Contact: +91 844 894 1008
bgwebsite_logo
Bhagavad Gita
The Song of God

Bhagavad Gita: Chapter 6, Verse 1

ஶ்ரீப43வானுவாச1 |

அனாஶ்ரித1: க1ர்மப2லம் கா1ர்யம் க1ர்ம க1ரோதி1 ய: |

ஸ ஸன்யாஸீ ச1 யோகீ31 ந னிரக்3னிர்ன சா1க்1ரிய: || 1 ||

ஶ்ரீ-பகவான் உவாச—--ஒப்புயர்வற்ற பகவான் கூறினார்; அநாஶ்ரித--—விருப்பமின்றி; கர்ம-ஃபலம்—--செயல்களின் பலன்கள்; கார்யம்----கடமை;கர்மா—--வேலை; கரோதி--—செய்; யஹ---எவரொருவர்; ஸஹ--—அந்த நபர்; ஸன்யாஸ---—துறவறத்தில்; ச--—மற்றும்; யோகீ--—யோகி; ச—--மற்றும்; ந--—இல்லை; நிஹி--—இல்லாமல்; அக்னிஹி-——நெருப்பு; ந--—இல்லை; ச—--மேலும்; அக்ரியஹ---செயலற்று

Translation

BG 6.1: ஒப்புயர்வற்ற பகவான் கூறினார்: தங்கள் செயல்களின் முடிவுகளை விரும்பாமல் விதிக்கப்பட்ட கடமைகளைச் செய்பவர்கள் உண்மையான ஸ்ந்யாஸிகள் (துறந்தவர்கள்) மற்றும் யோகிகள், அக்னிஹோத்ர யாகம் போன்ற யாகங்களைச் செய்வதை நிறுத்தியவர்கள் அல்லது உடல் செயல்பாடுகளைக் கைவிட்டவர்கள் அல்ல.

Commentary

வேதங்களில் விவரிக்கப்பட்டுள்ள சடங்கு நடவடிக்கைகளில் அக்3னிஹோத்1ர யாக3ம் போன்ற அக்னி தியாகங்கள் அடங்கும். ஸன்யாஸத்தின் துறவறத்தில் பிரவேசிப்பவர்களுக்கான விதிகள், சடங்குகளைச் செய்யக் கூடாது என்று கூறுகின்றன; உண்மையில், அவர்கள் சமைக்கும் நோக்கத்திற்காக கூட நெருப்பைத் தொடக்கூடாது. அதற்குப் பதிலாக அவர்கள் பிச்சை எடுத்து வாழ வேண்டும். இருப்பினும், யாகத்தை மட்டும் விட்டுவிடுவது ஒருவரை ஸன்யாஸீயாக (துறந்தவர்) ஆக்காது என்று ஸ்ரீ கிருஷ்ணர் இந்த வசனத்தில் கூறுகிறார்.

யார் உண்மையான யோகி, யார் உண்மையான ஸன்யாஸீ? இந்த விஷயத்தில் பல குழப்பங்கள் உள்ளன. மக்கள் கூறுகிறார்கள், 'இந்த ஸ்வாமிஜி ஃ பலாஹாரி (பழங்களை மட்டுமே சாப்பிடுபவர், வேறு எதையும் சாப்பிடாதவர்), எனவே அவர் ஒரு உயர்ந்த யோகியாக இருக்க வேண்டும்.' 'இந்த பா3பா3ஜி (துறந்தவர்) பாலில் மட்டுமே வாழ்கிறார்), எனவே, அவர் இன்னும் உயர்ந்த யோகியாக இருக்க வேண்டும்..' 'இந்த குருஜி ப1வனாஹாரி (சாப்பிடுவதில்லை, சுவாசத்தில் மட்டுமே வாழ்கிறார்), எனவே, அவர் நிச்சயமாக கடவுளை உணர்ந்தவராக இருக்க வேண்டும்.' 'இந்த சாது ஒரு நாகா3 பா3பா3 (ஆடை அணியாத துறவி), எனவே, அவர் முற்றிலும் துறந்தார். எனினும், ஸ்ரீகிருஷ்ணர் இந்தக் கருத்துக்கள் அனைத்தையும் நிராகரிக்கிறார். ஸன்யாஸத்தின் இத்தகைய வெளிப்புற செயல்கள் யாரையும் ஸன்யாஸீயாகவோ அல்லது யோகியாகவோ ஆக்குவதில்லை என்று அவர் கூறுகிறார். கடவுளுக்கு அர்ப்பணிப்பதன் மூலம் தங்கள் செயல்களின் பலனைத் துறக்கக்கூடியவர்கள் உண்மையான துறவிகள் மற்றும் யோகிகள்.

தற்காலத்தில், யோகா என்பது மேற்கத்திய உலகில் பரபரப்பான வார்த்தையாக மாறியுள்ளது. உலகெங்கிலும் உள்ள ஒவ்வொரு நாட்டின் ஒவ்வொரு நகரத்திலும் எண்ணற்ற யோகா ஸ்டுடியோக்கள் உருவாகியுள்ளன. அமெரிக்காவில் உள்ள ஒவ்வொரு பத்து பேரில் ஒருவர் யோகா பயிற்சி செய்வதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால் ஸமஸ்கிருத நூல்களில் ‘யோகா’ என்ற வார்த்தை இல்லை; உண்மையான வார்த்தை 'யோக்3', அதாவது 'ஒன்றிணைப்பு'. இது தெய்வீக உணர்வுடன் தனிப்பட்ட நனவை ஒன்றிணைப்பதைக் குறிக்கிறது. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், யாருடைய மனம் முழுவதுமாக கடவுளிடம் உள்ளதோ அவர்தான் ஒரு யோகி. அத்தகைய யோகியின் மனம் இயற்கையாகவே உலகத்திலிருந்து விலகியிருக்கிறது என்பதையும் இது பின்பற்றுகிறது. இதன் விளைவாக, உண்மையான யோகி உண்மையான ஸன்யாஸீயும் ஆவார்.

கர்ம யோகம் செய்பவர்கள் எந்த விதமான வெகுமதியின் மீதும் ஆசையில்லாமல் கடவுளுக்கு பணிவான சேவையின் உணர்வோடு அனைத்து செயல்களையும் செய்கிறார்கள். அவர்கள் குடும்ப அமைப்பில் இருந்தாலும் அப்படிப்பட்டவர்கள் உண்மையான யோகிகளாகவும் உண்மையான துறந்தவர்களாகவும் இருப்பார்கள்.

Bookmark this Verse

Sign in to save your favorite verses.

Add a Note
Swami Mukundananda
6. த்யான யோகம்

Quick Jump to Any Verse

Navigate directly to the wisdom you seek

Book with feather

Stay Connected!

Verse of the Day

Start your day with the timeless inspiring wisdom from the Holy Bhagavad Gita delivered straight to your email!

Thanks for subscribing to "Bhagavad Gita - Verse of the Day"!