Contact: +91 844 894 1008
bgwebsite_logo
Bhagavad Gita
The Song of God

Bhagavad Gita: Chapter 11, Verse 2

4வாப்1யயௌ ஹி பூ4தா1னாம் ஶ்ருதௌ1 விஸ்த1ரஶோ மயா |
த்1வத்11: க1மலப1த்1ராக்ஷ மஹாத்1ம்யமபி1 சா1வ்ய்யம் || 2 ||

பவ--—தோற்றமும்; அப்யயௌ--—மறைவும்; ஹி—--உண்மையில்; பூதானாம்--—எல்லா உயிரினங்களின்; ஶ்ருதௌ—--கேட்டிருக்கிறேன்; விஸ்தரஶஹ--—விரிவாக; மயா—என்னால்; த்வத்தஹ--—உங்களிடமிருந்து; கமல-பத்ர-அக்ஷ--—தாமரை-கண்களையுடையவரே; மாஹாத்ம்யம்--—மகத்துவத்தை; அபி--—மேலும்; ச--—மற்றும்; அவ்யயம்—--நித்திய

Translation

BG 11.2: தாமரை பூக்கள் போன்ற கண்களை உடையவரே, அனைத்து உயிர்களின் தோற்றம், மறைவு மற்றும் உங்களது நித்திய மகத்துவத்தைப் பற்றியும் உங்களிடமிருந்து விரிவாக கேட்டிருக்கிறேன்.

Commentary

அர்ஜுனன் பகவான் கிருஷ்ணரின் பெருமைகளைத் தொடர்ந்து பாராட்டி, எல்லாப் பொருள் வெளிப்பாடுகளையும் தோற்றுவிப்பவராகவும் அழிப்பவராகவும் அவரது மகிமையை தொடர்ந்து உறுதிப்படுத்துகிறார். அவர் க1மல-ப1த்1ராக்ஷ என்ற வார்த்தைகளால் ஸ்ரீ கிருஷ்ணரை அழைக்கிறார், இதன் பொருள், ‘அவரது கண்கள் தாமரை மலரைப் போன்றது, இது பெரியது, மென்மையானது மற்றும் அழகானது, மேலும் இனிமை மற்றும் மென்மையின் பண்புகளைக் கொண்டுள்ளது.

இந்த வசனத்தில் அர்ஜுனன் ‘ஓ ஸ்ரீ கிருஷ்ணா, உங்களுடைய அழியாத நித்திய மகத்துவத்தைப் பற்றி உங்களிடம் கேள்விப்பட்டேன். நீங்கள் அனைவருக்குள்ளும் இருந்தாலும், அவர்களின் குறைபாடுகளால் நீங்கள் கறைபடாதவர்' என்று குறிப்பிடுகிறார். ‘நீங்கள் உச்சக் கட்டுப்பாட்டாளராக இருந்தாலும், எங்கள் செயல்களுக்கு பொறுப்பானவர் இல்லை. எங்கள் செயல்களின் பலன்களை நீங்கள் வழங்கினாலும், நீங்கள் பாரபட்சமற்றவர் மற்றும் அனைவருக்கும் சமமானவர். நீங்கள் எங்கள் செயல்களின் தலைமையான சாட்சி மற்றும் எங்கள் செயல்களின் பலனை வழங்கும் நீதிபதி. எனவே நீங்கள் எல்லா உயிர்களின் வழிபாட்டின் இறுதி இலக்கு என்று நான் முடிவு செய்கிறேன்.’

Bookmark this Verse

Sign in to save your favorite verses.

Add a Note
Swami Mukundananda
11. விஸ்வரூப தரிசன யோகம்

Quick Jump to Any Verse

Navigate directly to the wisdom you seek

Book with feather

Stay Connected!

Verse of the Day

Start your day with the timeless inspiring wisdom from the Holy Bhagavad Gita delivered straight to your email!

Thanks for subscribing to "Bhagavad Gita - Verse of the Day"!