தா3த1வ்யமிதி1 யத்3தா3னம் தீ3யதே1னுப1கா1ரிணே |
தே3ஶே கா1லே ச1 பா1த்1ரே ச1 த1த்3தா3னம் ஸாத்1த்1விக1ம் ஸ்ம்ருத1ம் ||20||
தாதவ்யம்----தானம் செய்யத் தகுந்தது; இதி--—இவ்வாறு; யத்--—எது; தானம்--—கொடை(அறம்); தீயதே--—கொடுக்கப்படுகிறது; அநுபகாரிணே—--பிரதிபலனாக எதையும் கருத்தில் கொள்ளாமல்; தேஶே--—சரியான இடத்தில்; காலே—--சரியான நேரத்தில்; ச--—மற்றும்; பாத்ரே--—தகுதியான நபருக்கு; ச---மற்றும்; தத்—--அது; தானம்-—கொடை; ஸாத்விகம்—--நன்மையின் முறையில்; ஸ்மிருதம்--—என்று கூறப்பட்டுள்ளது.
BG 17.20: ஒரு தகுதியான நபருக்கு சரியான நேரத்தில், சரியான இடத்தில், பிரதிபலனாக எதையும் கருத்தில் கொள்ளாமல், மற்றும் கொடுப்பது சரியானது என்பதால் வழங்கப்படும் கொடை நன்மையின் முறையில் வகைப்படுத்தப்படுகிறது.
Start your day with a nugget of timeless inspiring wisdom from the Holy Bhagavad Gita delivered straight to your email!
தானம் அல்லது கொடையின் மூன்று பிரிவுகள் இப்போது விவரிக்கப்படுகின்றன. ஒருவரின் ஆற்றலுக்கு ஏற்ப கொடுப்பது ஒரு கடமையாகும். ப4விஷ்ய பு1ராணம் கூறுகிறது: தா3னமேக1ம் க1லௌ யுகே3 'கலி யுகத்தில், தானம் செய்வதே தூய்மைப் படுத்துவதற்கான வழிமுறையாகும்.' ராமாயணமும் இதை கூறுகிறது:
ப்1ரக3தசா11ரி ப1த3 த4ர்ம கே1 க1ளி மஹுன் ஏக ப்ரதா4ன
ஜேன கே1ன பி3தி4 தீ3ன்ஹே தா3ன க1ரை க1ல்யாண
‘தர்மத்திற்கு நான்கு அடிப்படைக் கோட்பாடுகள் உள்ளன, அவற்றில் ஒன்று கலி யுகத்தில் மிக முக்கியமானது—முடிந்த விதத்தில் தர்மம் செய்வது. தான தர்மம் செய்வது பல நன்மைகளை அளிக்கிறது. இது கொடுப்பவரின் பொருள்கள் மீதான பற்றுதலை குறைக்கிறது; இது சேவை மனப்பான்மையை வளர்த்து இதயத்தை விரிவுபடுத்துகிறது மற்றும் மற்றவர்களிடம் இரக்க உணர்வை வளர்க்கிறது. அதனால்தான் பெரும்பாலான மத மரபுகள் ஒருவரின் சம்பாத்தியத்தில் பத்தில் ஒரு பங்கை தர்மத்தில் கொடுக்க வேண்டும் என்ற கட்டளையைப் பின்பற்றுகின்றன. ஸ்க1ந்த3 பு1ராணம் கூறுகிறது:
ந்யாயோபா1ர்ஜித1 வித்1த1ஸ்ய த3ஶமான் ஶேந தீ4 மத1ஹ
க1ர்த1வ்யோ விநியோக1ஶ்ச1 ஈஶ்வரப்1ரீத்யர்த்1த2மேவ ச1
‘நீங்கள் சம்பாதித்த செல்வத்தில் பத்தில் ஒரு பங்கை உங்கள் கடமையாக தர்மம் செய்யுங்கள். உங்கள் தர்மத்தை கடவுளின் மகிழ்ச்சிக்காக அர்ப்பணிக்கவும்.’ இந்த வசனத்தில் ஸ்ரீ கிருஷ்ணர் குறிப்பிட்டுள்ள கூறுபாடுகளின்படி, தர்மம் சரியானது அல்லது முறையற்றது, உயர்ந்தது அல்லது தாழ்ந்தது என வகைப்படுத்தப்படுகிறது. மனமொத்து இதயத்திலிருந்து இலவசமாக பெற்றுக் கொள்ள தகுதி உள்ளவர்களுக்கு, சரியான நேரத்தில் மற்றும் பொருத்தமான இடத்தில் வழங்கப்படும், கொடை/தானம், நன்மையின் முறையில் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.