Contact: +91 844 894 1008
bgwebsite_logo
Bhagavad Gita
The Song of God

Bhagavad Gita: Chapter 4, Verse 9

ஜன்ம க1ர்ம ச1 மே தி3வ்யமேவம் யோ வேத்1தி11த்1த்1வத1: |

த்1யக்1த்1வா தே3ஹம் பு1னர்ஜன்ம னைதி1 மாமேதி1 ஸோ‌ர்ஜுன ||
9 |

ஜன்ம——பிறப்பு; கர்ம——செயல்பாடுகள்; ச———மற்றும்; மே-——என்னுடைய; திவ்யம்—தெய்வீகம; ஏவம்——இவ்வாறு; யஹ——யார்; வேத்தி——-அறிக; தத்வதஹ——--உண்மையில்; த்யக்த்வா——-கைவிட்டு; தேஹம்———உடல்; புனஹ———மீண்டும்; ஜன்ம——-பிறப்பு; ந——-ஒருபோதும் இல்லை; ஏதி——எடுக்கிறது; மாம்——என்னிடம்; ஏதி——வருகிறது; ஸஹ——அவர்; அர்ஜுனா——அர்ஜுனன்

Translation

BG 4.9: ஓ அர்ஜுனா, எனது பிறப்பு மற்றும் செயல்பாடுகளின் தெய்வீக தன்மையைப் புரிந்து கொள்பவர்கள், உடலை விட்டு வெளியேறிய பிறகு, மீண்டும் பிறக்க வேண்டியதில்லை, ஆனால் எனது நித்திய இருப்பிடத்திற்கு வருவார்கள்.

Commentary

இந்த வசனத்தை முந்தைய வசனத்தின் சந்தர்ப்ப சூழ்நிலையில் புரிந்து கொள்ளுங்கள். இறைவனை பக்தியுடன் நினைவுகூறுவதன் மூலம் நமது மனம் தூய்மையடைகிறது. இந்த பக்தி கடவுளின் உருவமற்ற அம்சத்தை நோக்கியோ அல்லது அவரது தனிப்பட்ட வடிவத்தை நோக்கியோ இருக்கலாம். உருவமற்றவர்களிடம் பக்தி என்பது பெரும்பாலான மக்களுக்கு உணர முடியாதாகவும், தெளிவற்றதாகவும் இருக்கிறது. அவர்கள் அத்தகைய பக்தி தியானத்தின் போது கவனம் செலுத்தவோ அல்லது தொடர்பில் உணரவோ எதையும் காணவில்லை. மறுபுறம், கடவுளின் தனிப்பட்ட வடிவத்தின் மீதான பக்தி உறுதியானது மற்றும் எளிமையானது. அத்தகைய பக்திக்கு கடவுளின் ஆளுமையின் மீது தெய்வீக உணர்வுகள் தேவை. மக்கள் ஸ்ரீ கிருஷ்ணரிடம் பக்தியில் ஈடுபடுவதற்கு, அவருடைய பெயர்கள், வடிவம், குணங்கள், பொழுதுபோக்குகள், இருப்பிடங்கள் மற்றும் கூட்டாளிகள் மீது தெய்வீக உணர்வுகளை வளர்த்து கொள்ள வேண்டும். உதாரணமாக, கல் தெய்வங்களை வணங்குவதன் மூலம் மக்கள் தங்கள் மனதைத் தூய்மைப்படுத்துகிறார்கள், ஏனென்றால் கடவுள் இந்த தெய்வங்களில் வசிக்கிறார் என்ற தெய்வீக உணர்வுகளை அவர்கள் கொண்டுள்ளனர். இந்த உணர்வுகளே பக்தனின் மனதை தூய்மைப்படுத்துகின்றன. மரபுமூல முன்னோடியான மனு கூறுகிறார்:

ந கா1ஷ்டே2 வித்4யதே1 தே1வோ ந ஶிலாயாம் ந ம்ருத்1ஸு ச1

பா4வே ஹி வித்4யதே1 தே3வஸ்த1ஸ்மாத்1பா4வம் ஸமாச1ரேத்1

'கடவுள் மரத்திலோ, கல்லிலோ வசிக்கவில்லை, பக்தி நிறைந்த உள்ளத்தில் இருக்கிறார். எனவே, தெய்வத்தை அன்பான உணர்வுகளுடன் வழிபடுங்கள்.'

அவ்வாறே, பகவான் ஸ்ரீ கிருஷ்ணரிடம் பக்தியில் ஈடுபட விரும்பினால், அவருடைய தெய்வீக பொழுது போக்குகளில் தெய்வீக உணர்வுகளை வளர்த்துக்கொள்ள நாம் கற்றுக் கொள்ள வேண்டும். மகாபாரதத்திற்கும், பகவத் கீதைக்கும் உருவகமான விளக்கம் அளிக்கும் அந்த வர்ணனையாளர்கள், ஸ்ரீ கிருஷ்ணரின் பக்தியின் மீதான மக்களின் நம்பிக்கையின் அடிப்படையை அழித்து பெரும் அநீதி இழைக்கிறார்கள். நமது பக்தியை அதிகரிக்க, இந்த வசனத்தில், ஸ்ரீ கிருஷ்ணர் தனது பொழுது போக்குகளுக்கு தெய்வீக உணர்வுகளின் அவசியத்தை வலியுறுத்தியுள்ளார்.

