Contact: +91 844 894 1008
bgwebsite_logo
Bhagavad Gita
The Song of God

Bhagavad Gita: Chapter 14, Verse 24-25

ஸமது3:க2ஸுக2:ஸ்வஸ்த2: ஸமலோஷ்டா1ஶ்மகா1ஞ்ச1ன: |

து1ல்யப்1ரியாப்1ரியோ தீ4ரஸ்து1ல்யநிந்தா3த்1மஸந்ஸ்து1தி1: ||24||
மானாப1மானயோஸ்து1ல்யஸ்து1ல்யோ மித்1ராரிப1க்ஷயோ: |

ஸர்வாரம்ப41ரித்1யாகீ3 கு3ணாதீ11: ஸ உச்1யதே1 ||25||

ஸம---—சமமாக; துஹ்க--—துன்பம்; ஸுகஹ--—மகிழ்ச்சி;; ஸ்வ-ஸ்தஹ—--தன்னிடத்தில் நிலையுற்று; ஸம—சமமாக; லோஷ்-----மண்ணின் தன்மையுடைய மண்கட்டி; அஶ்ம--—கல்; காஞ்சனஹ---—தங்கம்; துல்ய--—சம மதிப்புள்ள; ப்ரிய—--இன்பமான; அப்ரியஹ---விரும்பத்தகாத; தீரஹ----—நிலையானவராக; துல்ய--—ஒறேவாராக; நிந்தா--—குற்றச்சாட்டு; ஆத்ம-ஸன்ஸ்துதிஹி----புகழ்ச்சி; மான---—நன்மதிப்பு; அபமானயோஹோ----அவமதிப்பு;; துல்யஹ---—ஸமமான; மித்ர---—நண்பர்; அரி---—எதிரி; பக்ஷயோஹோ---—கட்சிகளுக்கு; ஸர்வ--—அனைத்து; ஆரம்ப---—ஊக்க முயற்சியுடைய; பரித்யாகீ—--துறப்பவர்; குண-அதீதஹ----ஜட இயற்கையின் மூன்று முறைகளுக்கு மேலாக உயர்ந்தவர்கள்; ஸஹ--—அவர்கள்; உச்யதே---உள்ளதாகக் கூறப்படுகிறது

Translation

BG 14.24-25: சுகத்திலும், துக்கத்திலும் சமமாக இருப்பவர்கள், தன்னம்பிக்கை உள்ளவர்கள், மண், கல், பொன் ஆகியவற்றை சமமாகப் பார்ப்பவர்கள், விரும்பத்தக்க மற்றும் விரும்பத்தகாத நிகழ்வுகளில் சமமாக இருப்பவர்கள். அவர்கள் புத்திசாலிகள், பழியையும் புகழையும் சமமாக ஏற்றுக்கொள்பவர்கள்; குற்றச்சாட்டுகளையும் அவமானங்களையும் எதிர்கொள்வதில் சமமாக இருப்பவர்கள்; பகைவனையும் நண்பனையும் சமமாக நடத்துவார்கள்; எல்லா பொருளாசையையும் துறந்தவர்கள், மூன்று குணங்களுக்கும் மேலாக உயர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது.

Commentary

கடவுளைப் போலவே ஆத்மாவும் மூன்று குணங்களுக்கு அப்பாற்பட்டது. உடல் உணர்வில், நாம் உடலின் வலி மற்றும் இன்பங்களை அடையாளம் கண்டுகொள்கிறோம், அதன் விளைவாக உற்சாகம் மற்றும் மனச்சோர்வு ஆகியவற்றின் உணர்ச்சிகளுக்கு இடையில் ஊசலாடுகிறோம். ஆனால் சுயம் என்ற ஆழ்நிலை தளத்தில் நிலைநிறுத்தப்பட்டவர்கள், உடலின் மகிழ்ச்சியையோ அல்லது துன்பத்தையோ அடையாளம் கண்டுகொள்வதில்லை. இத்தகைய சுயத்தை உணர்ந்து அதில் நிலைநிறுத்தப்பட்டிருப்பவர்கள் உலகின் இருமைகளை உணர்கிறார்கள் ஆனால் அவற்றால் பாதிக்கப்படாமல் இருக்கிறார்கள். இதனால், அவர்கள் குணங்களின் பாதிப்புக்களுக்கு அப்பாற்பட்டவர் (நிர்குண) ஆகிறார்கள். இது அவர்களுக்கு சமமான பார்வையை அளிக்கிறது, இதன் மூலம் அவர்கள் பூமியின் ஒரு கட்டி, ஒரு கல், தங்கம், சாதகமான மற்றும் சாதகமற்ற சூழ்நிலைகள் மற்றும் விமர்சனங்கள் மற்றும் பெருமை அனைத்தையும் ஒரே மாதிரியாகப் பார்க்கிறார்கள்.

Bookmark this Verse

Sign in to save your favorite verses.

Add a Note
Swami Mukundananda
14. குண த்ரய விபாக யோகம்

Quick Jump to Any Verse

Navigate directly to the wisdom you seek

Book with feather

Stay Connected!

Verse of the Day

Start your day with the timeless inspiring wisdom from the Holy Bhagavad Gita delivered straight to your email!

Thanks for subscribing to "Bhagavad Gita - Verse of the Day"!