Contact: +91 844 894 1008
bgwebsite_logo
Bhagavad Gita
The Song of God

Bhagavad Gita: Chapter 9, Verse 31

க்ஷிப்1ரம் ப4வதி14ர்மாத்1மா ஶஶ்வச்1சா2ன்தி1ம் நிக3ச்12தி |

கௌ1ன்தே1ய ப்1ரதிஜானீஹி ந மே ப4க்11: ப்1ரணஶ்யதி1 ||
31||

க்ஷிப்ரம்—-விரைவில்; பவதி——ஆகும்; தர்ம—ஆத்மா——நற்குணமுள்ள; ஶஶ்வத்—ஶாந்திம்——நிலையான அமைதியை; நிகச்சதி——அடைகிறார்கள் அடைவர்; கௌந்தேய——குந்தியின் மகன் அர்ஜுனன்; ப்ரதிஜானீஹி—அறிவிப்பாய்; ந——ஒருபொழுதும் இல்லை மே——என்; பக்தஹ——பக்தர்;—ப்ரணஷ்யதி——அழிகிறார்

Translation

BG 9.31: விரைவில் அவர்கள் நல்லொழுக்கமுள்ளவர்களாக மாறி நிலையான அமைதியை அடைகிறார்கள். குந்தியின் மகனே, என்னுடைய எந்த ஒரு பக்தனும் ஒருபொழுதும் அழிவதில்லை என்பதை தைரியமாக அறிவிக்கவும்.

Commentary

சரியான தீர்மானத்தைச் செய்ததற்காக பக்தர்கள் ஏன் மரியாதைக்குரியவர்களாகக் கருதப்பட வேண்டும்? கடவுள் மீது அலாதியான நம்பிக்கையுடன் பிரத்யேக பக்தியின் செயல்முறையை அவர்கள் தொடர்ந்தால், அவர்களின் இதயங்கள் தூய்மைப்படுத்தப்படும், மேலும் அவர்கள் விரைவில் புனித நற்பண்புகளை வளர்த்துக் கொள்வார்கள் என்று ஸ்ரீ கிருஷ்ணர் விளக்குகிறார்.

` முற்றிலும் நியாயமான, உண்மையுள்ள, இரக்கமுள்ள, அன்பான, அருளிரக்கமுடைய தெய்வீக குணங்கள் கடவுளிடமிருந்தே வெளிப்படுகின்றன. ஆன்மாக்களாகிய நாம் கடவுளின் பாகங்களாக இருப்பதால், நாம் அனைவரும் இயற்கையாகவே இந்த தெய்வீக குணங்களுக்கு ஈர்க்கப்படுகிறோம். ஆனால் நல்லொழுக்கமுள்ளவராக மாறுவதற்கான செயல்முறை ஒரு மழுப்பலான மர்மமாகவே உள்ளது. சிறுவயதிலிருந்தே, நாம் உண்மையைப் பேச வேண்டும், மற்றவர்களுக்கு சேவை செய்ய வேண்டும், கோபம் மற்றும் பிற எதிர்மறை உணர்ச்சிகளிலிருந்து விடுபட வேண்டும் என்று கேள்விப்பட்டிருக்கிறோம், ஆனால் நம் மனம் தூய்மையற்றது என்ற எளிய காரணத்திற்காக அந்த போதனைகளை நடைமுறைப்படுத்த முடியவில்லை. மனதை தூய்மைப்படுத்தாமல், குணத்தின் கறைகளை முழுமையாகவும் நிரந்தரமாகவும் அகற்ற முடியாது. ஜகத்குரு ஸ்ரீ கிருபாலுஜி மஹராஜ், தெய்வீக நற்பண்புகளை வளர்த்துக்கொள்வது பற்றிய மறுக்க முடியாத உண்மையை அறிவிக்கிறார்:

ஸத்1ய அஹிம்ஸா ஆதி3 மன1 பி3னா ஹரி ப4ஜன ந பா1

ஜல தே1 க்4ரித1 நிக1லே நஹீன், கோ1டி1ன க1ரியா உபா1

(ப4க்1தி1 ஶத1க் வசனம் 35)

