ப1ஞ்சை1தா1நி மஹாபா3ஹோ கா1ரணானி நி1போத4 மே |
ஸாங்க்2யே க்1ருதா1ன்தே1 ப்1ரோக்1தா1னி ஸித்3த4யே ஸர்வக1ர்மணாம் ||13||
பஞ்ச--—ஐந்து; ஏதானி--—இவை; மஹா—பாஹோ---—வலிமையான கைகளைக்கொண்டவர்; காரணானி--—காரணங்கள்; நிபோத--—கேள்; மே--—என்னிடமிருந்து; ஸாங்க்யே---ஸாங்க்யாவின்; கிருத--அந்தே—-கர்மங்களின் வினைகளை நிறுத்துவது; ப்ரோக்தானி--—விளக்குகிறது;ஸித்தயே—--நிறைவேற்றுவதற்கு; ஸர்வ--—அனைத்து; கர்மணாம்--—செயல்ககளின்.
BG 18.13: ஓ அர்ஜுனா, செயல்ககளின் வினைகளை எவ்வாறு நிறுத்துவது என்பதை விளக்கும் ஸாங்கியக் கோட்பாட்டில் அனைத்து செயல்களையும் நிறைவேற்றுவதற்கு ஐந்து காரணிகளைப் பற்றி என்னிடமிருந்து கற்றுக்கொள்.
ப1ஞ்சை1தா1நி மஹாபா3ஹோ கா1ரணானி நி1போத4 மே |
ஸாங்க்2யே க்1ருதா1ன்தே1 ப்1ரோக்1தா1னி ஸித்3த4யே ஸர்வக1ர்மணாம் ||13||
ஓ அர்ஜுனா, செயல்ககளின் வினைகளை எவ்வாறு நிறுத்துவது என்பதை விளக்கும் ஸாங்கியக் கோட்பாட்டில் அனைத்து செயல்களையும் நிறைவேற்றுவதற்கு ஐந்து காரணிகளைப் பற்றி என்னிடமிருந்து கற்றுக்கொள்.
Sign in to save your favorite verses.
Sign In
Navigate directly to the wisdom you seek
Start your day with the timeless inspiring wisdom from the Holy Bhagavad Gita delivered straight to your email!
முயற்சியின் பலன் மீது பற்று இல்லாமல் வேலையைச் செய்ய முடியும் என்பதை அறிந்தவுடன், ஒரு இயல்பான கேள்வி எழுகிறது. ‘செயல் என்றால் என்ன?’ இந்த அறிவு செயல்களின் முடிவுகளிலிருந்து பற்றின்மையை வளர்க்க உதவும் என்பதால், ஸ்ரீ கிருஷ்ணர் இந்த கேள்விக்கான பதிலை எடுத்துரைக்க போவதாக கூறுகிறார். அதே நேரத்தில், அவர் செயல்களின் ஐந்து உறுப்புகளின் விளக்கம் ஒரு புதிய பகுப்பாய்வு அல்லாமல் முன்பு பகுப்பாய்வு பகுத்தறிவு அமைப்பை அடிப்படையாகக் ஸாங்கிய தத்துவத்திலும் விவரிக்கப்பட்டதை தெளிவுபடுத்துகிறார். ஸாங்கியம் என்பது மகரிஷி கபிலரால் நிறுவப்பட்ட தத்துவ அமைப்பைக் குறிக்கிறது, கடவுளின் அவதாரமான கபிலர், கர்தம் முனிவர் மற்றும் தேவஹூதியின் குழந்தையாக பூமியில் அவதரித்தார். அவர் முன்வைத்த ஸாங்கிய தத்துவம் பகுப்பாய்வு பகுத்தறிவு அமைப்பை அடிப்படையாகக் கொண்டது. உடலிலும் உலகிலும் உள்ள தனிமங்களின் பகுப்பாய்வின் மூலம் இது தன்னைப் பற்றிய அறிவை வளர்த்துக் கொள்கிறது. இது செயலின் கூறுகளின் பகுப்பாய்வு மூலம் காரணம் மற்றும் விளைவின் தன்மையைக் கண்டறிகிறது.