ஶக்1னோதீ1ஹைவ ய: ஸோடு4ம் ப்1ராக்1ஶரீரவிமோக்ஷணாத்1 |
கா1மக்1ரோதோ4த்3ப4வம் வேக3ம் ஸ யுக்1த1: ஸ ஸுகீ2 நர: ||23||
ஶக்னோதி—--முடியும்; இஹ ஏவ--—தற்போதைய உடலில்; யஹ—--யார்; ஸோடும்—--தாங்குவதற்கு; ப்ராக்—--முன்னால்; ஶரீர—--உடல்; விமோக்ஷானாத்—--விட்டுவிடுவதற்கு; காம--—ஆசையினால்; க்ரோத-—கோபத்தினால்; உத்பவம்—---உருவாகும்; வேகம்--—உந்துதலை; ஸஹ—--அந்த நபர்; யுக்தஹ—--யோகி; ஸஹ—--அந்த நபர்; ஸுகி—--மகிழ்ச்சியான; நரஹ----நபர்
BG 5.23: உடலை விடும் முன் ஆசை மற்றும் கோபத்தின் சக்திகளை தடுக்க முடிந்தவர்கள் யோகிகள்; அவர்கள் மட்டும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள்.
ஶக்1னோதீ1ஹைவ ய: ஸோடு4ம் ப்1ராக்1ஶரீரவிமோக்ஷணாத்1 |
கா1மக்1ரோதோ4த்3ப4வம் வேக3ம் ஸ யுக்1த1: ஸ ஸுகீ2 நர: ||23||
உடலை விடும் முன் ஆசை மற்றும் கோபத்தின் சக்திகளை தடுக்க முடிந்தவர்கள் யோகிகள்; அவர்கள் மட்டும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள்.
Sign in to save your favorite verses.
Sign InStart your day with the timeless inspiring wisdom from the Holy Bhagavad Gita delivered straight to your email!
மனித உடல், ஆன்மா கடவுளை உணர்தல் என்ற உயர்ந்த இலக்கை அடைய ஒரு பொன்னான வாய்ப்பை வழங்குகிறது. இந்த உடலில், விலங்குகள் அவற்றின் இயல்பால் இயக்கப்படும்போது, பாகுபாடு காட்டும் திறன் நம்மிடம் உள்ளது. ஆசை மற்றும் கோபத்தின் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்த இந்த பாகுபாட்டின் சக்தி பயன்படுத்தப்பட வேண்டும் என்று ஸ்ரீ கிருஷ்ணர் வலியுறுத்துகிறார்.
காம் என்ற வார்த்தையின் ஒரு பொருள் காமம், ஆனால் இந்த வசனத்தில், காம் என்பது உடல் மற்றும் மனதின் அனைத்து வகையான ஆசைகளுக்கும் பொருள் இன்பங்களுக்க்கும் பயன்படுத்தப்படுகிறது. மனம் அதன் விருப்பத்தின் பொருளை அடையாதபோது, அதன் நிலையை மாற்றியமைக்க அது கோபத்தை வெளிப்படுத்தகிறது. ஆசை மற்றும் கோபத்தின் தூண்டுதல்கள் ஆற்றின் வலுவான நீரோட்டத்தைப் போல மிகவும் சக்திவாய்ந்தவை. விலங்குகள் கூட இந்த தூண்டுதல்களுக்கு உட்பட்டவை, ஆனால் மனிதர்களைப் போலல்லாமல், அவற்றைக் கட்டுப்படுத்துவதற்கான பாகுபாடு அவர்களுக்கு வழங்கப்படவில்லை. இருப்பினும், மனித அறிவுக்கு பாகுபாடு காட்டும் ஆற்றல் வழங்கப்பட்டுள்ளது.
ஸோத்3 என்ற சொல்லுக்கு ‘தாங்ககுதல்’ என்று பொருள். ஆசை மற்றும் கோபத்தின் தூண்டுதல்களைத் தாங்கிக்கொள்ள இந்த வசனம் நமக்கு அறிவுறுத்துகிறது. சில நேரங்களில் ஒருவர் வெட்கத்தால் மனதின் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துகிறார். விமான நிலையத்தில் ஒருவர் அமர்ந்திருக்கிறார் என்று சொல்லலாம். அவர் பக்கத்தில் ஒரு அழகான பெண் வந்து அமர்ந்தார். அவர் மனம் அவரைச்சுற்றி கை வைப்பதில் இன்பத்தை விரும்புகிறது, ஆனால் அறிவாளியோ, ‘இது முறையற்ற நடத்தை. அந்தப் பெண்மணி என்னை அறைந்திருக்கலாம்.’ என்று யோசித்து அவர் தணிக்கையின் அவமானத்தைத் தவிர்ப்பதற்காக தன்னைத்தானே கட்டுப்படுத்திக் கொள்கிறார். இங்கு ஸ்ரீ கிருஷ்ணர் அர்ஜுனனிடம் சங்கடம், அல்லது பயம் ஆகியவற்றால் மனதைக் கட்டுபடுத்த சொல்லாமல், மாறாக அறிவின் அடிப்படையில் பாகுபாடு காட்டுகிறார்.
மனதைக் கட்டுப்பாட்டுக்குள் வைக்க உறுதியான புத்தியைப் பயன்படுத்த வேண்டும். பொருள் இன்பத்தை அனுபவிக்க வேண்டும் என்ற எண்ணம் மனதில் தோன்றியவுடன், இவையே துன்பத்திற்கு ஆதாரம் என்ற அறிவை புத்திக்கு கொண்டு வர வேண்டும். ஸ்ரீமத் பாகவதம் கூறுகிறது:
நாயம் தே3ஹோ தே3ஹ-பா4ஜாம் ந்ரிலோகே1
க1ஷ்டான் கா1மான் அர்ஹதே1 விட்3-பூ4ஜாம் யே
த1போ தி3வ்யம் பு1த்ரகா1 யேன ஸத்1வம்
ஶுத்3த்4யேத்4 யஸ்மாத்3 ப்3ரஹ்ம- ஸௌகி2யம் த்1வனந்த1ம் (5.5.1)
‘மனித உருவில், மலத்தை (பன்றிகள்) உண்ணும் உயிரினங்களுக்குக் கூடக் கிடைக்கும் சிற்றின்ப இன்பங்களைப் பெறுவதற்குப் பெரும் கஷ்டங்களைச் செய்யக் கூடாது. மாறாக, ஒருவன் தன் இதயத்தைத் தூய்மைப்படுத்தி, கடவுளின் எல்லையற்ற பேரின்பத்தை அனுபவிக்க துறவுகளைக் கடைப்பிடிக்க வேண்டும்.’ மனித உடல் இருக்கும் போது மட்டுமே பாகுபாட்டைக் கடைப்பிடிக்கும் இந்த வாய்ப்பு கிடைக்கும், மேலும் வாழும் போது ஆசை மற்றும் கோபத்தின் சக்திகளைக் கட்டுப்படுத்தக்கூடிய ஒருவன் யோகியாகிறார். அத்தகைய நபர் மட்டுமே தெய்வீக பேரின்பத்தை அனுபவித்து மகிழ்ச்சியடைகிறார்.