Contact: +91 844 894 1008
bgwebsite_logo
Bhagavad Gita
The Song of God

Bhagavad Gita: Chapter 2, Verse 42-43

யாமிமாம் பு1ஷ்பி1தா1ம் வாச1ம் ப்1ரவத3ன்த்1யவிப1ஶ்சி11: |

வேத3வாத3ரதா1: பா1ர்த2 நான்யத3ஸ்தீ1தி1 வாதி3ன: ||42||
கா1மாத்1மான: ஸ்வர்க31ரா ஜன்மக1ர்மப2லப்1ரதா3ம் |

க்1ரியாவிஶேஷப3ஹுலாம் போ4கை3ஶ்வர்யக3தி1ம் ப்1ரதி1 ||43||

யாமிமாம்—--இவர்கள் அனைவரும்; புஷ்பிதாம்—--சொல்நயமிக்க; வாசம்--—வார்த்தைகள்; ப்ரவதன்தி--— பேசுகிறார்கள் ; அவிபஶ்சிதஹ—--வரையறுக்கப்பட்ட புரிதல் கொண்டவர்கள் ; வேத-வாத-ரதாஹா--— வேதங்களின் சொல்நயமிக்க வார்த்தைகளுடன் இணைக்கப்பட்டு; பார்த--—ப்ரிதாவின் மகனே, அர்ஜுனா; ந அன்யத்—-வேறு இல்லை;அஸ்தி-—ஆகும்; இதி—-- இவ்வாறு வாதினஹ—--வாதிடுகிறார்கள்; காம-ஆத்மானஹ—-- புலன்களின் இன்பத்தை விரும்புபவர்; ஸ்வர்கபராஹா --—தேவலோக உறைவிடங்களை அடைவதை நோக்கமாக கொண்டது; ஜன்ம-கர்மபல—--உயர் பிறப்பு மற்றும் பலன்கள்; ப்ரதாம்--—அடையும் பொருட்டு; க்ரிய-விஶேஷ—--ஆடம்பரமான சடங்குகள்; பஹுலாம்--—பல்வேறு ;போக--—மனநிறைவு; ஐஶ்வர்ய—-- ஆடம்பரம்;; கதிம்—--முன்னேறுகிறார்கள்; ப்ரதி—--நோக்கி.

Translation

BG 2.42-43: வரையறுக்கப்பட்ட புரிதல் கொண்டவர்கள், வேதங்களின் சொல்நயமிக்க வார்த்தைகளால் ஈர்க்கப்படுகிறார்கள், இது தேவலோக வசிப்பிடங்களுக்கு உயர்த்துவதற்கான ஆடம்பரமான சடங்குகளை பரிந்துரைக்கிறது; மற்றும், அவற்றில் எந்த உயர்ந்த கொள்கையும் விவரிக்கப்படவில்லை என்று மெய்யெனக்க கொள்கிறார்கள். அவர்கள் தங்கள் புலன்களை மகிழ்விக்கும் வேதங்களின் பகுதிகளை மட்டுமே மகிமைப்படுத்துகிறார்கள்; மற்றும் உயர் பிறப்பு, செழுமை, புலனின்பம் மற்றும் தேவலோக உறைவிடங்களுக்கு உயர்வு ஆகியவற்றை அடைவதற்காக ஆடம்பரமான சடங்குகளைச் செய்கிறார்கள்.

Commentary

வேதங்கள் மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. அவை: கர்ம-காண்டம் (சடங்கு முறைகள் கொண்ட சடங்குகள் பிரிவு), ஞான-காண்டம் (அறிவுப் பிரிவு), மற்றும் உபாஸனா-காண்டம் (பக்திப் பிரிவு). கர்ம-காண்டப் பிரிவு, பொருள் வெகுமதிகளுக்காகவும், தேவலோக உறைவிடங்களுக்கு பதவி உயர்வுக்காகவும் சடங்கு சம்பிரதாயங்களைச் செய்ய வேண்டும் என்று பரிந்துரைக்கிறது. புலன்களின் இன்பத்தை விரும்புபவர்கள் வேதங்களின் இந்தப் பகுதியைப் போற்றுகிறார்கள்.

தேவலோக உறைவிடங்கள் அதிக பொருள் ஆடம்பரங்களைக் கொண்டிருக்கின்றன மற்றும் புலன்களின் இன்பத்திற்கான அதிக வசதிகளை வழங்குகின்றன. ஆனால் தேவலோக வாசஸ்தலங்களுக்கு உயர்வு என்பது ஒரே நேரத்தில் ஆன்மீக உயர்வைக் குறிக்காது. இந்த தேவலோக தளங்களும் ஜடப் பிரபஞ்சத்திற்குள் உள்ளன, அங்கு சென்ற பிறகு, ஒருவரின் நல்ல கர்மங்களின் கணக்கு தீர்ந்துவிட்டால், ஒருவர் மீண்டும் பூமி கிரகத்துக்கு திரும்புகிறார். வரையறுக்கப்பட்ட புரிதல் கொண்டவர்கள், வேதங்களின் முழு நோக்கமும் இதுதான் என்று நினைத்து, தேவலோக உறைவிடங்களுக்காகப் பாடுபடுகிறார்கள். இந்த வழியில், அவர்கள் கடவுள்-உணர்தலுக்காக முயற்சி செய்யாமல் வாழ்க்கை மற்றும் இறப்பு சுழற்சியில் தொடர்ந்து கடந்து செல்கிறார்கள். இருப்பினும், ஆன்மீக ஞானம் உள்ளவர்கள் சொர்க்கத்தைக் கூட தங்கள் இலக்காகக் கொள்ள மாட்டார்கள். முண்ட3கோ11நிஷத3ம் கூறுகிறது: 

அவித்3யாயாமந்த1ரே வர்த1மானாஹா ஸ்வயம்தீ4ராஹா ப1ண்டித1ம் மன்யமானாஹா

ஜங்க4ன்யமானாஹா ப1ரியந்தி1 மூடா4ஹா அந்தே4னைவ நீயமானா யதா2ந்தா4ஹா (1.2.8)

‘வேதங்களில் கூறப்பட்டுள்ள ஆடம்பரமான சடங்குகளை மேற்கொள்பவர்கள், தேவலோக உறைவிடங்களின் உயர்ந்த சுகங்களை அனுபவிப்பதற்காக, தங்களை வேதம் கற்றவர்கள் என்று நினைத்துக் கொள்கிறார்கள், ஆனால் உண்மையில் அவர்கள் அறியாமையால் சூழப்பட்டவர்கள். இது ஒரு குருடர் மற்றொரு குருடரை வழிநடத்துவது போலாகும்.'

Bookmark this Verse

Sign in to save your favorite verses.

Add a Note
Swami Mukundananda
2. ஸாங்கிய யோகம்

Quick Jump to Any Verse

Navigate directly to the wisdom you seek

Book with feather

Stay Connected!

Verse of the Day

Start your day with the timeless inspiring wisdom from the Holy Bhagavad Gita delivered straight to your email!

Thanks for subscribing to "Bhagavad Gita - Verse of the Day"!