Contact: +91 844 894 1008
bgwebsite_logo
Bhagavad Gita
The Song of God

Bhagavad Gita: Chapter 2, Verse 44

போ4கை3ஶ்வர்யப்1ரஸக்1தா1னாம் த1யாப1ஹ்ருத1சே11ஸாம் |

வ்யவஸாயாத்1மிகா1 பு3த்3தி4: ஸமாதௌ4 ந விதீ4யதே1 ||44||

போக---—மனநிறைவு; ஐஶ்வர்ய—--ஆடம்பரம் ப்ரஸக்தானாம்----பற்றுதலால் சூழப்பட்டவர்களின்; தயா---அவற்றால்; அபஹ்ருத-சேதஸாம்—--குழம்பிய புத்தியுடையவர்களுக்கு; வ்யவஸாய-ஆத்மிகா—--உறுதியான; புத்திஹி—--புத்தி; ஸமாதௌ----நிறைவு;  ந—ஒருபோதும்; விதியதே—நிகழ்கிறது; (.ந விதீயதே—--ஏற்படுவதில்லை)

Translation

BG 2.44: உலக இன்பங்களில் ஆழமாகப் பற்றுக்கொண்ட அவர்களின் மனதாலும், இத்தகைய விஷயங்களால் குழம்பிப்போயிருக்கும் அவர்களுடைய புத்திகளாலும், கடவுளை நோக்கிய பாதையில் வெற்றி பெறுவதற்கான உறுதியான தீர்மானத்தை அவர்களால் கொண்டிருக்க முடியாது.

Commentary

புலனின்பத்தில் மனதைக் கொண்டவர்கள் போக் (திருப்தி) மற்றும் ஐஷ்வர்யம் (ஆடம்பரம்) ஆகியவற்றில் அக்கறை கொள்கிறார்கள். அவர்கள் தங்கள் வருமானத்தை அதிகரிப்பதில் தங்கள் புத்திசாலித்தனத்தை ஈடுபடுத்துகிறார்கள் மற்றும் அவர்களின் இன்பத்தை அதிகரிப்பதற்கு எவ்வாறு பொருள் உடைமைகளை அதிகரிப்பது என்று சிந்திக்கிறார்கள். இவ்வாறு திகைத்து நிற்கும் அவர்களால் இறைவனை அடையும் பாதையில் பயணிப்பதற்குத் தேவையான உறுதியான தீர்மானத்தை வளர்த்துக் கொள்ள முடிவதில்லை.

Bookmark this Verse

Sign in to save your favorite verses.

Add a Note
Swami Mukundananda
2. ஸாங்கிய யோகம்

Quick Jump to Any Verse

Navigate directly to the wisdom you seek

Book with feather

Stay Connected!

Verse of the Day

Start your day with the timeless inspiring wisdom from the Holy Bhagavad Gita delivered straight to your email!

Thanks for subscribing to "Bhagavad Gita - Verse of the Day"!