ஶுசௌ தே3ஶே ப்1ரதி1ஷ்டா2ப்1ய ஸ்தி2ரமாஸனமாத்1மன: |
நாத்1யுச்1ச்2ரித1ம் நாதி1னீச1ம் சை1லாஜினகு1ஶோத்1த1ரம் ||11||
ஶுசௌ--—ஒரு தூய்மையான; தேஶே இடத்தில்; ப்ரதிஷ்டாப்ய— நிறுவி; ஸ்திரம்--—உறுதியான; ஆஸனம்--—இருக்கை; ஆத்மனஹ—--அவருடையது; ந-—இல்லை; அதி--—மிக; உச்சிரிதம்--—உயர்ந்த ந—-இல்லை; அதி--—மிக; நீசம்--—தாழ்ந்த; சைல—--துணி; அஜின—--ஒரு மான் தோல்; குஶ--—தர்ப்பைப்புல்; உத்தரம்----ஒன்றன் மேல் ஒன்று; (ந—உச்சிரிதம்—உயரமில்லாமலும்); (ந—நீசம்—தாழ்வாக இல்லாமலும்);
BG 6.11: யோகா பயிற்சி செய்ய, ஒருவர் புனிதமான இடத்தில் தர்ப்பைப்புல் புல், மான் தோல் மற்றும் ஒரு துணியை ஒன்றன் மேல் ஒன்றாக வைத்து ஆசனம் (இருக்கை) செய்ய வேண்டும். மிக உயரமாகவோ தாழ்வாகவோ இருக்கக்கூடாது.
ஶுசௌ தே3ஶே ப்1ரதி1ஷ்டா2ப்1ய ஸ்தி2ரமாஸனமாத்1மன: |
நாத்1யுச்1ச்2ரித1ம் நாதி1னீச1ம் சை1லாஜினகு1ஶோத்1த1ரம் ||11||
யோகா பயிற்சி செய்ய, ஒருவர் புனிதமான இடத்தில் தர்ப்பைப்புல் புல், மான் தோல் மற்றும் ஒரு துணியை ஒன்றன் மேல் ஒன்றாக வைத்து ஆசனம் (இருக்கை) செய்ய …
Sign in to save your favorite verses.
Sign InStart your day with the timeless inspiring wisdom from the Holy Bhagavad Gita delivered straight to your email!
இந்த வசனத்தில், ஸ்ரீ கிருஷ்ணர் ஆன்மீக பயிற்சிக்கான வெளிப்புற பழக்கத்தை விளக்குகிறார். ஶுசௌ1 தே3ஶே என்றால் தூய்மையான அல்லது புனிதமான இடம் என்று பொருள். ஆரம்ப கட்டத்தில், வெளிப்புற சூழல் மனதை பாதிக்கிறது. ஆன்மீகப் பயிற்சியின் பிற்கால கட்டங்களில், அழுக்கு மற்றும் அசுத்தமான இடங்களிலும் ஒருவர் அகத்தூய்மை அடைய முடியும். ஆனால் புதிதாக ஆன்மீகப் பயிற்சியை தொடங்குபவர்களுக்கு, சுத்தமான சுற்றுப்புறம் மனதை சுத்தமாக வைத்திருக்க உதவுகிறது. தர்ப்பைபுல்லினால் ஆன ஒரு பாய், நவீன யோகா பாய்களைப் போலவே தரையில் இருந்து வெப்பநிலை காப்பு வழங்குகிறது. தியானத்தில் ஆழ்ந்திருக்கும் போது அதன் மேல் உள்ள மான் தோல் பாம்புகள் மற்றும் தேள்கள் போன்ற தீங்கு விளைவிக்கும் பூச்சிகளை நெருங்கவிடாமல் தடுக்கிறது. ஆஸனம் அதிக உயரமாக இருந்தால், விழும் அபாயம் உள்ளது; ஆஸனம் மிகவும் தாழ்வாக இருந்தால், தரையில் பூச்சிகளிடமிருந்து தொந்தரவின் அபாயம் உள்ளது. இந்த வசனத்தில் கொடுக்கப்பட்டுள்ள வெளிப்புற இருக்கை தொடர்பான சில அறிவுரைகள் நவீன காலத்திற்கு ஒவ்வாததாக இருக்கலாம்; கடவுள் மீதான அன்பான பக்தியில் மனம் உள்வாங்கப்பட வேண்டும் என்பதே அறிவுறுத்தலின் மூலக் கருத்து.