Contact: +91 844 894 1008
bgwebsite_logo
Bhagavad Gita
The Song of God

Bhagavad Gita: Chapter 8, Verse 17

ஸஹஸ்ரயுக31ர்யன்த1மஹர்யத்3ப்3ரஹ்மணோ விது3: |

ராத்1ரிம் யுக3ஸஹஸ்ரான்தா1ம் தே1ஹோராத்‌1ரவிதோ3 ஜனா: ||17||

ஸஹஸ்ர—--ஆயிரம்; யுக—--ப்ரபஞ்சத்தின் ஆயுட்காலம்; பர்யந்தம்—வரை; அஹஹ—ஒரு பகல்; யத்—--எது; ப்ரம்மணஹ-—ப்ரஹ்மாவின்; விதுஹு—அறிக; ராத்ரிம்—--ஒரு இரவு; யுக-ஸஹஸ்ர-அந்தம்—--ஆயிரம் யுகங்கள் நீடிக்கும்; தே—--அவர்கள்; அஹ---ராத்ர-விதஹா----இவ்வாறு இரவையும் பகலையும் அறிந்த; ஜனாஹா—-மக்கள்

Translation

BG 8.17: ப்3ரஹ்மாவின் ஒரு நாள் (கல்பம்) ஆயிரம் சுழற்சிகள் நீடிக்கும். நான்கு யுகங்கள் (மஹாயுகம்) ஆயிரம் சுழற்சிகள் நீடிக்கும், மேலும் அவரது இரவும் அதே காலத்திற்கு நீடிக்கிறது. இதை அறிந்த ஞானிகள் இரவும் பகலும் பற்றிய யதார்த்தத்தைப் புரிந்துகொள்கிறார்கள்.

Commentary

வேத கால அண்டவியல் அமைப்பில் உள்ள கால அளவீடுகள் மிகப் பெரியவை மற்றும் திகைக்க வைக்கின்றன. உதாரணமாக, இரவில் பிறக்கும் பூச்சிகள் உள்ளன—அவை வளர்ந்து, இனப்பெருக்கம் செய்கின்றன, முட்டையிட்டு, முதுமை அடைகின்றன—ஒரே இரவில். காலையில் அவர்கள் அனைவரும் தெருவிளக்குக்கு கீழே இறந்து கிடப்பதைப் பார்க்கிறீர்கள். இந்தப் பூச்சிகளின் ஆயுட்காலம் மனிதர்களின் ஒரு இரவு மட்டுமே என்று கூறப்பட்டால், அது நம்பமுடியாததாக இருக்கும். இதேபோல், இந்திரன் மற்றும் வருணன் போன்ற தேவலோக கடவுள்களின் ஒரு நாள் மற்றும் இரவு, பூமியின் தளத்தில் ஒரு வருடத்திற்கு ஒத்திருக்கிறது என்று வேதங்கள் கூறுகின்றன. இந்த கணக்கீட்டின்படி, 30 நாட்கள் × 12 மாதங்கள் கொண்ட. தேவலோக கடவுள்களின் ஒரு வருடம் பூமியில் 360 ஆண்டுகளுக்கு சமமானது. மற்றும் பரலோக கடவுள்கள் 12,000 ஆண்டுகள் பூமியின் தளத்தில் ஒரு மகா யுகத்திற்கு (நான்கு யுகங்களின் சுழற்சி) ஒத்திருக்கிறது, அதாவது, 4 மில்லியன் மற்றும் 320 ஆயிரம் பூமி ஆண்டுகள் (12,000 தேவலோக ஆண்டுகள் x 360 பூமி ஆண்டுகள்)

இதுபோன்ற ஆயிரம் மகா யுகங்கள் ப்3ரஹ்மாவின் ஒரு நாளை உள்ளடக்கியது. இது கல்பம் (கல்ப்) என்று அழைக்கப்படுகிறது மற்றும் இது உலகின் மிகப்பெரிய நேர அலகு ஆகும். அது ப்3ரஹ்மாவின் இரவுக்கு சமம். இந்த கணக்கீடுகளின்படி, ப்3ரஹ்மா 100 ஆண்டுகள் வாழ்கிறார். பூமியின் கணக்கீடுகளின் படி இது 311 டிரில்லியன் கோடிக்கு (ஒரு ட்ரில்லியன் நுறாயிரங்கோடிக்கு) சமமானது. மற்றும் 40 பில்லியன் ஆண்டுகள் (ஒரு பில்லியன் 100 கோடிக்கு சமமானது) ஆகும். எனவே, காலத்தின் வேதக் கணக்கீடுகள் பின்வருமாறு:

கலியுகம்: 432,000 ஆண்டுகள்.

துவாபர யுகம்: 864,000 ஆண்டுகள்.

திரேதா யுகம்: 1,296,000 ஆண்டுகள்.

ஸத்ய யுகம்: 1,728,000 ஆண்டுகள்.

இவை அனைத்தும் சேர்ந்து, ஒரு மகா யுகம்: 4,320,000 ஆண்டுகள்.

ஒரு கல்பம்: (4,320,000,000 (4,320,000 x 1,000) பூமி ஆண்டுகள்) ஆயிரம் மகா யுகங்கள் கொண்ட ப்ரஹ்மாவின் ஒரு பகல்ஆகும். ப்ரஹ்மாவின் இரவும் அதே கால அளவு கொண்டது . இதைப் புரிந்துகொள்பவர்கள் இரவும் பகலும் அறிந்தவர்கள் என்று ஸ்ரீ கிருஷ்ணர் கூறுகிறார்.

ப்ரபஞ்சத்தின் முழு காலமும் ப்ரஹ்மாவின் ஆயுள் காலமான 100 ஆண்டுகள் ஆகும்: 311 டிரில்லியன் மற்றும் 40 பில்லியன் பூமி ஆண்டுகள். ப்ரஹ்மாவும் ஒரு ஆத்மா, அவர் தனது தற்போதைய வாழ்க்கையில் அந்த நிலையை அடைந்து கடவுளுக்காக தனது கடமைகளைச் செய்கிறார். எனவே, ப்ரஹ்மாவும் வாழ்க்கை மற்றும் இறப்பு சுழற்சியில் இருக்கிறார். இருப்பினும், மிகவும் உயர்ந்த உணர்வுடன் இருப்பதால், அவர் தனது வாழ்க்கையின் முடிவில், அவர் வாழ்க்கை மற்றும் இறப்பு சுழற்சியில் இருந்து விடுபட்டு கடவுளின் இருப்பிடத்திற்குச் செல்வார் என்பது உறுதி. எப்போதாவது, உலகத்தை உருவாக்கும் பொழுது ப்ரஹ்மாவின் கடமைகளைச் செய்ய எந்த ஆத்மாவும் தகுதி பெறாதபொழுது, ​​கடவுளே ப்ரஹ்மமாக மாறுகிறார்.

Bookmark this Verse

Sign in to save your favorite verses.

Add a Note
Swami Mukundananda
8. அக்ஷர ப்ரஹ்ம யோகம்

Quick Jump to Any Verse

Navigate directly to the wisdom you seek

Book with feather

Stay Connected!

Verse of the Day

Start your day with the timeless inspiring wisdom from the Holy Bhagavad Gita delivered straight to your email!

Thanks for subscribing to "Bhagavad Gita - Verse of the Day"!