ராகீ3 க1ர்மப2லப்1ரேப்1ஸுர்லுப்3தோ4 ஹிம்ஸாத்1மகோ1ஶுசி1: |
ஹர்ஷஶோகா1ன்வித1: க1ர்தா1 ராஜஸ: ப1ரிகீ1ர்தி1த1: ||27||
ராகீ—--ஏங்குகிற; கர்ம- ஃ பல—--செயல்களின் பலன்கள்; ப்ரேப்ஸுஹு—--பேராவலுள்ள; லுப்தஹ—--பேராசை; ஹிம்ஸா-ஆத்மகஹ—--வன்முறை-இயல்புடைய; அஶுசிஹி---தூய்மையற்ற; ஹர்ஷ-ஶோக-அன்விதஹ--- மகிழ்ச்சி மற்றும் துக்கத்தால் தூண்டப்படுபவர்; கர்தா—--செய்பவர்; ராஜஸஹ---—உணர்வு முறையில்; பரிகீர்திதஹ----அறிவிக்கப்படுகிறது
BG 18.27: செய்யும் செயல்களின் பலனை தேடும், தூய்மையற்ற, பேராசை. வன்முறை மகிழ்ச்சி மற்றும் துக்கத்தால் தூண்டப்படுபவர் உணர்ச்சியின் முறையில் கருதப்படுகிறார்.
ராகீ3 க1ர்மப2லப்1ரேப்1ஸுர்லுப்3தோ4 ஹிம்ஸாத்1மகோ1ஶுசி1: |
ஹர்ஷஶோகா1ன்வித1: க1ர்தா1 ராஜஸ: ப1ரிகீ1ர்தி1த1: ||27||
செய்யும் செயல்களின் பலனை தேடும், தூய்மையற்ற, பேராசை. வன்முறை மகிழ்ச்சி மற்றும் துக்கத்தால் தூண்டப்படுபவர் உணர்ச்சியின் முறையில் கருதப்படுகிறார்.
Sign in to save your favorite verses.
Sign In
Navigate directly to the wisdom you seek
Start your day with the timeless inspiring wisdom from the Holy Bhagavad Gita delivered straight to your email!
ஆர்வத்தின் முறையில் செயல்களை செய்பவர்கள் இங்கு விவரிக்கப்படுகிறார்கள். நன்மை முறையில் செயல்களை செய்பவர்கள் ஆன்மீக வளர்ச்சியை லட்சியமாகக் கொண்டிருக்கும்போது ஆர்வத்தின் முறையில் செயல்படுபவர்கள் பொருளியல் மேம்பாட்டை லட்சியமாகக் கொண்டுள்ளனர். இங்குள்ள அனைத்தும் தற்காலிகமானவை என்பதையும், ஒருநாள் விட்டுச் செல்ல வேண்டியிருக்கும் என்பதையும் அவர்கள் உணரவில்லை. அளவற்ற மனம் மற்றும் புலன்களின் பற்றுதலினால் (ராக்3)மூலம் கிளர்ந்தெழும் அவர்கள் தூய்மையான நோக்கம் அற்றவர்களாக இருக்கிறார்கள். தாங்கள் தேடும் இன்பம் உலக விஷயங்களில் இருப்பதாக அவர்கள் உறுதியாக நம்புகிறார்கள். எனவே, தங்கள் வழியில் வருவதைப் பற்றி ஒருபோதும் திருப்தி அடையாமல், பேராசையில் (லுப்3த4ஹ) சூழப்பட்டு இருக்கிறார்கள். மற்றவர்கள் வெற்றி பெறுவதையோ அல்லது தங்களை விட அதிகமாக மகிழ்வதையோ அவர்கள் பார்க்கும்போது, அவர்கள் வன்முறை - இயல்புடையவர்கள் ஆக ஹிம்ஸாத்1மக1ஹ ஆகிவிடுகிறார்கள். அவர்களின் நோக்கங்களை நிறைவேற்ற, அவர்கள் சில சமயங்களில் ஒழுக்கத்தை தியாகம் செய்கிறார்கள், அதனால் அஶுசி1ஹி (தூய்மையற்றவர்) ஆகிறார்கள். அவர்களின் ஆசைகள் நிறைவேறும் போது, அவர்கள் மகிழ்ச்சி அடைகிறார்கள், அவர்கள் தோல்வியுற்றால், அவர்கள் மனச்சோர்வடைகிறார்கள். இந்த வழியில், அவர்களின் வாழ்க்கை மகிழ்ச்சி மற்றும் துக்கம் (ஹர்ஷ-ஶோக1-அன்வித1ஹ) ஆகியவற்றின் கலவையாக மாறுகிறது.