Contact: +91 844 894 1008
bgwebsite_logo
Bhagavad Gita
The Song of God

Bhagavad Gita: Chapter 2, Verse 39

ஏஷா தே‌1பி4ஹிதா1 ஸாங்க்2யே பு3த்3தி4ர்யோகே3 த்1விமாம் ஶ்ருணு |

பு3த்3த்4யா யுக்தோ1 யயா பா1ர்த21ர்மப3ந்த4ம் ப்1ரஹாஸ்யஸி ||39||

ஏஷா—--இதுவரை; தே—--உனக்கு; அபிஹிதா—--விளக்கப்பட்டது; ஸாங்க்யே—---பகுப்பாய்வுஅறிவு; புத்திர்யோகே—-- புத்தியின் யோகத்தால்; து—-உண்மையில்; இமாம்—--இதை; ஶ்ருணு— --கேள்; புத்த்யா—--புத்தியால்—; யுக்தஹ—-- இணைந்து; யயா—--அதனால்;பார்த---ப்ரிதாவின்-மகனே,அர்ஜுனா;கர்மபந்தம்—--செயல்களின் விளைவுகளிலிருந்து; ப்ரஹாஸ்யஸி—--நீ விடுவிக்கப்படுவாய்

Translation

BG 2.39: இதுவரை, ஆன்மாவின் தன்மையைப் பற்றிய ஸாங்க்2ய யோகம் அல்லது பகுப்பாய்வு அறிவை நான் விளக்கினேன். இப்போது, ​​ஓ பார்த், நான் புத்தி யோகம் அல்லது புத்தி யோகத்தை வெளிப்படுத்துவதைக் கேள். அப்படிப் புரிந்து கொண்டு வேலை செய்யும் பொழுது கர்ம பந்தத்திலிருந்து விடுபடுவாய்.

Commentary

ஸாங்க்2ய என்ற வார்த்தையானது ஸான், அதாவது 'முழுமையானது' மற்றும் க்2யா, அதாவது 'அறிதல்' என்பதிலிருந்து வந்தது. எனவே, ஸாங்க்யம் என்றால் ‘ஏதாவது பற்றிய முழுமையான பகுப்பாய்வு அறிவு’. இந்திய மெய்யியலில் உள்ள ஆறு தத்துவ நூல்களில் ஒன்றான ஸாங்க்ய தர்ஷன், ப்ரபஞ்சத்தில் உரு பொருள்களின் பகுப்பாய்வு கணக்கீட்டை செய்கிறது. இது இருபத்தி நான்கு உருபொருட்களைப் பட்டியலிடுகிறது: ப1ஞ்ச மஹா பூ4தங்கள் (பூமி, நீர், நெருப்பு, காற்று, மற்றும் ஆகாயம்), ப4ஞ்ச த4ன்மாத்4ரா (பொருளின் ஐந்து குணங்கள்-சுவை, தொடுதல், வாசனை, ஒலி, மற்றும் பார்வை), ப1ஞ்ச க1ர்மேந்தி3ரியம் (ஐந்து வேலை செய்யும் புலன்கள்), ப1ஞ்ச ஞானேந்தி1ரியம் (ஐந்து அறிவு புலன்கள்), மனம், அஹங்காரம் (மஹானின் பரிணாம வளர்ச்சியால் உருவாக்கப்பட்ட பொருள்), மஹான் இயற்கையின் பரிணாம வளர்ச்சியால் உருவாக்கப்பட்ட பொருள்), ப்ரக்ருதி (பொருள் ஆற்றலின் ஆதி வடிவம்). இவை தவிர பொருள் ஆற்றலை அனுபவிக்க முயன்று அதில் கட்டுண்டுகிடக்கிற புருஷ் அல்லது ஆன்மா.

ஸ்ரீ கிருஷ்ணர் அர்ஜுனனிடம் ஸாங்க்யத்தின் மற்றொரு வடிவத்தை இப்பொழுது விளக்கியுள்ளார், இது அழியாத ஆன்மாவின் பகுப்பாய்வு அறிவாகும். வெகுமதிக்கு ஆசைப்படாமல் உழைக்கும் அறிவியலை வெளிப்படுத்தப் போவதாக இப்போது கூறுகிறார். இதற்கு செயல்களின் பலன்களிலிருந்து பற்றின்மை தேவை. அத்தகைய பற்றின்மை புத்தியுடன் பாகுபாடு பயிற்சி செய்வதன் மூலம் வருகிறது. எனவே, ஸ்ரீ கிருஷ்ணர் இதை புத்தி யோகம் அல்லது 'புத்தியின் யோகம்' என்று சுவாரஸ்யமாக அழைத்தார். அடுத்து வரும் (2.41) மற்றும் (2.44), வசனங்களில் மனதைப் பற்றின்மை நிலைக்குக் கொண்டுவருவதில் புத்தியின் பங்கை விளக்குகிறார்.

Bookmark this Verse

Sign in to save your favorite verses.

Add a Note
Swami Mukundananda
2. ஸாங்கிய யோகம்

Quick Jump to Any Verse

Navigate directly to the wisdom you seek

Book with feather

Stay Connected!

Verse of the Day

Start your day with the timeless inspiring wisdom from the Holy Bhagavad Gita delivered straight to your email!

Thanks for subscribing to "Bhagavad Gita - Verse of the Day"!