ஸகே2தி1 மத்1வா ப்1ரஸப4ம் யது3க்1த1ம்
ஹே க்1ருஷ்ண ஹே யாத3வ ஹே ஸகே2தி1 |
அஜானதா1 மஹிமானம் த1வேத3ம்
மயா ப்1ரமாதா3த்1ப்1ரணயேன வாபி1 ||41||
யச்1சா1வஹாஸார்த2மஸத்1க்1ருதோ1ஸி
விஹாரஶய்யாஸனபோ4ஜநேஷு |
ஏகோ1த2வாப்1யச்1யுத1 த1த்1ஸமக்ஷம்
த1த்1க்ஷாமயே த்1வாமஹமப்1ரமேயம் ||42||
ஸகா—--நண்பன்; இதி—--என; மத்வா--—சிந்தித்து; ப்ரஸபம்—--ஆணவமாக; யத்—--எதுவாகஇருந்தாலும்; உக்தம்—--பேசியது;ஹே கிருஷ்ண---—ஓ ஸ்ரீ கிருஷ்ணா; ஹே யாதவ--—ஓ ஸ்ரீ கிருஷ்ணா, யது குலத்தில் பிறந்தவரே;ஹே ஸகே----ஓ என் அன்பு நண்பரே; இதி—--இவ்வாறு; அஜானதா—--அறியாமையில்; மஹிமானம்—--மகத்துவம்; தவ--—உங்கள்; இதம்--இது; மயா--—என்னால்; பிரமாதாத்—--அலட்சியத்தால்; ப்ரணயேன—--பாசத்தினால்; வா அபி---இல்லாவிட்டால்; யத்--—எதுவாக இருந்தாலும்; ச--—மேலும்; அவஹாஸ-அர்த்தம்—--நகைச்சுவையாக; அஸத்-கிருதஹ—--மரியாதையின்றி;அஸி--—நீங்கள் இருந்தீர்கள்; விஹார--—விளையாடும்பொழுது; ஶய்யா—--ஓய்வெடுக்கும் பொழுது; ஆஸன—--உட்கார்ந்திருக்கும் பொழுது; போஜநேஷு--—உண்ணும் பொழுது; ஏகஹ—--(எப்பொழுது) தனியாக; அதவா—--அல்லது; அபி--—கூட; அச்யுதா---கிருஷ்ணா, தவறில்லாதவரே; தத்-ஸமக்ஷம்—--மற்றவர்களுக்கு முன்; தத்—--அனைத்திற்கும்; க்ஷாமயே--—மன்னிப்புக் கோருகிறேன்; த்வாம்—--உங்களிடமிருந்து; அஹம்--—நான்; அப்ரமேயம்--—அளவில்லாத.
BG 11.41-42: என் நண்பனாக நினைத்து, 'ஓ கிருஷ்ணா', 'ஓ யாதவா', 'ஓ என் அன்பான நண்பனே,' என்று கர்வத்துடன் உங்களை அழைத்தேன். அலட்சியத்தையும், தேவையற்ற பாசத்தையும் காட்டி, உங்களுடைய மகிமையைப் பற்றி நான் அறியாமல் இருந்தேன். விளையாட்டின் பொழுது, ஓய்வெடுக்கும் பொழுது, உட்கார்ந்து, சாப்பிடும் பொழுது, தனிமையில் இருக்கும் பொழுது, அல்லது மற்றவர்களுக்கு முன்பாக, வேடிக்கையாக, நான் உங்களிடம் அவமரியாதையாக நடந்து கொண்டேன் என்றால், நான் அவை அனைத்திற்கும் மன்னிப்பிற்காக ஏங்குகிறேன்.
Start your day with a nugget of timeless inspiring wisdom from the Holy Bhagavad Gita delivered straight to your email!
கடவுளின் ஒப்பற்ற மேன்மையை அறிவிக்கும் வகையில், அனைத்து வேதங்களும் கூறுகின்றன:
அஹம் ஏவாஸம் எவாக்3ரே நானயத்1 கிஞ்சா1ந்த1ரம் ப3ஹிஹி
(பா4க3வத1ம் 6.4.47 )
'இருப்பவை எல்லாம் நான்தான். என்னை விட உயர்ந்தது எதுவுமில்லை.’
த்1வமோம்கா1ரஹ ப1ராத்1ப1ரஹ (வால்மீகீ ராமாயணம்)
‘ஓம் என்ற ஆதி ஒலியே உனது வெளிப்பாடு. நீங்கள் மேலானவர்களை விட மேலானவர்.'
வாஸுதே3வஹ ப்1ரஹ் ப்1ர4ஹு (நாரத3 ப1ஞ்ச1ராத்1ரா)
‘ஸ்ரீ கிருஷ்ணரே மூலாதாரமான ஒப்புயர்வற்ற கடவுள்.’
ந தே3வஹ கே1ஶவாத்1 ப1ராஹ (நாரத3 பு1ராணம்)
‘கிருஷ்ணரை விட உயர்ந்த கடவுள் இல்லை.’
வித்3யாத்1 தம் பு1ரு1ஶம் ப1ரம் (மனு ஸ்மிருதி1 12.122)
'ஒப்புயர்வற்ற கடவுள் எல்லா ஆளுமைகளிலும் சிறந்தவர் மற்றும் உயர்ந்தவர்".’ எனினும், முன்பு விளக்கப்பட்டது போல்(11.24 வசனத்தின் வர்ணனை), காதல் தீவிரமடையும் பொழுது காதலிப்பவர் அவர் காதலிப்பவரின் முறையான நிலையை மறந்துவிடுகிறார் .இவ்வாறு, ஸ்ரீ கிருஷ்ணரின் மீதான அதீத அன்பில் பல அந்தரங்கமான மறக்கமுடியாத தருணங்களை பகிர்ந்து கொண்ட அர்ஜுனன் அவருடைய உன்னத நிலையை ஆனந்தமாக மறந்துவிட்டார்.
ஸ்ரீ கிருஷ்ணரின் ப்ரபஞ்ச வடிவத்தை கண்ட அர்ஜுனன் ஸ்ரீ கிருஷ்ணர் தனது நண்பன் மற்றும் தோழன் மட்டுமல்லாமல் தேவர்கள், கந்தவர்கள், சித்தர்கள், மற்றும் பிற அனைத்து உயிரினங்களும் கூட போற்றும் ஒப்புயர்வற்ற தெய்வீக ஆளுமை என்பதை இப்பொழுது முழுமையாக உணர்ந்தார். போற்றப்படுபவர்கள் அவர்களின் முதல் பெயர்களால் அழைக்கப்படுவதில்லை, அவர்கள் மீதான மரியாதையின் அடையாளமாக. அதிகப்படியான பரிச்சயத்தின் காரணமாக, அவர் கடவுளுக்கு சமமான அந்தஸ்தில் தன்னை வைத்துக்கொண்டதாகவும், 'என் நண்பா', 'என் அன்பான தோழா', மற்றும் 'ஓ கிருஷ்ணா' போன்ற அன்பான வார்த்தைகளால் அவரை ஆணவத்துடன் அழைத்ததற்கு ஆகவும் அவர் கவலைப்படுகிறார். எனவே, ஸ்ரீ கிருஷ்ணரின் தெய்வீகத் தன்மையை மறந்து அவர் எதைச் செய்திருந்தாலும் அதற்காக மன்னிப்புக் கோருகிறார்.