இத்தகைய தெய்வீக உணர்வுகளை வளர்க்க, கடவுளின் செயல்களுக்கும் நம்முடைய செயல்களுக்கும் உள்ள வித்தியாசத்தை நாம் புரிந்து கொள்ள வேண்டும். பொருள்சார் ஆன்மாக்களாகிய நாம் இன்னும் தெய்வீக பேரின்பத்தை அடையவில்லை, எனவே, நமது ஆன்மாவின் ஏக்கம் இன்னும் தணியவில்லை. எனவே, நமது செயல்கள் சுயநலம் மற்றும் தனிப்பட்ட நிறைவேற்றத்திற்கான ஆசை ஆகியவற்றால் தூண்டப்படுகின்றன. இருப்பினும், கடவுளின் செயல்களுக்கு தனிப்பட்ட நோக்கம் இல்லை, ஏனென்றால் அவர் தனது சொந்த ஆளுமையின் எல்லையற்ற பேரின்பத்தால் முழுமையாக திருப்தி அடைந்துள்ளார். செயல்களைச் செய்வதன் மூலம் அவர் மேலும் தனிப்பட்ட பேரின்பத்தை அடைய வேண்டிய அவசியமில்லை. எனவே, அவர் எதைச் செய்தாலும் அது பொருள்சார் ஆன்மாக்களின் நலனுக்காகவே. கடவுள் செய்யும் இத்தகைய தெய்வீக செயல்கள் 'லீலைகள்' என்றும், நாம் செய்யும் செயல்கள் 'வேலை' என்றும் அழைக்கப்படுகின்றன.

அவ்வாறே, கடவுளின் பிறப்பும் தெய்வீகமானது, நம்மைப்போல் ஒரு பெண்ணிடமிருந்து உடல்ரீதியாக ஏற்படுவதில்லை. தாயின் வயிற்றில் தலைகீழாகத் தொங்க வேண்டும் என்ற தேவை எல்லாம் பேரின்பமிக்க இறைவனுக்கு இல்லை. பாகவதம் கூறுகிறது:

1ம் அத்3பூ41ம் பா3லக1ம் அம்பு3ஜேக்ஷணணம்

1துர்-பு4ஜம் ஶங்க23தா3ர்யுதா3யுத4ம் (10.3.9)

‘வஸுதேவர் மற்றும் தேவகிக்கு முன் தன் பிறப்பின் சமயம் ஸ்ரீ கிருஷ்ணர் தன்னை பிரகடனப்படுத்தியபோது, ​​அவர் தனது நான்கு கரங்களுடன் கூடிய விஷ்ணு வடிவில் இருந்தார்.’ இந்த முழு அளவிலான வடிவம் நிச்சயமாக தேவகியின் வயிற்றில் இருந்திருக்காது. இருப்பினும், அவர் அங்கே இருக்கிறார் என்ற உணர்வை தேவகிக்குள் உண்டாக்க, அவருடைய யோகமாயா சக்தியால், தேவகியின் கர்ப்பப்பையை எளிதாக விரிவுபடுத்திக் கொண்டே இருந்தார். இறுதியாக, தன்னை வெளியிலிருந்து பிரகடனப்படுத்தி, அவர் தேவகிக்குள் இருந்ததில்லை என்பதை வெளிப்படுத்தினார்

ஆவிராஸீத்3 யதா1 ப்1ராச்1யாம் தி3ஶீந்து3ர் இவ பு1ஷ்க1லஹ

(பா43வத1ம் 10.3.8)

‘இரவு வானில் சந்திரன் தன் முழு மகிமையில் வெளிப்படுவது போல, தேவகி மற்றும் வஸுதேவருக்கு முன்பாக ஸ்ரீ கிருஷ்ணர் காட்சியளித்தார்.’ இது கடவுளின் பிறப்பின் தெய்வீக இயல்பு. அவருடைய பொழுது போக்குகள் மற்றும் பிறப்பின் தெய்வீகத்தன்மையில் நாம் நம்பிக்கையை வளர்த்துக் கொள்ள முடிந்தால், அவருடைய தனிப்பட்ட வடிவத்தில் பக்தியை எளிதில் ஈடுபடுத்தி, உன்னத இலக்கை அடைய முடியும்.

Bookmark this Verse

Sign in to save your favorite verses.

Add a Note
Swami Mukundananda
4. ஞான கர்ம ஸன்யாஸ யோகம்

Quick Jump to Any Verse

Navigate directly to the wisdom you seek

Book with feather

Stay Connected!

Verse of the Day

Start your day with the timeless inspiring wisdom from the Holy Bhagavad Gita delivered straight to your email!

Thanks for subscribing to "Bhagavad Gita - Verse of the Day"!