‘எவ்வளவு முயற்சி செய்தாலும், துணியில் படிந்திருக்கும் எண்ணெய்க் கறையை தண்ணீரால் மட்டும் அகற்ற முடியாது. அவ்வாறே, உண்மை, அகிம்சை மற்றும் பிற நற்பண்புகள் கடவுள் பக்தியில் ஈடுபடாமல் பெற முடியாது.' மனம் தூய்மையாகும் பொழுது இந்த குணங்கள் வெளிப்படும், இது அனைத்தும் தூய்மையான கடவுளுடன் இணைக்கப்படாமல் நடக்க முடியாது.

மேலும், ஸ்ரீ கிருஷ்ணர் அர்ஜுனனிடம் தனது பக்தர்கள் ஒருபொழுதும் அழிய மாட்டார்கள் என்று தைரியமாக அறிவிக்கும்படி கேட்டுக்கொள்கிறார். ‘ஞானி (அறிவு பெற்றவர்) இழக்கப்பட மாட்டார்’ என்று அவர் கூறவில்லை. சடங்குகளைச் செய்பவர் அழியமாட்டார்’ என்றும் கூறவில்லை. அவர் தனது பக்தர்களுக்கு 'அவர்கள் ஒருபொழுதும் அழிவுக்கு உட்பட மாட்டார்கள் 'என்று வாக்குறுதி அளிக்கிறார். இதன் மூலம், 9.22 வசனத்தில், அவரிடம் பிரத்யேக பக்தியில் ஈடுபடுபவர்ககளின் , சுமையை அவர் தனிப்பட்ட முறையில் சுமக்கிறார் என்று இங்கே குறிப்பிடுகிறார்.

ஸ்ரீ கிருஷ்ணர் இந்த அறிக்கையை அவரே வெளியிடாமல் பதிலாக ஏன் அர்ஜுனனை இந்த அறிக்கையை வெளியிடும்படி கூறுகிறார் என்பது புதிராகத் தோன்றலாம். காரணம், சிறப்புச் சூழ்நிலைகளில், இறைவன் சில சமயங்களில் தம்முடைய வார்த்தையை மீறுகிறார், ஆனால் அவர் தனது பக்தர்களின் வார்த்தைகளை மீற அனுமதிப்பதில்லை. உதாரணமாக, மகாபாரதப் போரின்பொழுது ஆயுதங்களைத் ஏந்த மாட்டேன் என்று ஸ்ரீ கிருஷ்ணர் தீர்மானித்தார். ஆனால், சிறந்த பக்தராகக் கருதப்படும் மூதாதையர் பீஷ்மர், அர்ஜுனை மறுநாள் சூரிய அஸ்தமனத்திற்குள் கொன்றுவிடுவேன் அல்லது இறைவனை ஆயுதம் ஏந்தி அவனைக் காக்கச் செய்வேன் என்று என்று சபதம் எடுத்தபொழுது, ​​பீஷ்மர் செய்த சபதத்தைக் காக்க ஸ்ரீ கிருஷ்ணர் தன் சபதத்தை தானே முறித்துக் கொண்டார். எனவே, அவருடைய கூற்றின் வலிமையை மீண்டும் உறுதிப்படுத்த, ஸ்ரீ கிருஷ்ணர் இங்கே கூறுகிறார், ‘அர்ஜுனன், என் பக்தன் ஒருபொழுதும் அழிய மாட்டான் என்று நீ அறிவிக்கிறாய், ஏனென்றால் உன் வார்த்தை காப்பாற்றப்படும் என்று நான் உத்தரவாதம் தருகிறேன்.

Bookmark this Verse

Sign in to save your favorite verses.

Add a Note
Swami Mukundananda
9. ராஜா வித்யா யோகம்

Quick Jump to Any Verse

Navigate directly to the wisdom you seek

Book with feather

Stay Connected!

Verse of the Day

Start your day with the timeless inspiring wisdom from the Holy Bhagavad Gita delivered straight to your email!

Thanks for subscribing to "Bhagavad Gita - Verse of the Day"!