Contact: +91 844 894 1008
bgwebsite_logo
Bhagavad Gita
The Song of God

Bhagavad Gita: Chapter 6, Verse 31

ஸர்வபூ41ஸ்தி21ம் யோ மாம் ப4ஜத்1யேக1த்1வமாஸ்தி21: |

ஸர்வதா2 வர்த1மானோ‌பி1 ஸ யோகீ3 மயி வர்த1தே1 ||31||

ஸர்வ-பூத-ஸ்திதம்--—எல்லா உயிர்களிலும் அமைந்துள்ளது;; யஹ--—யார்; மாம்--—என்னை; பஜதி--— வழிபாடுவது ஏகத்வம்----—ஒற்றுமையில்; ஆஸ்திதஹ--—ஸ்தாபிக்கப்பட்டு; ஸர்வதா--—எல்லா வகைகளிலும்; வர்த்த-மானஹ----நிலைத்திரு அபி—--இருப்பினும்; ஸஹ—--அவர்; யோகி--—ஒரு யோகி; மயி—--என்னில்; வர்ததே----வசிக்கிறார்

Translation

BG 6.31: என்னுடன் ஐக்கியமாகி, எல்லா உயிர்களிலும் வசிக்கும் ஒப்புயர்வற்ற ஆத்மாவாக என்னை வழிபடும் யோகி, எல்லா வகையான செயல்களிலும் ஈடுபட்டாலும், என்னிடத்தில் மட்டுமே வசிக்கிறார்.

Commentary

கடவுள் உலகில் வியாபித்திருக்கிறார். அவர் அனைவரின் இதயங்களிலும் ஒப்புயர்வற்றவராக அமர்ந்திருக்கிறார். 18.61 வசனத்தில், ஸ்ரீ கிருஷ்ணர் கூறுகிறார்: 'எல்லா உயிர்களின் இதயங்களிலும் நான் நிலைத்திருக்கிறேன்.' இவ்வாறு, ஒவ்வொரு உயிரினத்தின் உடலுக்குள்ளும், இரண்டு ஆளுமைகள் உள்ளன-ஆன்மா மற்றும் ஒப்புயர்வற்ற ஆத்மா. இது மக்களின் உணர்வு நிலைக்கேற்ப முதன்மையாக நான்கு பார்வை நிலைகளுக்கு வழிவகுக்கிறது:

1. பொருள் உணர்வில் உள்ளவர்கள் அனைவரையும் உடலாகப் பார்க்கிறார்கள் மற்றும் சாதி, மதம், பாலினம், வயது, சமூக அந்தஸ்து, நாட்டினச் சார்பு மற்றும் பலவற்றின் அடிப்படையில் வேறுபாடுகளை உருவாக்குகிறார்கள்.

2. மேலான உணர்வு உள்ளவர்கள் அனைவரையும் ஆத்மாவாகவே பார்க்கிறார்கள். 5.18 ஆவது வசனத்தில் ஸ்ரீ கிருஷ்ணர் கூறுகிறார்: 'உண்மையான கற்றவர்கள், தெய்வீக ஞானத்தின் கண்களால், ஒரு பிராமணரையும், ஒரு பசுவையும், யானையையும், ஒரு நாயையும், நாய் உண்பவரையும் சமமான பார்வையுடன் பார்க்கிறார்கள்.’

3. இன்னும் உயர்ந்த உணர்வில் உள்ள யோகிகள் எல்லாரிடமும் கடவுள் அமர்ந்திருப்பதைக் காண்கிறார்கள். அவர்கள் உலகத்தையும் உணர்கிறார்கள், ஆனால் அவர்கள் அதைப் பற்றி கவலைப்படுவதில்லை. அவர்கள் அன்னப்பறவைகள் போன்றவர்கள், அவர்களால் அன்னப் பறவையைப் போன்று பால் மற்றும் தண்ணீரின் கலவையிலிருந்து தண்ணீரை தள்ளிவிட்டு பாலை மட்டும் குடிக்க முடியும்.

4. மிக உயர்ந்த யோகிகளை பரமஹம்சர்கள் என்று அழைக்கிறார்கள். அவர்கள் கடவுளை மட்டுமே பார்க்கிறார்கள், உலகத்தைப் பற்றிய கண்ணோட்டம் அற்றவர்களாக இருக்கிறார்கள். இது வேத வியாஸரின் மகனான ஸுகதேவின் சுய உணர்தலின் நிலையாக இருந்தது . ஸ்ரீமத் பாகவதத்தில் கூறப்பட்டுள்ளபடி:

யம் ப்1ரவ்ரஜந்த1ம் அனுபேத1ம் அபே11 க்1ருத்1யம்

த்3வைபா1யனோ விரஹ-கா11ர ஆஜுஹாவ

புத்1ரேதி11ன்-மயத1யா த1ரவோ ’பி4னேது3ஸ்

1ம் ஸர்வ-பூ4த-ஹ்ருத3யம் முனிம் ஆனதோ1 ‘ஸ்மி (1.2.2)

ஸுகதேவ் தனது குழந்தைப் பருவத்திலேயே வீட்டைவிட்டு வெளியேறி ஸந்யாஸம் ஏற்ற போது உலகத்தைப் பற்றிய புரிதல் இல்லாத அளவுக்கு உயர்ந்த நிலையில் இருந்தார் என்று இந்த வசனம் கூறுகிறது. ஒரு ஏரியில் அழகான பெண்கள் நீராடுவதை கூட அவர் கவனிக்கவில்லை, அவர் அந்த வழியில் சென்ற போது அவர் கேட்டது, நினைத்தது, உணர்ந்தது யாவும் கடவுள்.

இந்த வசனத்தில், மேலே பட்டியலிடப்பட்ட உணர்தல் நிலைகளின் மூன்றாவது மற்றும் நான்காவது நிலைகளில் இருக்கும் பரிபூரண யோகிகளைப் பற்றி ஸ்ரீ கிருஷ்ணர் பேசுகிறார்.

Bookmark this Verse

Sign in to save your favorite verses.

Add a Note
Swami Mukundananda
6. த்யான யோகம்

Quick Jump to Any Verse

Navigate directly to the wisdom you seek

Book with feather

Stay Connected!

Verse of the Day

Start your day with the timeless inspiring wisdom from the Holy Bhagavad Gita delivered straight to your email!

Thanks for subscribing to "Bhagavad Gita - Verse of the Day"!