Contact: +91 844 894 1008
bgwebsite_logo
Bhagavad Gita
The Song of God

Bhagavad Gita: Chapter 11, Verse 17

கி1ரீடி1னம் க3தி3னம் ச1க்1ரிணம் ச1 தே1ஜோராஶிம் ஸர்வதோ1 தீ3ப்தி1மன்த1ம் |

1ஶ்யாமி த்1வாம் து3ர்னிரீக்ஷ்யம் ஸமன்தா1த்3 தீ3ப்1தா1னலார்க1த்3யுதி1மப்1ரமேயம் ||
17||

கிரீடினம்—--கிரீடத்தால் அலங்கரிக்கப்பட்டு;கதினம்—கதையடன்; சக்ரிணம்--—சக்கரம்; ச—மற்றும்; தேஜஹ-ராஶிம்--—அற்புதத்தின் உறைவிடம்; ஸர்வதஹ—--எல்லா திசைகளிலும்; தீப்தி-மந்தம்--—பிரகாசிக்கும்; பஶ்யாமி--—நான் காண்கிறேன்; த்வாம்--—உங்களை; துர்நிரீக்ஷ்யம்--—பார்ப்பது கடினம்; ஸமன்தாத்--—எல்லா திசைகளிலும்; தீப்த-அனல--— ஜுவாலையாக எரியும் நெருப்பு; அர்க—சூரியனைப் போல; த்யுதிம்--—ஒளி வீச்சில்; அப்ரமேயம்---—அளக்க முடியாதது

Translation

BG 11.17: கிரீடத்தால் அலங்கரிக்கப்பட்டு, சங்கு, கதை மற்றும் சக்கரம் போன்ற ஆயுதங்களை ஏந்திய உனது வடிவம், எங்கும் பிரகாசத்தின் உறைவிடமாக ஜொலிப்பதை நான் காண்கிறேன். எல்லாத் திசைகளிலும் சூரியனைப் போல பிரகாசிக்கும் உனது பிரகாசத்தின் ஒளி வீச்சில் உன்னைப் பார்ப்பது கடினம்.

Commentary

மிகவும் பிரகாசமான ஒன்றைப் பார்த்தவுடன் உடல் சார்ந்த கண்கள் குருடாகின்றன. அர்ஜுனனுக்கு முன்பிருந்த ப்ரபஞ்ச வடிவம் ஆயிரக்கணக்கான பிரகாசிக்கும் சூரியன்களை மிஞ்சிய பிரகாசத்தைக் கொண்டிருந்தது. சூரியன் கண்களை திகைக்க வைப்பது போல, ப்ரபஞ்ச வடிவம் பிரமிக்க வைக்கிறது; அர்ஜுனன் அதைக் காணக்கூடிய ஒரே காரணம், அவர் இறைவனிடமிருந்து பெற்ற தெய்வீகக் கண்கள். ப்ரபஞ்ச வடிவத்திற்குள், அர்ஜுனன் நான்கு கைகள் கொண்ட விஷ்ணுவை இறைவனின் மற்றொரு வடிவமாக உணர்ந்தார், நான்கு பிரபலமான சின்னங்களான கதை, சங்கு, சக்கரம் மற்றும் தாமரை மலர் ஏந்திய விஷ்ணுவை இறைவனின் மற்றொரு வடிவமாக உணர்ந்தார்.

Bookmark this Verse

Sign in to save your favorite verses.

Add a Note
Swami Mukundananda
11. விஸ்வரூப தரிசன யோகம்

Quick Jump to Any Verse

Navigate directly to the wisdom you seek

Book with feather

Stay Connected!

Verse of the Day

Start your day with the timeless inspiring wisdom from the Holy Bhagavad Gita delivered straight to your email!

Thanks for subscribing to "Bhagavad Gita - Verse of the Day"!