Contact: +91 844 894 1008
bgwebsite_logo
Bhagavad Gita
The Song of God

Bhagavad Gita: Chapter 8, Verse 22

பு1ருஷ: ஸ ப1ர: பா1ர்த14க்1த்1யா லப்4யஸ்த்1வனன்யயா |

யஸ்யான்த1:ஸ்தா2னி பூ4தா1னி யேன ஸர்வமித3ம் த11ம் ||22||

புருஷஹ--—உயர்ந்த தெய்வீக ஆளுமை; ஸஹ--—அவர்; பரஹ---அனைத்தையும் விட மேலானவர் ய; பார்த--—ப்ரிதாவின் மகன் அர்ஜுனன்; பக்த்யா--—பக்தியின் மூலம்; லப்யஹ--—அடையக்கூடியதுவர்; து--—மட்டுமே; அனன்யயா----மற்றொன்று இல்லாமல்; யஸ்ய--—யாருடைய; அந்தஹ-ஸ்தானி--—உள்ளே அமைந்துள்ளது; பூதானி--—உயிரினங்கள்; யேன—--யாரால்; ஸர்வம்--—அனைத்தும்; இதம்--—இது; ததம்--—வியாபித்துள்ளது

Translation

BG 8.22: ஒப்புயர்வற்ற எல்லோரிலும் மேலான தெய்வீக புருஷர் இருப்பில் உள்ள அனைத்தையும் விட மேலானவர். அவர் எங்கும் நிறைந்திருந்தாலும், எல்லா உயிர்களும் அவரில் அமைந்திருந்தாலும், பக்தியின் மூலம் மட்டுமே அவரை அறிய முடியும்.

Commentary

நிறைந்த கடவுள் இருபத்தைந்து சதவீதம் இருக்கிறார் என்று சொல்ல முடியாது, அதே சமயம் அவரது தனிப்பட்ட வடிவத்தில், அவர் நூறு சதவீதம் இருக்கிறார். அவர் எல்லா இடங்களிலும் நூற்றுக்கு நூறு இருக்கிறார். இருப்பினும், இதை பற்றி எந்தக் கருத்தும் இல்லாததால் நாம் எங்கும் வியாபித்திருக்கும் கடவுளின் பயனை அடைவதில்லை. ஶாண்டில்ய முனிவர் கூறுகிறார்:

3வாம் ஸர்பி1ஹி ஶரீரஸ்த2ம் ந கரோத்1யங்க3 போ1ஷணம்

(ஶாண்டி3ல்ய ப4க்1தி13ரிஷனம்)

‘பசுவின் உடலில் பால் உள்ளது, ஆனால் அது பலவீனமான மற்றும் நோயுற்ற பசுவின் ஆரோக்கியத்திற்கு பயனளிக்காது.’ அதே பால் பசுவின் உடலில் இருந்து எடுக்கப்பட்டு தயிராக மாற்றப்படுகிறது. தயிர், கருப்பு மிளகு தூவி பசுவிற்கு கொடுக்கப்படுகிறது, அது பசுவை குணப்படுத்துகிறது.

அவ்வாறே, எங்கும் நிறைந்திருக்கும் கடவுளின் முன்னிலை நம் பக்தியை வளப்படுத்தும் உள்ளார்ந்த நெருக்கதை உடையதாக இல்லை. முதலில், நாம் அவரை அவரது தெய்வீக வடிவில் வணங்கி, நம் இதயத்தின் தூய்மையை வளர்த்துக் கொள்ள வேண்டும். பிறகு நாம் கடவுளின் அருளைப் பெருகிறோம், அவருடைய அருளால், அவரது தெய்வீக யோகமாயா சக்தியை நமது புலன்கள் மற்றும் புத்தியில் ஊடுருவி பரவ செய்கிறார். நமது புலன்கள் பின்னர் தெய்வீகமாக மாறும், மேலும் இறைவனின் தெய்வீகத்தன்மையை அவரது தனிப்பட்ட வடிவத்திலோ அல்லது அவரது அனைத்து வியாபித்த அம்சங்களிலோ உணர முடிகிறது. எனவே, பக்தியின் மூலம் மட்டுமே அவரை அறிய முடியும் என்று ஸ்ரீ கிருஷ்ணர் கூறுகிறார்.

