அவ்யக்1தோ1யமசி1ன்த்1யோயமவிகா1ர்யோயமுச்1யதே1 |
த1ஸ்மாதே3வம் விதி3த்1வைனம் நானுஶோசி1து1மர்ஹஸி ||25||
அவ்யக்தஹ---வெளிப்படுத்தப்படாத; அயம்—--இந்த ஆன்மா; அசின்த்யஹ—--நினைக்க முடியாதது; அயம்—--இந்த ஆன்மா; அவிகார்யஹ—--மாற்றமுடியாதது; அயம்—--இந்தஆன்மா; உச்யதே—--என்று கூறப்படுகிறது; தஸ்மாத்—--எனவே; ஏவம்—--இவ்வாறு; தித்வா—-அறிந்து; ஏனம்—---இந்த ஆன்மா; அனுஶோசிதும்—--வருத்தப்படுவது; \
BG 2.25: ஆன்மா கட்புலனாகாதது, அறிவுக்கு எட்டாதது, மற்றும் மாற்ற முடியாதது என்று பேசப்படுகிறது. இதை உணர்ந்த, நீ உடலை நினைத்து வருத்தப்படக்கூடாது.
அவ்யக்1தோ1யமசி1ன்த்1யோயமவிகா1ர்யோயமுச்1யதே1 |
த1ஸ்மாதே3வம் விதி3த்1வைனம் நானுஶோசி1து1மர்ஹஸி ||25||
ஆன்மா கட்புலனாகாதது, அறிவுக்கு எட்டாதது, மற்றும் மாற்ற முடியாதது என்று பேசப்படுகிறது. இதை உணர்ந்த, நீ உடலை நினைத்து வருத்தப்படக்கூடாது.
Sign in to save your favorite verses.
Sign In
Navigate directly to the wisdom you seek
Start your day with the timeless inspiring wisdom from the Holy Bhagavad Gita delivered straight to your email!
பொருள் ஆற்றலால் ஆன நமது கண்கள் ஜடப் பொருட்களை மட்டுமே பார்க்க முடியும். ஆன்மா, தெய்வீகமாகவும், பொருள் ஆற்றலுக்கு அப்பாற்பட்டதாகவும் இருப்பதால், நம் கண்களுக்குத் தெரியவில்லை. அதன் இருப்பை அறிய விஞ்ஞானிகள் சோதனைகளை மேற்கொண்டுள்ளனர். இறக்கும் தருவாயில் இருக்கும் ஒருவரை கண்ணாடிப் பெட்டியில் வைத்து, அந்த ஆன்மா வெளியேறினால் கண்ணாடி வெடிக்குமா எனப் பார்க்க, அந்த பெட்டிக்கு சீல் வைத்தனர். கண்ணாடிப் பெட்டியில் விரிசல் ஏற்படாமல் ஆத்மா உடலை விட்டு வெளியேறியது. நுட்பமாக இருப்பதால், ஆன்மாவின் இயக்கத்திற்கு உடல் இடம் தேவையில்லை.
பொருள் ஆற்றலை விட நுட்பமாக இருப்பதால், ஆன்மா நமது அறிவுக்கு எட்டாதது. க1டோ2ப1நிஷத3ம் கூறுகிறது:
இந்த்3ரியேப்4யஹ ப1ரா ஹ்யர்த்2தா2 அர்த்2தே2ப்4யஶ்ச1 ப1ரம் மனஹ
மனஸஸ்து1 ப1ரா பு3த்4தி3ர்பு3த்4தே3ராத்1மா மஹான் ப1ரஹ (1.3.10)
'புலன்களுக்கு அப்பாறபட்டவை புலன்களின் பொருள்கள்; புலன்களின் பொருள்களை விட நுட்பமானது மனம். மனதைக் கடந்தது புத்தி; மற்றும் புத்தியை விட நுட்பமானது ஆன்மா.' ஜட புத்தியால் ஜடக் கருத்துக்களை மட்டுமே புரிந்து கொள்ள முடியும், ஆனால் அதன் சிந்தனையின் சக்தியால் தெய்வீக ஆன்மாவை ஒருபோதும் அடைய முடியாது. இதன் விளைவாக, சுய அறிவுக்கு வெளிப்புற ஆதாரங்களான வேதம் மற்றும் குரு தேவைப்படுகின்றன.