அர்ஜுன உவாச1 |
க1த2ம் பீ4ஷ்மமஹம் ஸாங்க்2யே த்3ரோணம் ச1 மது4ஸூத3ன |
இஷுபி4: ப்1ரதி1யோத்1ஸ்யாமி பூ1ஜார்ஹாவரிஸூத3ன ||4||
அர்ஜுனஹ உவாச-—-அர்ஜுனன் கூறினார்; கதம்-—-எவ்வாறு; பீஷ்மம்-—-பீஷ்மரை; அஹம்-—-நான்; ஸாங்க்யே-—-போரில்; த்ரோணம்-—-த்ரோணாசாரியரை; ச-—மற்றும்; மது-ஸூதன-—மது எனும் அரக்கனை வதைத்த ஸ்ரீகிருஷ்ணா; இஷுபிஹி-—-அம்புகளை; ப்ரதியோத்ஸ்யாமி-—-எய்வேன்; பூஜா-அர்ஹௌ-—-வழிபாட்டிற்குரிய; அரிஸூதன-—-எதிரிகளை அழிப்பவரே
BG 2.4: அர்ஜுனன் கூறினார்: ஓ மதுஸூதனா, எதிரிகளை அழிப்பவரே, என் வழிபாட்டிற்குரிய பீஷ்மர், துரோணாச்சாரியர் போன்ற பெரியோர்களின் மீது நான் எவ்வாறு அம்புகளை எய்வது?
அர்ஜுன உவாச1 |
க1த2ம் பீ4ஷ்மமஹம் ஸாங்க்2யே த்3ரோணம் ச1 மது4ஸூத3ன |
இஷுபி4: ப்1ரதி1யோத்1ஸ்யாமி பூ1ஜார்ஹாவரிஸூத3ன ||4||
அர்ஜுனன் கூறினார்: ஓ மதுஸூதனா, எதிரிகளை அழிப்பவரே, என் வழிபாட்டிற்குரிய பீஷ்மர், துரோணாச்சாரியர் போன்ற பெரியோர்களின் மீது நான் எவ்வாறு அம்புகளை எய்வது?
Sign in to save your favorite verses.
Sign In
Navigate directly to the wisdom you seek
Start your day with the timeless inspiring wisdom from the Holy Bhagavad Gita delivered straight to your email!
ஸ்ரீ கிருஷ்ணரின் நடவடிக்கைக்கான அழைப்பிற்கு பதிலளிக்கும் விதமாக, அர்ஜுனன் தனது குழப்பத்தை முன்வைக்கிறார். பீஷ்மரும் துரோணாச்சாரியாரும் தனது மரியாதைக்கும் வணக்கத்திற்கும் தகுதியானவர்கள் என்று அவர் கூறுகிறார். பீஷ்மர் தற்கட்டுப்பாட்டின் உறுப்பிடமாக இருந்தார். மேலும், அவர் தனது தந்தைக்கு செய்த சத்தியத்தை நிறைவேற்றுவதற்காக வாழ்நாள் முழுவதும் ப்ரஹ்மச்சாரியாக இருந்தார். அர்ஜுனின் இராணுவ ஆசான், துரோணாச்சாரியர், போர் அறிவியலில் ஒரு மேதை. அவரிடமிருந்து அர்ஜுனன் வில்வித்தையில் தேர்ச்சி பெற்றார். மறுபுறம், மற்றொரு மரியாதைக்குரிய, கிருபாச்சாரியரை அர்ஜுனன் எப்பொழுதும் வணங்கினார். உயர்ந்த தகுதியுடைய இந்த மனிதர்களை எதிரிகளாகக் கருதுவது உன்னத மனதுடைய அர்ஜுனனுக்கு சகிக்க முடியாததாக தோன்றியது. இந்த மரியாதைக்குரிய பெரியவர்களுடன் வாக்குவாதம் செய்வது கூட முறையற்றது என்றால், ஆயுதங்கள் கொண்டு அவர்களை தாக்குவதை எவ்வாறு கருத்தில் கொண்டு வருவது? அவருடைய கூற்று இவ்வாறு உணர்த்துகிறது, ‘ஓ கிருஷ்ணா, தயவுசெய்து என் தைரியத்தை சந்தேகிக்காதே. நான் போராட தயாராக இருக்கிறேன். ஆனால், தார்மீகக் கடமையின் கண்ணோட்டத்தில், எனது ஆசிரியர்களை மதிப்பதும், த்ருதராஷ்டிரரின் மகன்களிடம் கருணை காட்டுவதும் எனது கடமையாகும்.’