Contact: +91 844 894 1008
bgwebsite_logo
Bhagavad Gita
The Song of God

Bhagavad Gita: Chapter 6, Verse 29

ஸர்வபூ41ஸ்த2மாத்1மானம் ஸர்வபூ4தா1னி சா1த்1மனி |

ஈக்ஷதே1 யோக3யுக்1தா1த்1மா ஸர்வத்1ர ஸமத1ர்ஶன: ||29||

ஸர்வ-பூத-ஸ்தம்--—எல்லா உயிர்களிலும் அமைந்துள்ளது; ஆத்மானம்--—உயர்ந்த ஆன்மா; ஸர்வ--—அனைத்து; பூதானி--—உயிரினங்களில்; ச—--மற்றும்; ஆத்மனி—--கடவுளை; ஈக்ஷதே--—பார்க்கிறார்; யோக-யுக்த-ஆத்மா--—கடவுளுடன் உணர்வில் ஐக்கியப்பட்டவர்; ஸர்வத்ர—--எல்லா இடங்களிலும்; ஸமதர்ஶனஹ--—சம பார்வையடன்

Translation

BG 6.29: உண்மையான யோகிகள், தங்கள் உணர்வை கடவுளுடன் இணைத்து, எல்லா உயிர்களையும் கடவுளிலும், கடவுளை எல்லா உயிரினங்களிலும் சமமான கண்ணோட்டத்துடன் பார்க்கிறார்கள்.

Commentary

இந்தியாவில், தீபாவளி பண்டிகையின் போது, ​​கடைகளில் கார்கள், விமானங்கள், ஆண்கள், பெண்கள், விலங்குகள், பந்துகள் மற்றும் தொப்பிகள் என பல்வேறு வடிவங்களில் சர்க்கரை மிட்டாய்கள் விற்கப்படுகின்றன. குழந்தைகள் தங்களுக்கு கார், யானை மற்றும் பலவற்றைக் கேட்டு பெற்றோரிடம் சண்டையிடுகிறார்கள். அவை அனைத்தும் ஒரே ஒரே மூலப்பொருளான சர்க்கரையில்) செய்யப்பட்டவை என்றும் சமமாக இனிப்பானவை என்றும் அறிந்த பெற்றோர்கள் அவர்களின் கேடற்ற தன்மையைப் பார்த்து புன்னகைக்கிறார்கள்..

அதுபோலவே, கடவுள் அவரது பல்வேறு ஆற்றல்களின் வடிவில் இருக்கும் எல்லாவற்றின் மூலப்பொருள் ஆவார்,

ஏக1 தே3ஸஸ்தி21ஸ்யாக்3னிர்ஜ்யோத்2ஸ்னா விஸ்தா1ரிணீ யதா2

1ரஸ்ய ப்3ரஹ்மணஹ ஶ்க்1திஸ்த1தே23மகி2லம் ஜகத்1

(நாரத்3 பஞ்ச1ராத்1ரம்)

‘சூரியன் எப்படி ஒரே இடத்தில் தங்கியிருந்து, எங்கும் ஒளிர்வதைப் போலவே, ஒப்புயர்வற்ற கடவுளும் தனது பல்வேறு ஆற்றல்களால் வியாபித்து, உள்ள அனைத்தையும் நிலைநிறுத்துகிறார்.’ முழுமையடைந்த யோகிகள், உணர்ந்த அறிவின் வெளிச்சத்தில், எல்லாவற்றையும் கடவுளுடன் தொடர்புள்ளதாக காண்கிறார்கள்.

Bookmark this Verse

Sign in to save your favorite verses.

Add a Note
Swami Mukundananda
6. த்யான யோகம்

Quick Jump to Any Verse

Navigate directly to the wisdom you seek

Book with feather

Stay Connected!

Verse of the Day

Start your day with the timeless inspiring wisdom from the Holy Bhagavad Gita delivered straight to your email!

Thanks for subscribing to "Bhagavad Gita - Verse of the Day"!