வ்யவஸாயாத்1மிகா1 பு3த்3தி4ரேகே1ஹ கு1ருநந்த3ன |
ப3ஹுஶாகா2 ஹ்யனன்தா1ஶ்ச1 புத்3த4யோவ்யவஸாயினாம் ||41||
வ்யவஸாய-ஆத்மிகா—--உறுதியானது; புத்திஹி-—புத்தி; ஏக— -ஒரு; இஹ— -இந்தப் பாதையில்; குருநந்தன—-- ஓ, குரு வம்சத்தில் தோன்றியவனே; பஹு-ஶாகாஹா—--பல கிளைகளைக் கொண்டது.; ஹி---உண்மையில்; அனந்தாஹா—--முடிவற்றது;ச—-மற்றும்; புத்தயஹ---புத்தி;அவ்யவஸாயினாம்உறுதியற்றவர்களின்
BG 2.41: ஓ, குரு வம்சத்தில் தோன்றியவனே, இந்தப் பாதையில் செல்பவர்களின் புத்தி உறுதியானது, அவர்களின் நோக்கம் ஒன்றுபட்டது. ஆனால் உறுதியற்றவர்களின் புத்தி பல கிளைகளைக் கொண்டது.
வ்யவஸாயாத்1மிகா1 பு3த்3தி4ரேகே1ஹ கு1ருநந்த3ன |
ப3ஹுஶாகா2 ஹ்யனன்தா1ஶ்ச1 புத்3த4யோவ்யவஸாயினாம் ||41||
ஓ, குரு வம்சத்தில் தோன்றியவனே, இந்தப் பாதையில் செல்பவர்களின் புத்தி உறுதியானது, அவர்களின் நோக்கம் ஒன்றுபட்டது. ஆனால் உறுதியற்றவர்களின் புத்தி பல கிளைகளைக் கொண்டது.
Sign in to save your favorite verses.
Sign In
Navigate directly to the wisdom you seek
Start your day with the timeless inspiring wisdom from the Holy Bhagavad Gita delivered straight to your email!
பற்றுதல் என்பது மனதின் செயல்பாடு. அதன் வெளிப்பாடு என்னவென்றால், மனம் அதன் பற்றுதலின் பொருளை நோக்கி மீண்டும் மீண்டும் ஓடுகிறது, அது நபர்கள், புலப் பொருட்கள், கௌரவம், உடல் ஆறுதல், சூழ்நிலைகள் மற்றும் பலவாக இருக்கலாம். எனவே, ஒரு நபர் அல்லது ஒரு பொருளைப் பற்றிய எண்ணங்கள் மீண்டும் மீண்டும் மனதில் தோன்றினால், அது மனம் அதனுடன் இணைந்திருப்பதற்கான அறிகுறியாகும். இருப்பினும், மனமே பற்றுதல் ஏற்படுவதற்கு காரணம் என்றால், ஸ்ரீ கிருஷ்ணர் ஏன் அறிவாற்றலை பற்றுதல் என்ற தலைப்பில் கொண்டு வருகிறார்? பற்றுதலை நீக்குவதில் புத்தியின் ஏதேனும் பங்கு உள்ளதா?
நம் உடலுக்குள் சூட்சுமமான மனசாட்சி உள்ளது, இது பேச்சுவழக்கில் இதயம் என்று குறிப்பிடப்படுகிறது. இது மனம், புத்தி, மற்றும் அஹங்காரம்- தன்முனைப்பு ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இந்த நுட்பமான இயந்திரத்தில், புத்தி மனதை விட உயர்ந்தது. மனம் ஆசைகளை உருவாக்கி, புத்தியால் தீர்மானிக்கப்பட்ட பாசத்தின் பொருளுடன் இணைந்திருக்கும் போது அது முடிவுகளை எடுக்கிறது. உதாரணமாக, பணமே மகிழ்ச்சிக்கு ஆதாரம் என்று புத்தி முடிவு செய்தால், மனம் செல்வத்திற்காக ஏங்குகிறது. வாழ்க்கையில் கௌரவம் தான் முக்கியம் என்று புத்தி முடிவு செய்தால், சமூகத்தில் நற்பெயர் மற்றும் புகழுக்கு மனம் ஏங்குகிறது. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், புத்தியின் அறிவுக்கு ஏற்ப மனம் ஆசைகளை வளர்க்கிறது.
