ந த1த3ஸ்தி1 ப்1ருதி2வ்யாம் வா தி3வி தே3வேஷு வா பு1ன: |
ஸத்1த்1வம் ப்1ரக்1ருதி1ஜைர்முக்1த1ம் யதே3பி4: ஸ்யாத்1த்1ரிபி4ர்கு3ணை: ||40||
ந--—இல்லை; தத்—--அது; அஸ்தி--—இருக்கிறது; ப்ரிதிவ்யாம்—--பூமியில்; வா--—அல்லது;திவி--உயர்ந்த தேவலோக இருப்பிடங்கள்; தேவேஷு--—தேவர்களில்; வா--—அல்லது; புனஹ----மீண்டும்; ஸத்வம்--—இருத்தல்; ப்ரக்ருதி—ஜைஹி-----ஜட இயற்கையில் பிறந்தது; முக்தம்--—விடுடபட்ட; யத்--—அந்த; ஏபிஹி--—இவற்றின் தாக்கத்திலிருந்து; ஸ்யாத்—--ஆகும்; த்ரிபிஹி---மூன்று; குணைஹி----பொருள் இயற்கையின் முறைகள்
BG 18.40: பூமியில் உள்ள எந்த உயிரினமும் அல்லது இந்த ஜடப்பொருள் துறையின் உயர்ந்த தேவலோக இருப்பிடங்களும் இந்த மூன்று இயற்கை முறைகளின் ஆற்றலலிருந்து விடுபடவில்லை.
Start your day with a nugget of timeless inspiring wisdom from the Holy Bhagavad Gita delivered straight to your email!
ஶ்வேதா1ஶ்வத1ர உபநிஷதம், ஜட ஆற்றல், மாயா, மூன்று நிறமுடையது என்று கூறுகிறது:
அஜோ மேகா1ந் லோஹித1-ஶுக்1ல- கி1ருஷ்ணாம் ப3வீஹீ ப்1ரஜாஹா ஶ்ரீஜமானாம் ஸரூபா1ஹா
அஜோ ஹை ஏகோ1 ஜுஷமாணோ நுஶேதே1 ஜஹாத்1 யேநாம் பு4க்1த1போ4கா3ம் அஜோ ந்யஹ
(4.5)
‘பொருள் இயற்கைக்கு மூன்று வண்ணங்கள் உள்ளன - வெள்ளை, சிவப்பு மற்றும் கருப்பு, அதாவது, அதற்கு மூன்று முறைகள் உள்ளன - நன்மை, ஆர்வம் மற்றும் அறியாமை. இது பிரபஞ்சத்தில் உள்ள எண்ணற்ற உயிரினங்களின் தாயைப் போன்ற கர்ப்பப்பையாகும். அது இருத்தலுக்குக் கொண்டுவரப்பட்டு, அறிவு நிரம்பிய ஒரு பிறக்காத இறைவனால் ஆதரிக்கப்படுகிறது. இருப்பினும், கடவுள் தனது பொருள் ஆற்றலுடன் இணைவதில்லை. அவர் தனது ஆழ்நிலை பொழுதுபோக்குகளின் இன்பத்தை சுதந்திரமாக அனுபவிக்கிறார். ஆனால் ஜீவராசிகள் அதனால் பிணைக்கப்படுகின்றன.’
மாயாவின் களம் நிலவுலகுக்குக் கீழே உள்ள பகுதிகளிலிருந்து ப்ரஹ்மாவின் விண்ணுலக இருப்பிடம் வரை நீண்டுள்ளது. இயற்கையின் மூன்று முறைகளான நன்மை, ஆர்வம், மற்றும் அறியாமை (ஸ்த்வம், ரஜஸ், தமஸ்) ஆகியவை மாயாவின் உள்ளார்ந்த பண்புகளாக இருப்பதால், அவை இருப்பின் அனைத்து ஜடப்பொருள்களிலும் உள்ளன. எனவே, இந்த வசிப்பிடங்களில் உள்ள அனைத்து ஜீவராசிகளும், மனிதர்களாக இருந்தாலும் சரி, விண்ணுலகக் கடவுள்களாக இருந்தாலும் சரி, இந்த மூன்று முறைகளின் கட்டுப்பாட்டில் உள்ளன. வேறுபாடு மூன்று குணங்களின் ஒப்பீட்டு விகிதத்தில் மட்டுமே உள்ளது. நிலவுலகுக்குக் கீழே உள்ள பகுதிகளில் வசிப்பவர்கள் அறியாமை ஓங்கி உள்ளனர்; பூமியில் வசிப்பவர்கள் ஆர்வம் ஓங்கி உள்ளனர்; மேலும் விண்ணுலகில் வசிப்பவர்கள் நன்மை ஓங்கி உள்ளனர். இப்போது, இந்த மூன்று மாறுபடுதல்களை பயன்படுத்தி, மனிதர்கள் ஏன் வெவ்வேறு இயல்புகளைக் கொண்டுள்ளனர் என்பதை ஸ்ரீ கிருஷ்ணர் விளக்குகிறார்.