Contact: +91 844 894 1008
bgwebsite_logo
Bhagavad Gita
The Song of God

Bhagavad Gita: Chapter 11, Verse 8

ந து1 மாம் ஶக்1யஸே த்3ரஷ்டு1மனேனைவ ஸ்வச1க்ஷுஷா |

தி3வ்யம் த3தா3மி தே11க்ஷு: ப1ஶ்ய மே யோக3மைஶ்வரம் ||8||

ந----இல்லை; து—---ஆனால்; மாம்--—என்னை; ஶக்யஸே---—உன்னால் முடியும்; த்ரஷ்டும்--—பார்க்க; அனேன--—இவற்றுடன்; ஏவ--—கூட; ஸ்வ-சக்ஷுஷா--—உன் உடல் சார்ந்த கண்களால்; திவ்யம்----தெய்வீக; ததாமி--—நான் கொடுக்கிறேன்; தே----உனக்கு; சக்ஷுஹு--—பார்வையை; பஶ்ய---இதோ; மே----என்; யோகம் ஐஶ்வரம்---க-ம்பீரமான செல்வம்

Translation

BG 11.8: ஆனால் உன்னுடைய இந்த உடல் சார்ந்த கண்களால் என்னுடைய ப்ரபஞ்ச வடிவத்தை உன்னால் பார்க்க முடியாது. எனவே, என் கம்பீரமான செல்வ செழுமையை காண்பதற்காக நான் உனக்கு தெய்வீக பார்வையை தருகிறேன். இதோ என் கம்பீரமான செல்வம்!

Commentary

ஒப்புயர்வற்ற கடவுள் உலகில் அவதரிக்கும்பொழுது, ​​அவருக்கு இரண்டு வகையான வடிவங்கள் உள்ளன - ஒன்று ஜடக் கண்களால் காணக்கூடியது, மற்றொன்று தெய்வீக பார்வைகள் மட்டுமே காணக்கூடிய அவரது தெய்வீக வடிவம். எனவே, பூமியில் அவர் இறங்கும் பொழுது, மனிதர்கள் அவரைக் காண்கிறார்கள் ​​ஆனால் அவர்கள் அவரது ஜட வடிவத்தை மட்டுமே பார்க்கிறார்கள். அவரது தெய்வீக வடிவம் அவர்களின் ஜடக் கண்களுக்குத் தெரியவில்லை. இதனாலேயே இந்த ஜடவுலகில் உள்ள ஆத்மாக்களால் கடவுள் பூமியில் அவதாரம் எடுக்கும்பொழுது அவரை அடையாளம் காண முடியாது. ஸ்ரீ கிருஷ்ணர் இதை அத்தியாயம் 9, வசனம் 11 இல் குறிப்பிட்டார்: 'நான் எனது தனிப்பட்ட வடிவத்தில் இறங்கும்பொழுது, மாயையால் ​​ஏமாற்றப்பட்ட நபர்களால் என்னை அடையாளம் காண முடியாது. எல்லா உயிர்களுக்கும் மேலான இறைவனாகிய என் ஆளுமையின் தெய்வீகத்தன்மையை அவர்கள் அறியவில்லை.’ மக்கள் பார்ப்பது தெய்வீக தோன்றலின் ஜட வடிவத்தை மட்டுமே. அதே கோட்பாடு அவருடைய ப்ரபஞ்ச வடிவத்திற்கும் பொருந்தும். முந்தைய இரண்டு வசனங்களில், ஸ்ரீ கிருஷ்ணர் அர்ஜுனனிடம் ப்ரபஞ்ச வடிவத்தைப் பார்க்கும்படி கேட்டார், ஆனால் அர்ஜுனனுக்கு ஜடக் கண்கள் இருப்பதால் எதையும் பார்க்க முடியவில்லை. அந்தப் ப்ரபஞ்ச வடிவத்தைக் காண உடல்சார்ந்த கண்கள் போதுமானதாக இல்லை; மற்றும் அதை புரிந்துகொள்ளும் திறன் சாதாரண அறிவுக்கு இல்லை. எனவே, ஸ்ரீ கிருஷ்ணர் இப்பொழுது அர்ஜுனனுக்கு தெய்வீக பார்வையை வழங்குவார் என்று கூறுகிறார், அதன் மூலம் அர்ஜுனனால் ப்ரபஞ்ச வடிவத்தை அதன் அனைத்து மகிமையிலும் பார்க்க முடியும். ஆன்மீக தரிசனத்தை வழங்குவது என்பது பரமாத்மாவின் கருணையின் செயல். அவருடைய அருளால், அவருடைய தெய்வீக கண்களை ஆன்மாவின் கண்களுடன் சேர்கிறார்; அவர் தனது தெய்வீக மனதை ஆன்மாவின் பொருள் மனதில் சேர்க்கிறார்; மற்றும் ஆன்மாவின் பொருள் அறிவுடன் தனது தெய்வீக அறிவை சேர்க்கிறார்.. பிறகு, கடவுளின் தெய்வீக உணர்வுகள், மனம் மற்றும் புத்தி ஆகியவற்றைக் கொண்டு, ஆன்மா அவரது தெய்வீக வடிவத்தைக் கண்டு அதை நினைத்து புரிந்து கொள்ள முடியும்.

Bookmark this Verse

Sign in to save your favorite verses.

Add a Note
Swami Mukundananda
11. விஸ்வரூப தரிசன யோகம்

Quick Jump to Any Verse

Navigate directly to the wisdom you seek

Book with feather

Stay Connected!

Verse of the Day

Start your day with the timeless inspiring wisdom from the Holy Bhagavad Gita delivered straight to your email!

Thanks for subscribing to "Bhagavad Gita - Verse of the Day"!