ரஸோஹமப்1ஸு கௌ1ன்தே1ய ப்1ரபா4ஸ்மி ஶஶிஸூர்யயோ: |
ப்1ரணவ: ஸர்வவேதே3ஷு ஶப்3த3: கே2 பௌ1ருஷம் ந்ருஷு ||8||
ரஸஹ--—சுவை; அஹம்—--நான்; அப்ஸூ--—நீரில்; கௌந்---தேய-—குந்தியின் மகன் அர்ஜுனன்; பிரபா--—பிரகாஶம்; அஸ்மி--—நான்; ஶஶி-ஸூர்யயோஹோ---—சந்திரன் மற்றும் சூரியன்; ப்ரணவஹ---ஓம் என்ற புனித சொற்குறியிடு; ஸர்வ—--அனைத்திலும்; வேதேஷு--—வேதங்கள்; ஷப்தஹ--—ஒலி; கே—--தூய வான வெளி-; பௌருஷம்—--திறன்; ந்ருஷு---—மனிதர்களில்
BG 7.8: குந்தியின் மகனே, நான் தண்ணீரில் சுவையாகவும், சூரியன் மற்றும் சந்திரனின் பிரகாசமாகவும் இருக்கிறேன். நான் வேத மந்திரங்களில் உள்ள ‘ஓம்’ என்ற புனித எழுத்து; நான்முகில் மண்டலத்துக்கு அப்பாற்பட்ட தூய வான வெளியின் ஒலியாகவும், மனிதர்களில் திறமையாகவும் இருக்கிறேன்.
Start your day with a nugget of timeless inspiring wisdom from the Holy Bhagavad Gita delivered straight to your email!
அனைத்து இருப்பின் தோற்றமும் அடிப்படையும் அவரே என்று கூறிவிட்டு, ஸ்ரீகிருஷ்ணர் இப்போது இந்த நான்கு வசனங்களில் அவருடைய கூற்றின் உண்மையை விளக்குகிறார். நாம் பழங்களை உண்ணும் போது, சுவையில் உள்ள இனிப்பு அவற்றில் சர்க்கரை இருப்பதைக் குறிக்கிறது. அதேபோல், ஸ்ரீ கிருஷ்ணர் தனது ஆற்றல்களின் அனைத்து மாற்றங்களிலும் தனது இருப்பை வெளிப்படுத்துகிறார். இவ்வாறு, அவர் தண்ணீரின் சுவை, அதன் தனித்துவமான உள்ளார்ந்த பண்பு என்று கூறுகிறார். எல்லாவற்றிற்கும் மேலாக, தண்ணீரிலிருந்து தண்ணீரின் சுவையை யாரால் பிரிக்க முடியும்? மற்ற அனைத்து வகையான பொருள் ஆற்றல்கள் ஆன வாயுக்கள், நெருப்புகள் மற்றும் திடப்பொருட்களுக்கு அவற்றின் சுவையை எடுத்துச் செல்ல திரவங்கள் தேவை. உங்கள் வறண்ட நாக்கில் ஒரு திடப்பொருளை வைத்தால், நீங்கள் எதையும் சுவைக்க மாட்டீர்கள். ஆனால் திடப்பொருள் வாயில் உள்ள உமிழ்நீரால் கரைக்கப்படும்போது, அவற்றின் சுவை நாக்கில் உள்ள சுவை மொட்டுகளால் உணரப்படுகிறது.
இதேபோல், ஆகாஶம் (விண்வெளி) ஒலிக்கான வாகனமாக செயல்படுகிறது. ஒலி பல்வேறு மொழிகளில் தன்னை மாற்றிக் கொள்கிறது, மேலும் ஸ்ரீ கிருஷ்ணர் விண்வெளியில் உள்ள ஒலி அவரது ஆற்றல் என்பதால் அவர் அனைத்திற்கும் அடிப்படை என்று விளக்குகிறார். மேலும், அவர் வேத மந்திரங்களின் முக்கிய அங்கமான ஓம் என்ற எழுத்து என்றும் கூறுகிறார். மனிதர்களில் வெளிப்படும் அனைத்து திறன்களின் ஆற்றல் மூலமாகவும் அவர் இருக்கிறார்.