Contact: +91 844 894 1008
bgwebsite_logo
Bhagavad Gita
The Song of God

Bhagavad Gita: Chapter 12, Verse 16

அனபே1க்ஷ: ஶுசி1ர்த3க்ஷ உதா3ஸீனோ க31வ்யத2: |

ஸர்வாரம்ப41ரித்1யாகீ3 யோ மத்3பக்த1: ஸ மே ப்1ரிய: ||16||

அனபேக்ஷஹ----உலக ஆதாயத்தில் அலட்சியமாக; ஶுசிஹி----தூய; தக்ஷஹ--திறமையுடன்; உதாஸீனஹ—கவலை அற்று; கத-வ்யதஹ--—சலனமற்ற; ஸர்வ-ஆரம்பா--அனைத்து முயற்சிகளில்; பரித்யாகீ--—துறந்தவர்; யஹ----யார்; மத்-பக்தஹ----என் பக்தர்; ஸஹ--—அவர்; மே—--எனக்கு; ப்ரியஹ----மிகவும் பிரியமானவர்

Translation

BG 12.16: உலக ஆதாயங்களில் அக்கறையற்றவர்களும், புறமும், அகமும் தூய்மையானவர்களும், திறமைசாலிகளும், கவலைகள் அற்றவர்களும், தொல்லை இல்லாதவர்களும், சுயநலம் இல்லாதவர்களும் ஆன என் பக்தர்கள் எனக்கு மிகவும் பிரியமானவர்கள்.

Commentary

உலக ஆதாயங்களைப் பற்றி அலட்சியமாக இருத்தல்: மன உளைச்சலுக்கு ஆளான ஒருவருக்கு, 1,000 ரூபாய் இழப்பு அல்லது ஆதாயம் என்பது ஒரு முக்கியமான விஷயமாக இருக்கும், ஆனால் பல கோடிஸ்வரர்கள் அதை முக்கியமற்றதாகக் கருதுவர், மேலும் அதைப் பற்றி சிந்திக்க மாட்டார்கள். பக்தர்கள் கடவுள் மீது தெய்வீக அன்பில் பணக்காரர்களாக உள்ளனர், மேலும் அவர்கள் அதை சொந்தமாக்கிக் கொள்தற்கு தகுதியான உயர்ந்த பொக்கிஷமாக கருதுகின்றனர். இறைவனின் அன்பான சேவைக்கும் அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். எனவே, அவர்கள் உலக ஆதாயங்களைப் பற்றி கவலைப்படுவதில்லை.

புறமும் அகமும் தூய்மையானவை: அவர்கள் மனம் எப்போதும் தூய்மையான இறைவனில் ஆழ்ந்திருப்பதால், பக்தர்கள் காமம், கோபம், பேராசை, பொறாமை, அகங்காரம் மற்றும் பிற எதிர்மறைகளின் குறைபாடுகளிலிருந்து உள் தூய்மை அடைகிறார்கள். அவர்கள் தங்கள் உடல் மற்றும் சுற்றுச்சூழலையும் தூய்மையாக வைத்து இருக்கிறார்கள். எனவே, 'கடவுளுக்கு அடுத்தது தூய்மை' என்ற பழைய பழமொழிக்கு ஏற்ப, அவர்கள் வெளிப்புறத்திலும் மிகவும் தூய்மையானவர்கள்.

திறமையானவர்கள்: பக்தர்கள் தங்கள் எல்லாப் பணிகளையும் கடவுளுக்குச் சேவை செய்வதற்கான வாய்ப்பாகக் கருதுகிறார்கள். அதன் விளைவாக, அவர்கள் தங்கள் வேலையை மிகுந்த கவனத்துடனும் செய்கிறார்கள். இது இயல்பாகவே அவர்களைத் திறமையானவர்களாக மாற்றுகிறது.

கவலையற்று இருப்பது: கடவுள் எப்போதும் தங்களைக் காப்பாற்றுகிறார் என்ற நம்பிக்கை இருந்தால், அவர்கள் கவலையில்லாமல் ஆகிவிடுகிறார்கள்.

தொந்தரவில்லாமல் இருப்பது: பக்தர்கள் கடவுளின் விருப்பத்திற்குச் சரணடைவதால், அவர்கள் எல்லா முயற்சிகளிலும் தங்களால் முடிந்த அனைத்தையும் செய்து, முடிவுகளை பரமாத்மாவின் கைகளில் விட்டுவிடுகிறார்கள். இவ்வாறு, விளைவு என்னவாக இருந்தாலும், அவர்கள் தங்கள் விருப்பத்தை தெய்வீக சித்தத்திற்கு அடிபணியச் செய்து, குழப்பம் அற்று இருக்கிறார்கள்

அனைத்து முயற்சிகளிலும் சுயநலம் இல்லாதது: அவர்களின் சேவை மனப்பான்மை அவர்களை அற்ப சுயநலத்திற்கு மேல் உயரச் செய்கிறது.

Bookmark this Verse

Sign in to save your favorite verses.

Add a Note
Swami Mukundananda
12. பக்தி யோகம்
1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20

Quick Jump to Any Verse

Navigate directly to the wisdom you seek

Book with feather

Stay Connected!

Verse of the Day

Start your day with the timeless inspiring wisdom from the Holy Bhagavad Gita delivered straight to your email!

Thanks for subscribing to "Bhagavad Gita - Verse of the Day"!