ஆஹாரஸ்த்1வபி1 ஸர்வஸ்ய த்1ரிவிதோ4 ப4வதி1 ப்1ரிய: |
யஞ்ஞஸ்த1ப1ஸ்த1தா2 தா3னம் தே1ஷாம் பே4த3மிமம் ஶ்ருணு ||7||
ஆஹாரஹ----உணவு; து----உண்மையில்; அபி—-கூட; ஸர்வஸ்ய--—அனைவருக்கும்; த்ரிவிதஹ----மூன்று வகையானது; பவதி—--ஆகும்; ப்ரியஹ----பிரியமானவரே; யஞ்ஞம்--—தியாகம்; தபஹ--—துறவரங்கள்; ததா—-மற்றும்; தானம்--—கொடை; தேஷாம்—--அவற்றின்; பேதம்--—வேறுபாடுகளை; இமம்--—இந்த; ஶ்ருணு--—கேள்.
BG 17.7: மக்கள் விரும்பும் உணவு அவரவர் விருப்பத்திற்கேற்ப உள்ளது. துறவறம் மற்றும் தொண்டு ஆகியவற்றை விரும்புவர்களுக்கும் இதுவே உண்மை (அல்லது முன்னோடியாக). இப்போது என்னிடமிருந்து வேறுபாடுகளைக் கேள்.
ஆஹாரஸ்த்1வபி1 ஸர்வஸ்ய த்1ரிவிதோ4 ப4வதி1 ப்1ரிய: |
யஞ்ஞஸ்த1ப1ஸ்த1தா2 தா3னம் தே1ஷாம் பே4த3மிமம் ஶ்ருணு ||7||
மக்கள் விரும்பும் உணவு அவரவர் விருப்பத்திற்கேற்ப உள்ளது. துறவறம் மற்றும் தொண்டு ஆகியவற்றை விரும்புவர்களுக்கும் இதுவே உண்மை (அல்லது முன்னோடியாக). இப்போது என்னிடமிருந்து வேறுபாடுகளைக் கேள்.
Sign in to save your favorite verses.
Sign InStart your day with the timeless inspiring wisdom from the Holy Bhagavad Gita delivered straight to your email!
மனமும் உடலும் ஒன்றையொன்று பாதிக்கின்றன. இவ்வாறு, மக்கள் உண்ணும் உணவு அவர்களின் இயல்புகளை பாதிக்கிறது. சா2ந்தோ3க்3ய உப1நிஷத3ம், நாம் உண்ணும் உணவின் மிகக் கரடுமுரடான பகுதி மலமாக வெளியேறுகிறது; நுட்பமான பகுதி சதையாகிறது; மேலும் நுட்பமான பகுதி மனமாக மாறுகிறது (6.5.1) என்று விளக்குகிறது . மீண்டும், அது கூறுகிறது: ஆஹார ஶுத்3தௌ4 ஸத்1த்1வ ஶுத்3தி4ஹி (7.26.2) ‘தூய்மையான உணவை உண்டால், மனம் தூய்மையடைகிறது.’ இதற்கு நேர்மாறானதும் உண்மைதான்—தூய்மையான மனம் கொண்டவர்கள் தூய்மையான உணவுகளை விரும்புகிறார்கள்.