அர்ஜுனஹ உவாச 1 |
த்3ருஷ்ட்1வேத3ம் மாநுஷம் ரூப1ம் த1வ ஸௌம்யம் ஜனார்த3ன |
இதா3னீமஸ்மி ஸம்வ்ருத்1த1: ஸசே1தா1: ப்1ரக்1ருதி1ம் க3த1: ||51||
அர்ஜுனஹ உவாச--—அர்ஜுனன் கூறினார்; த்ருஷ்ட்வா--—பார்த்தபின்; இதம்--—இது; மாநுஷம்--—மனித; ரூபம்—--வடிவத்தை; தவ--—உங்களது; சௌம்யம்—--மென்மையான; ஜனார்தன—--பொதுமக்களைக் பாதுகாப்பவர், கிருஷ்ணா; இதானீம்—---இப்பொழுது; அஸ்மி—--நான்; ஸம்வ்ருத்தஹ—--அமைதியடைந்து; ஸ-சேதாஹா—--என் மனது; ப்ரகி1ரிதி1ம்--—இயல்புநிலைக்கு; கதஹ----திரும்பியது
BG 11.51: அர்ஜுனன் கூறினார்: ஓ ஸ்ரீ கிருஷ்ணா, உங்களது மென்மையான மனித உருவத்தைக் கண்டு, நான் அமைதியடைந்துவிட்டேன், என் மனம் இயல்பு நிலைக்குத் திரும்பியது.
Start your day with a nugget of timeless inspiring wisdom from the Holy Bhagavad Gita delivered straight to your email!
ஸ்ரீ கிருஷ்ணரை அவரது அழகான இரு கரங்கள் கொண்ட வடிவில் பார்த்தது, அர்ஜுனனின் சாக்ய பாவ உணர்வை மீண்டும் உறுதிப்படுத்தியது. இதனால், தான் நிம்மதி அடைந்து இயல்பு நிலைக்கு திரும்பியதாக அர்ஜுனன் கூறுகிறார். பாண்டவர்களுடன் ஸ்ரீ கிருஷ்ணரின் பொழுது போக்குகளைக் கண்டு, தேவலோக முனிவர் நாரதர் முன்பு அர்ஜுனனின் மூத்த சகோதரரான யுதிஷ்டிரரிடம் கூறினார்: கூ3டம்4 ப1ரம் ப்4ரஹ்ம மனுஷ்ய-லிங்க3ம் (பாகவதம் 7.15.75) ‘ஸ்ரீ கிருஷ்ணர் உங்கள் வீட்டில் வசிக்கிறார், உங்கள் சகோதரனைப் போலவே உங்களுடன் வாழ்கிறார்.’ இவ்வாறு, அர்ஜுனன் இறைவனுடன் சகோதரனாகவும் நண்பராகவும் பழகும் பாக்கியத்தைப் பெற்றிருந்தார்.