Bhagavad Gita: Chapter 11, Verse 40

நம:பு1ரஸ்தா132 ப்1ருஷ்ட21ஸ்தே1 நமோ‌ஸ்து1 தே1 ஸர்வத1 ஏவ ஸர்வ |

அனன்த1வீர்யாமித1விக்1ரமஸ்த்1வம் ஸர்வம் ஸமாப்1நோஷி த1தோ1‌ஸி ஸர்வ: ||40||

நமஹ---வணக்கங்கள்; புரஸ்தாத்—--முன்பக்கத்திலிருந்து; அத--—மற்றும்; ப்ரிஷ்டதஹ---பின்பக்கத்திலிருந்து; தே—--உங்களுக்கு; நமஹ அஸ்து--—நான் எனது வணக்கங்களைச் சமர்ப்பிக்கிறேன்; தே—--உங்களுக்கு; ஸர்வதஹ--—எல்லா பக்கங்களிலிருந்தும்; ஏவ—--உண்மையில்; ஸர்வ--—அனைத்து; அனந்த-வீர்ய--—எல்லையற்ற சக்தி; அமித-விக்ரமஹ---எல்லையற்ற வீரம் மற்றும் வலிமை; த்வம்--—நீங்கள்; ஸர்வம்—--அனைத்தையும்; ஸமாப்நோஷி--—வியாபித்து; ததஹ—--இவ்வாறு; அஸி--—(நீங்கள்) ஸர்வஹ--—அனைத்தும்

Translation

BG 11.40: எல்லையற்ற சக்தியின் இறைவனே, உங்களுக்கு முன்னும் பின்னும், உண்மையில் எல்லா பக்கங்களிலிருந்தும் எனது வணக்கங்கள்! நீங்கள் எல்லையற்ற வீரம் மற்றும் வலிமை மற்றும் அனைத்தையும் வியாபித்து இருக்கிறீர்கள், இதனால், அனைத்தும் நீங்களே.

Commentary

அர்ஜுனன் ஸ்ரீ கிருஷ்ணரை அனந்த-வீர்ய (எல்லையற்ற பலம் கொண்டவர்) மற்றும் அனந்தவிக்ரமஹ- (அளவிடமுடியாத சக்தி வாய்ந்தவர்) என்று அறிவித்து அவரை மகிமைப்படுத்துவதைத் தொடர்கிறார். பிரமிப்புடன், அவர் ஸ்ரீ கிருஷ்ணருக்கு எல்லாப் பக்கங்களிலிருந்தும் நமஸ்காரம் செய்கிறார், மீண்டும் மீண்டும் நமஹ! நமஹ! என்று உணர்ச்சி மீதூரக் கூறுகிறார்! (நான் மீண்டும் மீண்டும் உன்னை வணங்குகிறேன்).

Swami Mukundananda

11. விஸ்வரூப தரிசன யோகம்

Subscribe by email

Thanks for subscribing to “Bhagavad Gita - Verse of the Day”!