ந த்1வேவாஹம் ஜாது1 நாஸம் ந த்1வம் நேமே ஜனாதி4பா1: |
ந சை1வ ந ப4விஷ்யாம: ஸர்வே வயமத1: ப1ரம் ||12||
ந----ஒருபோதும் இல்லை; து----எனினும் ஏவ---நிச்சயமாக; அஹம்—--நானும்; ஜாது—--எப்பொழுதும்; ந--- ஒருபோதும் இல்லை ஆஸம்—--இருக்கிறது; ந----இல்லை; த்வம்-—--நீ; ந----இல்லை; இமே—--இவை ஜனாதிபாஹா----மன்னர்கள்; ந----இல்லை; ச---மேலும் ஏவ-—-உண்மையில்; ந---பவிஷ்யாமஹ-—-இல்லாமல் இருக்க மாட்டோம்; ஸர்வே வயம்-—-நாம் அனைவரும்; அதஹ-—-இப்போழுதும்; பரம்-—- எப்பொழுதும்
BG 2.12: நான் இல்லாத காலம் இருந்ததில்லை, நீயும் இந்த அனைத்து மன்னர்களும் இல்லாத காலம் இருந்ததில்லை; எதிர்காலத்திலும் நம்மில் எவரும் இல்லாமல் இருக்க மாட்டோம்.
ந த்1வேவாஹம் ஜாது1 நாஸம் ந த்1வம் நேமே ஜனாதி4பா1: |
ந சை1வ ந ப4விஷ்யாம: ஸர்வே வயமத1: ப1ரம் ||12||
நான் இல்லாத காலம் இருந்ததில்லை, நீயும் இந்த அனைத்து மன்னர்களும் இல்லாத காலம் இருந்ததில்லை; எதிர்காலத்திலும் நம்மில் எவரும் இல்லாமல் இருக்க மாட்டோம்.
Sign in to save your favorite verses.
Sign In
Navigate directly to the wisdom you seek
Start your day with the timeless inspiring wisdom from the Holy Bhagavad Gita delivered straight to your email!
டெல்பியில் உள்ள அப்பல்லோ கோயிலின் வாயில்களில் க்னோதி சியூடன் அல்லது ‘உன்னை அறிந்துகொள்’ என்ற வார்த்தைகள் பொறிக்கப்பட்டுள்ளன. ஏதென்ஸின் புத்திசாலித்தனமான வயதான சாக்ரடீஸ் கூட, சுயத்தின் இயல்பை விசாரிக்க மக்களை ஊக்குவிப்பதில் விருப்பம் கொண்டிருந்தார். ஒரு உள்ளூர் புராணக்கதை படி:
ஒருமுறை, சாக்ரடீஸ் தெருவில் நடந்து கொண்டிருந்தபோது, ஆழ்ந்த தத்துவ சிந்தனையில் மூழ்கி, தற்செயலாக, ஒருவரின் மீது மோதினார்.
எரிச்சலுற்ற அந்த மனிதன், ‘நீங்கள் எங்கே இருக்கிறீர்கள் என்று பார்க்க முடியவில்லையா? நீங்கள் யார்?’ என்று கேட்டான்.
சாக்ரடீஸ் வேடிக்கையாக பதிலளித்தார், ‘என் அன்பான நண்பரே. கடந்த 40 ஆண்டுகளாக அந்த கேள்வியை நான் யோசித்து வருகிறேன். நான் யார் என்று உங்களுக்கு எப்பொழுதாவது தெரிந்தால் தயவு செய்து எனக்கு தெரியப்படுத்துங்கள்.’
வேத பாரம்பரியத்தில், தெய்வீக அறிவு வழங்கப்படும் போதெல்லாம், அது பொதுவாக சுய அறிவுடன் தொடங்குகிறது. பகவத் கீதையில் சாக்ரடீசை பிரமிக்க வைத்து இருக்கக்கூடிய ஒரு தகவலுடன் ஸ்ரீ கிருஷ்ணரும் அதே அணுகுமுறையைப் பின்பற்றுகிறார். ஸ்ரீ கிருஷ்ணர், நாம் ‘சுயம்’ என்று அழைக்கும் உருபொருள் உண்மையில் ஆத்மா, ஜட உடல் அல்ல, கடவுள் தானே நித்தியமாக இருப்பது போல் ஆத்மாவும் நித்தியமானது என்று விளக்கி ஆரம்பிக்கிறார். ஶ்வேதா1ஶ்வத1ர உப1நிஷத3ம் கூறுகிறது:
ஞானௌ த்3வாவஜா வீஶனீஶா
வஜா ஹ்யேகா1 போ4க்1த்1ரி போ4க்3யார்த2யுக்1தா1
அனந்த1ஶ்சா1த்1மா விஸ்வரூபோ ஹ்யக1ர்தா1த்1ரயம்
யதா3 விந்த3தே1 ப்3ரஹ்மமேத1த்1 (1.9)
ஸ்ருஷ்டி என்பது கடவுள், ஆன்மா, மாயை ஆகிய மூன்றின் கலவை என்றும், மூன்றுமே நித்தியமானவை என்றும் மேலே உள்ள வசனம் கூறுகிறது. ஆன்மா நித்தியமானது என்று நாம் நம்பினால், அது தர்க்கரீதியாக இறப்பிற்குப் பிறகும் ஜட ஸரீரத்திற்கு வாழ்வு இருக்கிறது என்று கூறுகிறது. இதைப் பற்றி ஸ்ரீ கிருஷ்ணர் அடுத்த வசனத்தில் பேசுகிறார்.