அதி4பூ4த1ம் க்ஷரோ பா4வ: பு1ருஷஶ்சா1தி4தை3வத1ம் |
அதி4யஞ்ஞோஹமேவாத்1ர தே3ஹேதே3ஹப்4ருதா1ம் வர ||4||
அதிபூதம்--—எப்பொழுதும் மாறிவரும் உடல் வெளிப்பாடு; க்ஷரஹ--—அழியும்; பாவஹ—--இயற்கை; புருஷஹ —--—கடவுளின் ப்ரபஞ்ச ஆளுமை, ஜடப்பொருள் உருவாக்கத்தை உள்ளடக்கியது; ச—--மற்றும்; அதிதைவதம்—--தேவர்களின் இறைவன்; அதியஞ்ஞஹ——அனைத்து தியாகங்களுக்கும் இறைவன்; அஹம்---நான்; ஏவ--—நிச்சயமாக; அத்ர—--இங்கே; தேஹே—--உடலில்; தேஹ—-ப்ருதாம்—--உடலுறந்தவர்களுடைய; வர-—ஓ சிறந்தவரே
BG 8.4: ஓ தேசோரூபம் கொண்ட ஆத்மாக்களில் சிறந்தவரே, தொடர்ந்து மாறிவரும் உடல் வெளிப்பாடு அதிபூதம் எனப்படும்; இந்த படைப்பில் தேவலோக கடவுள்களை தலைமை தாங்கும் கடவுளின் உலகளாவிய வடிவம் அதிதெய்வம் என்று அழைக்கப்படுகிறது; ஒவ்வொரு உயிரினத்தின் இதயத்திலும் வசிக்கும் நான், அதியஞ்ஞன் அல்லது அனைத்து தியாகங்களின் இறைவன் என்று அழைக்கப்படுகிறேன்.
அதி4பூ4த1ம் க்ஷரோ பா4வ: பு1ருஷஶ்சா1தி4தை3வத1ம் |
அதி4யஞ்ஞோஹமேவாத்1ர தே3ஹேதே3ஹப்4ருதா1ம் வர ||4||
ஓ தேசோரூபம் கொண்ட ஆத்மாக்களில் சிறந்தவரே, தொடர்ந்து மாறிவரும் உடல் வெளிப்பாடு அதிபூதம் எனப்படும்; இந்த படைப்பில் தேவலோக கடவுள்களை தலைமை தாங்கும் கடவுளின் உலகளாவிய வடிவம் …
Sign in to save your favorite verses.
Sign InStart your day with the timeless inspiring wisdom from the Holy Bhagavad Gita delivered straight to your email!
பூமி, நீர், நெருப்பு, காற்று, விண்வெளி ஆகிய ஐந்து கூறுகளின் அனைத்து வெளிப்பாடுகளையும் உள்ளடக்கிய ப்ரபஞ்சத்தின் பல்வண்ணக்காட்சிக் கருவி அதிபூதம் என்று அழைக்கப்படுகிறது. முழுப் பொருள் சிருஷ்டியையும் உள்ளடக்கிய கடவுளின் முழுமையான (ப்ரபஞ்ச ஆளுமை (விராட்1 பு1ருஷ்), அதிதெய்வம் என்று அழைக்கப்படுகிறது. ஏனெனில் அவர் தேவர்கள் (ப்ரபஞ்சத்தின் பல்வேறு துறைகளை மேற்பார்வையிடும் தேவலோக தெய்வங்கள்) மீது ஆட்சித் தலைமையுரிமை உடையவர். பரமாத்மா (உயர்ந்த ஆன்மா) அனைத்து உயிர்களின் இதயத்திலும் வசிக்கும் பரம தெய்வீக ஆளுமை, ஸ்ரீ கிருஷ்ணர் அதியஞ்ஞன் என்று அழைக்கப்படுகிறார். அனைத்து யாகங்களும் (தியாகங்கள்) அவரது திருப்திக்காக செய்யப்படுகின்றன. அனைத்து யாகங்களுக்கும் தெய்வீகமாக இருக்கும் அவர் அனைத்து செயல்களுக்கும் வெகுமதிகளை வழங்குபவர்.
இந்த வசனமும் முந்தைய வசனமும் அர்ஜுனனின் ஏழு கேள்விகளில் ஆறு கேள்விகளுக்குப் பதிலளிக்கின்றன. அடுத்த சில வசனங்கள் மரணத்தின் நேரத்தைப் பற்றிய கேள்விக்கு பதிலளிக்கின்றன.