Contact: +91 844 894 1008
bgwebsite_logo
Bhagavad Gita
The Song of God

Bhagavad Gita: Chapter 6, Verse 2

யம் ஸன்யாஸமிதி1 ப்1ராஹுர்யோக3ம் த1ம் வித்3தி4 பா1ண்ட3வ |

ந ஹ்யஸந்யஸ்த1ஸங்க1ல்போ1 யோகீ34வதி11ஶ்ச1ன ||2||

யம்—--எது; ஸன்யாஸம்--—துறவு; இதி--—என்று; ப்ராஹுஹு----அவர்கள் சொல்கிறார்கள்; யோகம்—யோகம்; தம்—அதுவே; வித்தி--—அறிவாய்; பாண்டவ—--பாண்டுவின் மகனான அர்ஜுனா; ந—இல்லை; ஹி—--நிச்சயமாக அஸந்யஸ்த—விட்டுக்கொடுக்காமல்; ஸங்கல்பஹ--—ஆசைகளை;யோகி--—ஒரு யோகி; பவதி—--ஆவது; கஶ்சன—எவரும்

Translation

BG 6.2: ஸன்யாஸம் என்று அறியப்படுவது யோகத்திலிருந்து வேறுபட்டதல்ல, ஏனென்றால் உலக ஆசைகளைத் துறக்காமல் யாரும் யோகிகள் ஆக மாட்டார்கள்.

Commentary

ஒரு ஸன்யாஸீ என்பவர் மனம் மற்றும் புலன்களின் இன்பங்களைத் துறப்பவர். ஆனால் வெறும் துறவு என்பது குறிக்கோள் அல்ல, இலக்கை அடைய அது போதுமானது அல்ல. துறவு என்றால் நாம் தவறான திசையில் ஓடுவது நின்று விட்டது என்று அர்த்தம். உலகில் மகிழ்ச்சியைத் தேடிக் கொண்டு இருந்த நாம் பொருள் இன்பங்களில் மகிழ்ச்சி இல்லை என்று புரிந்து கொண்டோம். எனவே, உலக இன்பத்திற்காக ஓடுவதை நிறுத்தி விட்டோம். இருப்பினும், நிறுத்தினால் மட்டும் இலக்கை அடைய முடியாது. ஆன்மாவின் பயணத்தின் நோக்கம் கடவுள்-உணர்தல். கடவுளை நோக்கிச் செல்வது-அவரை நோக்கி மனதை ஈடுபடுத்துவது தான் யோகத்தின் பாதை. வாழ்க்கையின் இலக்கை முழுமையாக அறியாதவர்கள், துறப்பதை ஆன்மீகத்தின் உயர்ந்த குறிக்கோளாகக் கருதுகின்றனர். மறுபுறம், வாழ்க்கையின் இலக்கை உண்மையாகப் புரிந்துகொள்பவர்கள் தங்கள் ஆன்மீக முயற்சிகளின் இறுதி இலக்காக கடவுளை உணர்தல் என்று கருதுகின்றனர்.

5.4 வது வசனத்தின் நோக்கத்தில், இரண்டு வகையான துறவுகள் - ஃ பல்கு1 வைராக்3யம் மற்றும் யுக்த1 வைராக்1யம் என்று விளக்கப்பட்டது. ஃ பல்கு வைராக்கியம் என்பது, உலகப் பொருள்களை மாயாவின் பொருளாக உணர்ந்து அவை ஆன்மிக முன்னேற்றத்திற்கு கேடு விளைவிப்பதால் அவற்றை துறந்து விடுவது. யுக்த வைராக்யம் என்பது கடவுளுக்கு சொந்தமானதாக கருதி அவற்றை அவருடைய சேவையில் பயன்படுத்துவது. முதல் வகையான துறவில், 'பணத்தை விட்டுவிடு. அதை தொடாதே. இது மாயாவின் வடிவம் மற்றும் ஆன்மீகத்தின் பாதையில் ஒரு தடையாகும்.' இரண்டாவது வகையான துறவில், 'பணமும் கடவுளின் ஆற்றலின் ஒரு வடிவம். அதை வீணாக்காதீர்கள் அல்லது தூக்கி எறியாதீர்கள்; உங்களிடம் உள்ள அனைத்தையும் கடவுளின் சேவையில் பயன்படுத்துங்கள்' என்று ஒருவர் கூறலாம் .

