Contact: +91 844 894 1008
bgwebsite_logo
Bhagavad Gita
The Song of God

Bhagavad Gita: Chapter 17, Verse 3

ஸத்1த்1வானுரூபா1 ஸர்வஸ்ய ஶ்ரத்3தா44வதி1 பா4ரத1 |

ஶ்ரத்3தா4மயோ‌யம் பு1ருஷோ யோ யச்1ச்2ரத்34: ஸ ஏவ ஸ: ||3||

ஸத்வ-அனுரூபா----ஒருவரது மனதின் இயல்புக்கு ஒத்துப்போகிறது; ஸர்வஸ்ய—---அனைத்தும்; ஶ்ரத்தா---நம்பிக்கை; பவதி--—ஆகும்; பாரத—-பரத வம்சத்தின் வாரிசு அர்ஜுனன்; ஶ்ரத்தாமயஹ----:நம்பிக்கை உடையவர்; அயம்--—என்று; புருஷஹ--—மனிதர்கள்; யஹ—--யார்; யத்---ஶ்ரத்தாஹா- அவர்களின் நம்பிக்கையின் தன்மை எதுவாக இருந்தாலும்; ஸஹ--—அவர்களின்; ஏவ--—உண்மையாக; ஸஹ---- அவர்கள்.

Translation

BG 17.3: எல்லா மனிதர்களின் நம்பிக்கையும் அவர்களின் மனதின் இயல்புக்கு ஒத்துப்போகிறது. அவர்களுடைய நம்பிக்கையின் தன்மை எதுவோ அதுவே அவர்களுடைய ஆளுமையின் குணமாகிறது.

Commentary

முந்தைய வசனத்தில், நாம் அனைவரும் நம் நம்பிக்கையை எங்காவது வைத்திருக்கிறோம் என்று விளக்கப்பட்டது. நடைமுறையில் நமது வாழ்க்கையின் திசை நம் நம்பிக்கையை எங்கு வைக்க முடிவு செய்கிறோம் மற்றும் எதை நம்புகிறோம் என்பதை பொறுத்தது. உலகில் பணமே முதன்மையானது என்ற நம்பிக்கையை வளர்த்துக் கொள்பவர்கள், தங்கள் வாழ்நாள் முழுவதையும் செல்வத்தை ஈட்டுவதில் செலவிடுகிறார்கள். எல்லாவற்றையும் விட புகழே முக்கியம் என்று நம்புபவர்கள் அரசியல் பதவிகள் மற்றும் சமூக பதவிகளை அடைவதில் தங்கள் நேரத்தையும் சக்தியையும் அர்ப்பணிக்கிறார்கள். உன்னத விழுமியங்களில் நம்பிக்கை கொண்டவர்கள், அவற்றை நிலைநிறுத்துவதற்காக அனைத்தையும் தியாகம் செய்கிறார்கள். மகாத்மா காந்தி சத்ய (உண்மை) மற்றும் அஹிம்சை (அகிம்சை) ஆகியவற்றின் ஒப்பற்ற முக்கியத்துவத்தில் நம்பிக்கை கொண்டிருந்தார், மேலும் அவர் தனது நம்பிக்கையின் வலிமையால் ஒரு அகிம்சை இயக்கத்தைத் தொடங்கினார், அது உலகின் மிக சக்திவாய்ந்த சாம்ராஜ்யத்தை இந்தியாவிலிருந்து வெளியேற்றுவதில் வெற்றி பெற்றது. கடவுளை உணர்ந்து கொள்வதன் முக்கியத்துவத்தில் ஆழ்ந்த நம்பிக்கையை வளர்த்துக்கொள்பவர்கள் அவரைத் தேடுவதற்காக தங்கள் பொருள் வாழ்க்கையைத் துறக்கிறார்கள். எனவே, நமது நம்பிக்கையின் தரம் நம் வாழ்க்கையின் திசையை தீர்மானிக்கிறது என்று ஸ்ரீ கிருஷ்ணர் கூறுகிறார். மறுபுறம், நமது நம்பிக்கையின் தரம் நம் மனதின் தன்மையால் தீர்மானிக்கப்படுகிறது. மேலும், அர்ஜுனின் கேள்விக்கு பதிலளிக்கும் விதமாக, ஸ்ரீ கிருஷ்ணர் நம்பிக்கையின் வகைகளை விளக்கத் தொடங்குகிறார்.

Bookmark this Verse

Sign in to save your favorite verses.

Add a Note
Swami Mukundananda
17. ஶ்ரத்தா த்ரய விபாக யோகம்

Quick Jump to Any Verse

Navigate directly to the wisdom you seek

Book with feather

Stay Connected!

Verse of the Day

Start your day with the timeless inspiring wisdom from the Holy Bhagavad Gita delivered straight to your email!

Thanks for subscribing to "Bhagavad Gita - Verse of the Day"!