர் பிரதிபலிக்கிறார்.