Contact: +91 844 894 1008
bgwebsite_logo
Bhagavad Gita
The Song of God

Bhagavad Gita: Chapter 5, Verse 13

ஸர்வக1ர்மாணி மனஸா ஸன்யஸ்யாஸ்தே1 ஸுக2ம் வஶீ |

நவத்3வாரே பு1ரே தே3ஹீ நைவ கு1ர்வன்ன கா1ரயன் || 13 ||

ஸர்வ--—அனைத்து; கர்மாணி--—செயல்பாடுகளை; மனஸா—--மனதால்; ஸன்யஸ்ய—--துறந்து; ஆஸ்தே--—இருந்து; ஸுகம்---—மகிழ்ச்சியுடன்; வஶீ--—தன்னைக் கட்டுப்படுத்துபவர்; நவ-துவாரே—---ஒன்பது வாயில்களின்; புரே--—நகரத்தில்; தேஹீ--—உடலுள்ளவர்; ந—-ஒருபோதும் இல்லை; ஏவ—--நிச்சயமாக; குர்வன்--—எதையும் செய்வது; ந--—இல்லை; காரயன்---செயலின் காரணமாகவும்

Translation

BG 5.13: உடல் உற்ற ஆன்மாக்கள் பற்றற்று தன்னடக்கத்துடன் தாங்கள் எதையும் செய்தவர்கள் அல்ல என்ற எண்ணங்களோடு ஒன்பது வாயில்கள் கொண்ட நகரத்தில் மகிழ்ச்சியுடன் வாழ்கின்றனர்

Commentary

ஸ்ரீ கிருஷ்ணர் உடலை அதன் திறப்புகளுடன் ஒன்பது வாயில்கள் கொண்ட நகரத்துடன் ஒப்பிடுகிறார். ஆன்மா நகரத்தின் ராஜாவைப் போன்றது, அதன் நிர்வாகம் அஹங்காரம், புத்தி, மனம், புலன்கள் மற்றும் உயிர் ஆற்றல் ஆகியவற்றின் அமைச்சகத்தால் மேற்கொள்ளப்படுகிறது. உடலின் மீதான ஆட்சி காலமானது, மரணத்தின் வடிவத்தில், உடலை பறிக்கும் வரை தொடர்கிறது. இருப்பினும், ஆட்சி தொடரும் போதும், அறிவொளி பெற்ற யோகிகள் தங்களை உடலாகப் பார்ப்பதுமில்லை, தங்களை உடலின் அதிபதியாகக் கருதுவதுமில்லை. மாறாக, அவர்கள் உடலையும் அதன் மூலம் செய்யப்படும் அனைத்து செயல்களையும் கடவுளுடன் தொடர்புடையதாகக் கருதுகிறார்கள். மனதின் மூலம் அனைத்து செயல்களையும் துறந்து, அத்தகைய ஞானம் பெற்ற ஆன்மாக்கள் தங்கள் உடலில் மகிழ்ச்சியுடன் உள்ளன. இது ஸாக்ஷி பாவ் அல்லது நடு உணர்வுநிலை என்றும் அழைக்கப்படுகிறது, இது சுற்றி நடக்கும் அனைத்தையும் நடு நிலையுடன் கவனிக்கும் மனப்பான்மையாகும். இந்த வசனத்தில் உள்ள ஒப்புமை ஶ்வேதா1ஶ்வத1ர உப1நிஷத3த்திலும் கொடுக்கப்பட்டுள்ளது:

`நவத்3வாரே பு1ரே தே3ஹி ஹன்ஸோ லெலாயதே13ஹிஹி

வஶீ ஸர்வஸ்ய லோக1ஸ்ய ஸ்தா2வரஸ்ய ச1ரஸ்ய ச1 (3.18)

'உடல் ஒன்பது வாயில்களைக் கொண்டுள்ளது - இரண்டு காதுகள், ஒரு வாய், இரண்டு நாசி, இரண்டு கண்கள், ஆசனவாய் மற்றும் பிறப்புறுப்பு. பொருள் உணர்வில், உடலுக்குள் வசிக்கும் ஆன்மா, ஒன்பது வாயில்களைக் கொண்ட இந்த நகரத்துடன் தன்னை அடையாளப்படுத்திக் கொள்கிறது. இந்த உடலுக்குள்ளேயே உலகில் உள்ள அனைத்து உயிர்களையும் கட்டுப்படுத்தும் ஒப்புயர்வற்ற பகவான் அமர்ந்திருக்கிறார். ஆன்மா இறைவனுடன் தனது தொடர்பை ஏற்படுத்திக் கொள்ளும்போது, ​​உடலில் தங்கியிருக்கும்போதும் அது அவரைப் போலவே சுதந்திரமாகிறது.

இந்த வசனத்தில், ஸ்ரீ கிருஷ்ணர், உடலுள்ள ஆத்மா எதையும் செய்பவரும் அல்ல, காரணமும் அல்ல என்று அறிவித்தார். அப்படியானால் உலகில் நடக்கும் செயல்களுக்குக் கடவுள்தான் காரணமா என்ற கேள்வி எழுகிறது. இதற்கு அடுத்த வசனத்தில் பதில் அளிக்கப்படுகிறது

Bookmark this Verse

Sign in to save your favorite verses.

Add a Note
Swami Mukundananda
5. கர்ம ஸன்யாஸ யோகம்

Quick Jump to Any Verse

Navigate directly to the wisdom you seek

Book with feather

Stay Connected!

Verse of the Day

Start your day with the timeless inspiring wisdom from the Holy Bhagavad Gita delivered straight to your email!

Thanks for subscribing to "Bhagavad Gita - Verse of the Day"!