ஃபல்கு வைராக்கியம் நிலையற்றது மற்றும் ஒருவர் மிகவும் எளிதாக மீண்டும் உலகத்தின் மீது பற்றுதல் கொள்ளமுடியும். இந்தியாவில் பீகார் மாநிலத்தில் உள்ள கயா நகரில் உள்ள ஒரு நதியிலிருந்து பல்கு என்ற பெயர் வந்தது. பஹால்கு நதி மேற்பரப்பிற்குக் கீழே ஓடுகிறது. மேலே இருந்து பார்த்தால் தண்ணீர் இல்லாதது போல் தெரிகிறது, ஆனால் சில அடிகள் தோண்டினால் கீழே தண்ணீர் ஓடையை பார்க்க முடியும். இதேபோல், பலர் உலகத்தைத் துறந்து மடங்களுக்குச் செல்கிறார்கள், சில ஆண்டுகளில், துறவு மறைந்து, மனம் மீண்டும் உலகத்துடன் இணைந்திருப்பதைக் உணர்கிறார்கள். அவர்களின் பற்றின்மை ஃபல்கு வைராக்கியம். உலகம் தொந்தரவாகவும் துயரமாகவும் இருப்பதைக் கண்டு, அவர்கள் ஒரு மடத்தில் தஞ்சம் புகுந்து அதிலிருந்து விடுபட விரும்பினர். ஆனால் ஆன்மிக வாழ்க்கை கடினமானதாக இருப்பதைக் கண்டபோது, ​​அவர்கள் ஆன்மீகத்திலிருந்தும் விலகினர். இதற்கு மாறாக, கடவுளுடன் தங்கள் அன்பான உறவை நிறுவும் மற்றவர்களும் உள்ளனர். அவருக்கு சேவை செய்ய வேண்டும் என்ற ஆசையால் தூண்டப்பட்டு, அவர்கள் உலகத்தை துறந்து ஒரு மடத்தில் வாழ்கிறார்கள். அவர்களின் துறவு யுக்த வைராக்யமாகும். அவர்கள் பொதுவாக சிரமங்களை எதிர்கொண்டாலும் பயணத்தைத் தொடர்கிறார்கள்.

இந்த வசனத்தின் முதல் வரியில், ஸ்ரீ கிருஷ்ணர் ஒரு உண்மையான ஸன்யாஸீ (துறந்தவர்) ஒரு யோகி, அதாவது, அன்பான சேவையில் கடவுளுடன் மனம் ஒன்றி இருப்பவர் என்று கூறுகிறார். இரண்டாவது வரியில், ஜட ஆசைகளை கைவிடாமல் ஒருவர் யோகியாக இருக்க முடியாது என்று ஸ்ரீ கிருஷ்ணர் கூறுகிறார். மனதில் பொருள் ஆசைகள் இருந்தால், அது இயற்கையாகவே உலகத்தை நோக்கி ஓடும். மனமே இறைவனோடு ஒன்றுபட வேண்டும் என்பதால், மனம் அனைத்து ஜட ஆசைகளிலிருந்தும் விடுபட்டால் மட்டுமே இது சாத்தியமாகும். எனவே, யோகியாக இருப்பதற்கு உள்ளிருந்து ஸன்யாஸீயாக இருக்க வேண்டும்; மேலும் ஒருவர் யோகியாக இருந்தால் மட்டுமே ஸன்யாஸீயாக இருக்க முடியும்.

Bookmark this Verse

Sign in to save your favorite verses.

Add a Note
Swami Mukundananda
6. த்யான யோகம்

Quick Jump to Any Verse

Navigate directly to the wisdom you seek

Book with feather

Stay Connected!

Verse of the Day

Start your day with the timeless inspiring wisdom from the Holy Bhagavad Gita delivered straight to your email!

Thanks for subscribing to "Bhagavad Gita - Verse of the Day"!