பக்தி செய்வதன் அவசியத்தை ஸ்ரீ கிருஷ்ணர் பகவத் கீதையில் மீண்டும் மீண்டும் வலியுருத்தியுள்ளார். 6.47 ஆம் வசனத்தில், தம்மிடம் பக்தியில் ஈடுபடுபவனை எல்லாவற்றிலும் உயர்ந்தவனாகக் கருதுவதாகக் கூறினார். இங்கு, ‘வேறு எந்த வழியிலும் கடவுளை அறிய முடியாது’ என்று பொருள்படும் அனன்யயா என்ற வார்த்தையை அவர் அழுத்தமாகப் பயன்படுத்துகிறார். சைதன்ய மஹாபிரபு இதை மிக அருமையாக கூறுகிறார்:

4க்1தி1 முக2 நிரீக்ஷக11ர்ம யோக3 ஞான

(சை11ன்ய ச1ரிதா1ம்ரித1ம், மத்4தய லீலா, 22.17)

‘என்னை நம்பிக்கையுடனும் அன்புடனும் வணங்கும் என் பக்தர்களால் மட்டுமே நான் அடையப்படுகிறேன்.’

‘ஒருவர் அஷ்டாங்க யோகம் செய்யலாம், துறவறத்தில் ஈடுபடலாம், அறிவைக் குவிக்கலாம், பற்றின்மையை வளர்த்துக் கொள்ளலாம். ஆனாலும், பக்தி இல்லாமல், கடவுளை அடைய முடியாது.’ இதையே ஜகத்குரு ஸ்ரீ கிருபாலுஜி மஹராஜ் கூறுகிறார்:

1ர்ம யோக3 அரு ஞான ஸப3 ஸாத4னா யத3பி ப3கா2ன்

பை1 பி3னு ப4க்1தி1 ஸப3ய் ஜனு, மிருத1க தே3ஹ பி3னு ப்1ரான்

(ப4க்1தி1 ஶத1க் வசனம் 8)

‘கர்மம், ஞானம் மற்றும் அஷ்டாங்க யோகம் ஆகியவை கடவுளை உணரும் பாதைகளாக இருந்தாலும், பக்தியைக் கலக்காமல், அவை அனைத்தும் உயிர் காற்றின்றி இறந்த உடல்கள் போல ஆகிவிடுகின்றன.’.பல்வேறு வேதங்களும் அறிவிக்கின்றன:

4க்1த்1யாஹமேக1யா க்3ராஹ்யஹ ஶ்ரத்3தா4யாத்1மா ப்ரியஹ ஸதா1ம்

(பா43வத1ம் 11.14.21)

‘என்னை நம்பிக்கையுடனும் அன்புடனும் வணங்கும் என் பக்தர்களால் மட்டுமே நான் அடையப்படுகிறேன்.

மிலாஹின் ந ரகு41தி1 பி3னு அனுராகா3, கி1யே ஜோக311 ஞான பி 3ராகா3

(ராமாயணம்)

'ஒருவர் அஷ்டாங்க யோகம் செய்யலாம், துறவறத்தில் ஈடுபடலாம், அறிவைக் குவிக்கலாம், மற்றும் பற்றின்மையை வளர்த்துக் கொள்ளலாம். ஆனாலும், பக்தி இல்லாமல், கடவுளை அடைய முடியாது.

Bookmark this Verse

Sign in to save your favorite verses.

Add a Note
Swami Mukundananda
8. அக்ஷர ப்ரஹ்ம யோகம்

Quick Jump to Any Verse

Navigate directly to the wisdom you seek

Book with feather

Stay Connected!

Verse of the Day

Start your day with the timeless inspiring wisdom from the Holy Bhagavad Gita delivered straight to your email!

Thanks for subscribing to "Bhagavad Gita - Verse of the Day"!