நாள் முழுவதும், மனிதர்களாகிய நாம் புத்தியால் நம் மனதைக் கட்டுப்படுத்துகிறோம். வீட்டில் உட்கார்ந்திருக்கும் பொழுது மனதிற்கு ஆறுதல் அளிக்கும் சாதாரண தோரணைகளை நாம் பின்பற்றுகிறோம். அலுவலகத்தின் சம்பிரதாயத்தை மனம் ரசிப்பது அல்ல, இருந்தும், அலுவலகத்தில் அமர்ந்து இருக்கும் பொழுது முறையான தோரணையை நாம் பின்பற்றுகிறோம்,. ஏனெனில், மனதிற்கு அதன் விரும்பும் வழி கொடுக்கப்பட்டால் அது வீட்டின் சாதாரண தன்மையைத் தழுவும் இருப்பினும், அலுவலகத்தில் முறையான நடத்தை அவசியம் என்று புத்தி தீர்மானிக்கிறது. எனவே, புத்தி மனதைக் கட்டுப்படுத்துகிறது, மேலும், மக்கள் மனதின் இயல்புக்கு எதிராக பணியிடத்தின் சீரொழுங்கை பின்பற்றி, நாள் முழுவதும் முறையாக அமர்ந்திருக்கிறார்கள். அதுபோலவே, அலுவலக வேலைகளைச் செய்வதில் மனம் மகிழ்வதில்லை - மனதிற்கு அதன் விரும்பும் வழி கொடுக்கப்பட்டால் அது வீட்டில் அமர்ந்து தொலைக்காட்சியைப் பார்ப்பதையே விரும்புகிறது. ஆனால், வாழ்க்கையில் சம்பாதிக்க அலுவலகத்தில் வேலை செய்வது அவசியம் .என்று புத்தி விதி விதிக்கிறது. எனவே, புத்தி மீண்டும் மனதின் இயல்பான போக்கை கட்டுப்படுத்துகிறது; மேலும் மக்கள் ஒரு நாளைக்கு எட்டு மணிநேரம் அல்லது அதற்கு மேல் வேலை செய்கிறார்கள்.
மேலே உள்ள எடுத்துக்காட்டுகள், மனிதர்களாகிய நமது அறிவுக்கு மனதைக் கட்டுப்படுத்தும் திறன் உள்ளது என்பதை விளக்குகிறது. எனவே, நாம் புத்தியை சரியான அறிவுடன் வளர்த்து, மனதை சரியான திசையில் வழிநடத்த அதைப் பயன்படுத்த வேண்டும். புத்3தி4 யோக3ம் என்பது, எல்லா வேலைகளும் இறைவனின் மகிழ்ச்சிக்காகவே செய்யப்படுகின்றன என்ற புத்தியின் உறுதியான நம்பிக்கையை வளர்த்து, செயல்களின் பலன்களிலிருந்து மனதைத் துண்டிக்கும் கலையாகும். அத்தகைய உறுதியான புத்திசாலி ஒருவர் இலக்கின் மீது ஒருமுக சிந்தனையுடன் கவனம் செலுத்தி, வில்லில் இருந்து விடுபட்ட அம்பு போல் பாதையைக் கடந்து செல்கிறார். இந்த உறுதியானது ஆன்மீகப் பயிற்சியின் உயர் நிலைகளில் மிகவும் வலுவானதாகிறது. ஆன்மீகப் பயிற்சியாளர், ‘என்னை ஆன்மீகப் பாதையில் செல்வதை எதுவும் தடுக்க முடியாது, என் பாதையில் கோடிக்கணக்கான தடைகள் இருந்தாலும், உலகம் முழுவதும் என்னைக் கண்டித்தாலும், என் உயிரைக் கொடுக்க நேரிட்டாலும், நான் எனது ஆன்மீகப் பயிற்சியைக் கைவிடமாட்டேன்’ என்று அவன் அல்லது அவள் நினைக்கிறார். ஆனால் யாருடைய புத்தி பல கிளைகளைக் கொண்டிருக்கிறதோ அவர்கள் மனம் பல்வேறு திசைகளில் ஓடுவதைக் காண்கிறார்கள். கடவுளை நோக்கிச் செல்லும் பாதையில் செல்லத் தேவையான மனதை அவர்களால் வளர்க்க முடிவதில்லை.