Contact: +91 844 894 1008
bgwebsite_logo
Bhagavad Gita
The Song of God

Bhagavad Gita: Chapter 4, Verse 15

ஏவம் ஞாத்1வா க்1ருத1ம் க1ர்ம பூ1ர்வைரபி1 முமுக்ஷுபி4: |

கு1ரு க1ர்மைவ த1ஸ்மாத்1த்1வம் பூ1ர்வை: பூ1ர்வத1ரம் க்1ருத1ம் ||15||

ஏவம்—--இவ்வாறு; ஞாத்வா—-அறிந்து; க்ருதம்—-செய்யப்பட்டன; கர்ம—-செயல்கள்; பூர்வைஹி—-பண்டைய காலத்தின்; அபி--—உண்மயில்; முமுக்ஷுபிஹி—--விடுதலையை நாடுபவர்களால்; குரு—செய்; கர்ம—-கடமை; ஏவ--—நிச்சயமாக; தஸ்மாத்—--எனவே; த்வம்--—நீ; பூர்வைஹி----அந்த பண்டைய முனிவர்ககளால்; பூர்வ-தரம்—--பண்டைய காலத்தில்; க்ருதம்--—செய்தவாறே

Translation

BG 4.15: இந்த உண்மையை அறிந்து, பழங்காலத்தில் விடுவிப்பு நாடுபவர்கள் கூட செயல்களைச் செய்தார்கள். எனவே, அந்த முனிவர்களின் அடிச்சுவடுகளைப் பின்பற்றி, நீங்களும் உங்கள் கடமையைச் செய்ய வேண்டும்.

Commentary

கடவுளை ஆர்வத்துடன் விரும்பும் முனிவர்கள் பொருள் ஆதாயத்திற்காக உழைக்கத் தூண்டப்படுவது இல்லை. பிறகு ஏன் இவ்வுலகில் செயல்களில் ஈடுபடுகிறார்கள்? காரணம், அவர்கள் கடவுளுக்குச் சேவை செய்ய விரும்புகிறார்கள், அவருடைய மகிழ்ச்சிக்காக உழைக்கத் தூண்டப்படுகிறார்கள். பக்தியின் உணர்வில் செய்யப்படும் பொதுநலப் பணிகளுக்கு அவர்கள் ஒருபோதும் கட்டுப்பட மாட்டார்கள் என்பதை முந்தைய வசனத்தின் அறிவு அவர்களுக்கு உறுதியளிக்கிறது. கடவுள் உணர்வை இழந்து, பொருளால் பிணைக்கப்பட்ட ஆன்மாக்களின் துன்பங்களைக் கண்டு இரக்கத்தால் அவர்களின் ஆன்மீக உயர்வுக்காக உழைக்கத் தூண்டப்படுகிறார்கள். புத்தர் ஒருமுறை கூறினார், 'அறிவு பெற்ற பிறகு, உங்களுக்கு இரண்டு வழிகள் உள்ளன - ஒன்று நீங்கள் ஒன்றும் செய்யாமல் இருப்பது, அல்லது மற்றவர்களுக்கு ஞானம் பெற உதவுவது.‘

இவ்வாறு, சுயநல நோக்கமே இல்லாத முனிவர்களும் கூட இறைவனின் மகிழ்ச்சிக்காக செயல்களில் ஈடுபடுகின்றனர். பக்தியுடன் வேலை செய்வது கடவுளின் அருளையும் ஈர்க்கிறது. ஸ்ரீ கிருஷ்ணர் அர்ஜுனிடமும் அவ்வாறே செய்யும்படி அறிவுறுத்துகிறார். ஒருவரை பிணைக்காத செயல்களைச் செய்ய அர்ஜுனனுக்கு அறிவுறுத்திய பிறகு, இறைவன் இப்போது செயலின் தத்துவத்தை விளக்கத் தொடங்குகிறார்.

Bookmark this Verse

Sign in to save your favorite verses.

Add a Note
Swami Mukundananda
4. ஞான கர்ம ஸன்யாஸ யோகம்

Quick Jump to Any Verse

Navigate directly to the wisdom you seek

Book with feather

Stay Connected!

Verse of the Day

Start your day with the timeless inspiring wisdom from the Holy Bhagavad Gita delivered straight to your email!

Thanks for subscribing to "Bhagavad Gita - Verse of the Day"!