ஸஞ்ஜய உவாச1 |
இத்1யஹம் வாஸுதே3வஸ்ய பா1ர்த2ஸ்ய ச1 மஹாத்1மன: |
ஸம்வாத3மிமமஶ்ரௌஷமத்3பு4தம் ரோமஹர்ஷணம் ||74||
ஸஞ்ஜய உவாச--—ஸஞ்ஜயன் சொன்னான்; இதி--—இவ்வாறு; அஹம்--—நான்; வாஸுதேவஸ்ய--—ஸ்ரீ கிருஷ்ணரின்; பார்த்தஸ்ய—--அர்ஜுனன்; ச—--மற்றும்; மஹா-ஆத்மனஹ- உன்னத இதயம் கொண்ட ஆன்மா; ஸம்வாதம்----உரையாடலை; இமம்---—இது; அஶ்ரௌஷம்--—கேட்டிருக்கிறேன் அத்பூதம்---—அற்புதமான; ரோம-ஹர்ஷணம்----உடல் சிலிர்த்து மயிர்க்கூச்சல் அடைய வைக்கும்.
BG 18.74: ஸஞ்ஜயன் கூறினார்: எனவே, வஸுதேவரின் மகனான ஸ்ரீ கிருஷ்ணருக்கும், ப்ருதையின் உன்னதமான மகனான அர்ஜுனுக்கும் இடையேயான இந்த அற்புதமான உரையாடலை நான் கேட்டிருக்கிறேன். பரவசமான இந்த அறிக்கை என்னை உடல் சிலிர்த்து மயிர்க்கூச்சல் அடைய வைக்கிறது
Start your day with a nugget of timeless inspiring wisdom from the Holy Bhagavad Gita delivered straight to your email!
இந்த வழியில், ஸஞ்ஜயன் பகவத் கீதையின் தெய்வீக உரையின் முடிவிற்கு வருகிறார். அவர் ஸ்ரீ கிருஷ்ணரின் அறிவுரைகள் மற்றும் அறிவுறுத்தல்களுக்கு செவிசாய்த்ததால், அர்ஜுனனை மகாத்மா (சிறந்த ஆன்மா) என்று குறிப்பிடுகிறார். ஸஞ்ஜயன் இப்போது அவர்களின் தெய்வீக உரையாடலைக் கேட்டு திகைத்தும் வியப்பாகவும் இருப்பதாகக் கூறுகிறார். மயிர்க்கூச்சல் உருவது ஆழ்ந்த பக்தி உணர்வின் அடையாளங்களில் ஒன்றாகும். ப4க்1தி 1 ரஸாம் ம்ருத1 ஸிந்து4 கூறுகிறது:
ஸ்த1ம்ப4 ஸ்வேதோ3 ’தா2 ரோமாஞ்ச2ஹ ஸ்வரபே4தோ3 ’த வேபது1ஹு
வைவர்ண்யமஶ்ரு ப்1ரலய இத்1யஷ்டௌ ஸாத்1விகா1ஹா ஸ்ம்ருத1ஹா
பக்தி பரவசத்தின் எட்டு அறிகுறிகள்: அசைவற்று இருப்பது, மயிர்க்கூச்சல் உருதல், குரல் திணறல், நடுக்கம், முகத்தின் நிறம் சாம்பலாதல், கண்ணீர் சிந்துதல் மற்றும் மயக்கம். அத்தகைய பக்தி உணர்வுகளை அனுபவித்துவரும் மயிர்க்கூச்சல் உற்ற ஸஞ்ஜயனின் ரோமம் தெய்வீக மகிழ்ச்சியால் சிலிர்க்கிறது.
தொலைதூரப் போர்க்களத்தில் நடந்த இந்த உரையாடலை ஸஞ்ஜயனால் எப்படிக் கேட்க முடிந்தது என்று ஒருவர் கேட்கலாம். இதை அடுத்த வசனத்தில் வெளிப்படுத்துகிறார்.