Contact: +91 844 894 1008
bgwebsite_logo
Bhagavad Gita
The Song of God

Bhagavad Gita: Chapter 11, Verse 52-53

ஶ்ரீப43வானுவாச1 |

ஸுது3ர்த3ர்ஶமித3ம் ரூப1ம் த்3ருஷ்ட1வானஸி யன்மம |

தே3வா அப்1யஸ்ய ரூப1ஸ்ய நித்3யம் த3ர்ஶனகா1ங்க்ஷிண: ||52||
நாஹம் வேதை3ர்ன த11ஸா ந தா3னேந ந சே1ஜ்யயா |

ஶக்1ய ஏவம்விதோ4 த்3ரஷ்டு1ம் த்3ருஷ்ட1வானஸி மாம் யதா2 ||53||

ஶ்ரீ-பகவான் உவாச—ஒப்புயர்வற்ற பகவான் கூறினார்; ஸு-துர்தர்ஶம்--—காண்பதற்கு மிகவும் கடினமான; இதம்—--இது; ரூபம்—--வடிவம்; த்ருஷ்டவான் அஸி--—நீ பார்க்கும்; யத்—--எது; மம—--என்னுடைய; தேவாஹா----தேவலோக தேவர்கள்; அபி—--கூட; அஸ்ய--—இந்த; ரூபஸ்ய—--வடிவத்தின்; நித்யம்--—நித்தியமாக; தர்ஶன-காங்க்ஷிணஹ----பார்க்க ஆசைப்படுபவர்; ந—--ஒருபொழுதும் இல்லை; அஹம்--—நான்; வேதைஹி—--வேதங்களைப் படிப்பதாலோ; ந—ஒருபொழுதும் இல்லை;தபஸா--—கடுமையான தவம் செய்தாலோ; ந—--ஒருபொழுதும் இல்லை; தாநேந--— தானம் செய்தாலோ; ந—-ஒருபொழுதும் இல்லை; ச---மேலும்; இஜ்யயா—--வழிபாட்டினால்; ஶக்யஹ----—அது சாத்தியம்; ஏவம்--விதஹ—--இப்படி; த்ரஷ்டும்—--பார்க்க; த்ரிஷ்டவான்--— பார்த்தது போல்; அஸி--—நீ; மாம்—--நான்; யதா—-ஆக

Translation

BG 11.52-53: ஒப்புயர்வற்ற பகவான் கூறினார்: நீ காணும் என்னுடைய இந்த வடிவம் பார்ப்பதற்கு மிகவும் கடினமாகது. தேவலோக தேவர்களும் கூட காண ஆவலுடன் உள்ளனர். வேதம் படிப்பதாலோ, தவம் செய்தாலோ, தானம் செய்தாலோ, அக்கினி யாகங்களினாலோ, நீ பார்த்தது போல் என்னைக் காண முடியாது.

Commentary

அர்ஜுனனுக்கு அவரது ப்ரபஞ்ச வடிவத்தைக் காட்டி, அது அர்ஜுனனுக்காக பிரத்தியேகமாக வெளிப்பட்டதாக புகழ்ந்த ஸ்ரீ கிருஷ்ணர் கடவுளின் தனிப்பட்ட வடிவத்தின் மீதான அர்ஜுனனின் அன்பு உறுதியாகவும் வலுவாகவும் இருப்பதை ஸ்ரீ கிருஷ்ணர் உறுதிப்படுத்த விரும்புகிறார். எனவே, அர்ஜுனன் கடவுளைப் பார்க்கும் விதம் மிகவும் அரிதானது என்று ஸ்ரீ கிருஷ்ணர் கூறுகிறார். அர்ஜுனன் முன் நிற்கும் கடவுளை அவரது இரு கரம் கொண்ட உருவத்தில் உணர தேவலோகக் கடவுள்கள் கூட ஏங்குகிறார்கள் என்பதை அவர் வலியுறுத்துகிறார். இது எந்த எந்த அளவிலும் செய்யப்படும் வேத ஆய்வுகளாலும், துறவுகளாலும், அக்னி யாகங்களாலும் கூட சாத்தியமில்லை. ஒருவரின் முயற்சியின் வலிமையால் கடவுளை அறிய முடியாது என்பது அடிப்படை ஆன்மீக கொள்கையாக இருந்தாலும், அவரிடம் பக்தியில் ஈடுபடுபவர்கள் அவருடைய அருளைப் பெற்றவர்களாக மாறுகிறார்கள். பின்னர், அவரது அருளால், அவர்கள் அவரை எளிதில் அறிந்து கொள்ள முடியும். முண்ட3கோ11நிஷத3ம் கூறுகிறது:

நாயமாத்1மா ப்1ரவச1நேந லப்4யோ ந மேத4யா ந ப3ஹுனா ஶ்ருதே1ன (3.2.3

‘ஆன்மிகச் சொற்பொழிவுகள் மூலமோ அல்லது அறிவுத்திறன் மூலமோ கடவுளை அறிய முடியாது; பலவிதமான போதனைகளைக் கேட்பதன் மூலமும் அவரை அறிய முடியாது.’ இந்த வழிகள் எதுவும் கடவுளை அவரது தனிப்பட்ட வடிவத்தில் உணர உதவவில்லை என்றால், அவரை எப்படி இந்த முறையில் பார்க்க முடியும்? ஸ்ரீ கிருஷ்ணர் இப்பொழுது அந்த ரகசியத்தை வெளிப்படுத்துகிறார்.

Bookmark this Verse

Sign in to save your favorite verses.

Add a Note
Swami Mukundananda
11. விஸ்வரூப தரிசன யோகம்

Quick Jump to Any Verse

Navigate directly to the wisdom you seek

Book with feather

Stay Connected!

Verse of the Day

Start your day with the timeless inspiring wisdom from the Holy Bhagavad Gita delivered straight to your email!

Thanks for subscribing to "Bhagavad Gita - Verse of the Day"!