து3:கே2ஷ்வனுத்3விக்3னமனா: ஸுகே2ஷு விக3த1ஸ்ப்1ருஹ: |
வீத1ராக3ப4யக்1ரோத4: ஸ்தி2த1தீ4ர்முனிருச்1யதே1 ||56||
துஹ்கேஷு—--துன்பங்களுக்கு இடையே; அனுத்-விக்னமனாஹா----மனம் கலங்காதவர் இருக்கிறதோ; ஸுகேஷு—--இன்பத்தில்; விகத-ஸ்ப்ருஹஹ—--ஏங்காமல்;வீ த---விடுபட்ட; ராக—--பற்றுதல்; பய—----பயம்; க்ரோதஹ—--- கோபம்; ஸ்தித-தீஹி—--அறிவொளி பெற்றவர்; முனிஹி—--முனிவர்; உச்யதே—--என்று அழைக்கப்படுகிறார்.
BG 2.56: எவருடைய மனம் துன்பங்களுக்கு மத்தியில் கலக்கமில்லாமல் இருக்கிறதோ, இன்பத்திற்காக ஏங்காமல், பற்று, பயம், மற்றும் கோபம் அற்று இருக்கிறதோ அவர் நிலையான ஞானமுள்ள ஞானி என்று அழைக்கப்படுகிறார்.
து3:கே2ஷ்வனுத்3விக்3னமனா: ஸுகே2ஷு விக3த1ஸ்ப்1ருஹ: |
வீத1ராக3ப4யக்1ரோத4: ஸ்தி2த1தீ4ர்முனிருச்1யதே1 ||56||
எவருடைய மனம் துன்பங்களுக்கு மத்தியில் கலக்கமில்லாமல் இருக்கிறதோ, இன்பத்திற்காக ஏங்காமல், பற்று, பயம், மற்றும் கோபம் அற்று இருக்கிறதோ அவர் நிலையான ஞானமுள்ள ஞானி என்று அழைக்கப்படுகிறார்.
Sign in to save your favorite verses.
Sign In
Navigate directly to the wisdom you seek
Start your day with the timeless inspiring wisdom from the Holy Bhagavad Gita delivered straight to your email!
இந்த வசனத்தில், ஸ்ரீகிருஷ்ணர் நிலையான ஞான முனிவர்களை இவ்வாறு விவரிக்கிறார்: 1) வீத ராக - அவர்கள் இன்பத்திற்கான ஏக்கத்தை கைவிடுகிறார்கள், 2) வீத பய - அவர்கள் பயத்திலிருந்து விடுபடுகிறார்கள், 3) வீத க்ரோத - அவர்கள் கோபம் அற்றவர்கள்.
அறிவொளி பெற்ற நபர், காமம், கோபம், பேராசை, பொறாமை, மற்றும் பிற எதிர்மறை உணர்ச்சிகளின் பொருள் பலவீனங்களை மனதில் வைக்க அனுமதிப்பதில்லை. அப்போதுதான் மனதைத் தாண்டிய தன்மையை நிலையாகச் சிந்தித்து, தெய்வீகத்தில் நிலைபெற முடியும். ஒருவன் மனதைத் துன்பங்களைக் கண்டு குமுறுவதற்கு அனுமதித்தால், தெய்வீகத்தைப் பற்றிய சிந்தனை நின்றுபோய், மனம் ஆழ்நிலை மட்டத்திலிருந்து கீழே இழுக்கப்படும். சித்திரவதை செயல்முறை அதே வழியில் செயல்படுகிறது. நிகழ்கால வலியை விட, கடந்த கால வலியின் நினைவுகளும், எதிர்கால வலி குறித்த அச்சங்களும்தான் மனதை வேதனைப்படுத்துகின்றன. ஆனால் மனம் இந்த இரண்டையும் கைவிட்டு, தற்போதைய உணர்வில் கவனம் செலுத்தும்போது, வலி வியக்கத்தக்க வகையில் தாங்கக்கூடிய அளவிற்கு சுருங்குகிறது. வரலாற்று ரீதியாக புத்த துறவிகள் படையெடுப்பு வெற்றியாளர்களிடமிருந்து சித்திரவதைகளை பொறுத்துக்கொள்ள இதேபோன்ற நுட்பத்தை பின்பற்றினர் என்பது அனைவரும் அறிந்ததே.
அதேபோல, மனம் வெளிப்புற இன்பங்களுக்கு ஏங்கினால், அது இன்பப் பொருட்களை நோக்கி ஓடி, மீண்டும் தெய்வீகச் சிந்தனையிலிருந்து திசை திருப்பப்படுகிறது. எனவே, நிலையான ஞானமுள்ள முனிவர் மனதை இன்பத்திற்காக ஏங்கவோ அல்லது துன்பங்களுக்காக புலம்பவோ அனுமதிக்காதவர். மேலும், அத்தகைய ஞானி மனதை பயம் மற்றும் கோபத்தின் தூண்டுதலுக்கு அடிபணிய அனுமதிப்பதில்லை. இவ்வாறு மனம் ஆழ்நிலையில் நிலைபெறுகிறது.