ஏதை1ர்விமுக்1த1: கௌ1ன்தே1ய த1மோத்3வாரைஸ்த்1ரிபி4ர்னர: |
ஆச1ரத்1யாத்1மன: ஶ்ரேயஸ்த1தோ1 யாதி1 ப1ராம் க3தி1ம் ||22||
ஏதைஹி--—இவைகளிலிருந்து; விமுக்தஹ---—விடுபட்டவர்; கௌந்தேய---—குந்தியின் மகன் அர்ஜுனன்; தமஹ-த்வாரைஹி--—இருளின் வாயில்களிலிருந்து; த்ரிபிஹி---—மூன்றிலிருந்து; நரஹ--—நபர்; ஆசரதி---— முயல்கிறார்; ஆத்மனஹ---—தன் ஆன்மாவின்; ஶ்ரேயஹ---—நலனுக்கு; ததஹ--—அதன் மூலம்; யாதி--— அடைகிறார்; பராம்---—உயர்ந்த; கதிம்--—இலக்கை.
BG 16.22: இருளின் மூன்று வாயில்களிலிருந்து விடுபட்டவர்கள் தங்கள் ஆன்மாவின் நலனுக்காக முயற்சி செய்கிறார்கள், அதன் மூலம் உயர்ந்த இலக்கை அடைகிறார்கள்.
ஏதை1ர்விமுக்1த1: கௌ1ன்தே1ய த1மோத்3வாரைஸ்த்1ரிபி4ர்னர: |
ஆச1ரத்1யாத்1மன: ஶ்ரேயஸ்த1தோ1 யாதி1 ப1ராம் க3தி1ம் ||22||
இருளின் மூன்று வாயில்களிலிருந்து விடுபட்டவர்கள் தங்கள் ஆன்மாவின் நலனுக்காக முயற்சி செய்கிறார்கள், அதன் மூலம் உயர்ந்த இலக்கை அடைகிறார்கள்.
Sign in to save your favorite verses.
Sign InStart your day with the timeless inspiring wisdom from the Holy Bhagavad Gita delivered straight to your email!
காமம், கோபம், பேராசை ஆகியவற்றைத் துறந்ததன் பலனை ஸ்ரீ கிருஷ்ணர் இந்த வசனத்தில் தருகிறார். இவை இருக்கும் வரை, ஒருவர் ப்ரேய அல்லது மகிழ்ச்சியின் மீது ஈர்க்கப்படுகிறார், அது நிகழ்காலத்தில் இனிமையாகத் தோன்றினாலும் இறுதியில் கசப்பாக மாறும். ஆனால் பொருள் சார்ந்த ஏக்கங்கள் குறையும் போது, புத்தி, பொருள் மோகத்திலிருந்து விடுபட்டு, ப் 1ரேயவின் பாதையில் செல்வதது அறிவீனமானது என்று உணர முடிகிறது. பின்னர் ஒருவர் ஶ்ரேயஹ அல்லது மகிழ்ச்சியை நோக்கி ஈர்க்கப்படுகிறார், அது நிகழ்காலத்தில் விரும்பத்தகாதது ஆனால் இறுதியில் இனிமையாகிறது. மேலும் ஶ்ரேயவிடம் ஈர்க்கப்பட்டவர்களுக்கு, அறிவொளியின் பாதை திறக்கிறது. அவர்கள் தங்கள் ஆன்மாவின் நித்திய நலனுக்காக முயற்சி செய்யத் தொடங்குகிறார்கள், அதன் மூலம் உயர்ந்த இலக்கை நோக்கி நகர்கிறார்கள்.