Contact: +91 844 894 1008
bgwebsite_logo
Bhagavad Gita
The Song of God

Bhagavad Gita: Chapter 6, Verse 43

1த்1ர த1ம் பு3த்3தி4ஸந்யோகம் லப4தே பௌ1ர்வதே3ஹிக1ம் |

யத1தே111தோ1 பூ4ய: ஸந்ஸித்தௌ4 கு1ருநன்த3ன ||43||

தத்ர—-அங்கு; தம்—-அந்த; புத்தி-ஸந்யோகம்—-அவர்களின் ஞானத்தை மீண்டும் எழுப்பி; லபதே---பெறுகிறார்; பௌர்வ-தேஹிகம்—--முந்தைய வாழ்க்கையிலிருந்து; யததே----முயற்சி செய்கிறார்; ச--—மற்றும்; ததஹ—--அதன்பின்; பூயஹ--—மீண்டும்; ஸந்ஸித்தௌ--—மாசற்ற நிலை கோரி; குரு-நந்தன---அர்ஜுனன், குருக்களின் வழித்தோன்றலே

Translation

BG 6.43: குரு வம்சத்தில் தோன்றியவனே, அத்தகைய பிறப்பை எடுத்தவுடன், அவர்கள் தங்கள் முந்தைய வாழ்க்கையின் ஞானத்தை மீண்டும் எழுப்புகிறார்கள் மற்றும் யோகத்தில் முழுமையை நோக்கி இன்னும் கடினமாக முயற்சி செய்கிறார்கள்.

Commentary

ஒவ்வொரு உயிரினத்தின் இதயத்திலும் வீற்றிருக்கும் கடவுள் முற்றிலும் நீதியுள்ளவர். கடந்தகால வாழ்க்கையில் நாம் சேகரித்து வைத்திருந்த ஆன்மீகச் சொத்துக்கள் யாவும்- பற்றின்மை, ஞானம், பக்தி, நம்பிக்கை, சகிப்புத்தன்மை, உறுதிப்பாடு மற்றும் பிற நேர்மறையான குணங்கள்-அவருக்குத் தெரியும். எனவே, சரியான நேரத்தில், அவர் நமது கடந்தகால முயற்சிகளின் பலனைத் தந்து, நமது முந்தைய சாதனைகளுக்கு ஏற்ப நமது ஆன்மீகத்தை உள்ளிருந்து மேம்படுத்துகிறார். பொருள் கண்ணோட்டங்களைக் கொண்ட சிலர் திடீரென ஆழ்ந்த ஆன்மீகவாதிகள் ஆக மாறுவதை இது விளக்குகிறது. அவர்களின் ஆன்மீக கடந்த வாழ்க்கையிலிருந்து முன்னோக்கிச் செல்லும் போக்குகள் (ஸன்ஸ்கா1ரங்கள்) விழித்தெழும் போது, ​​அவர்கள் முந்தைய ஜென்மத்தின் ஆன்மீகப் பயிற்சியின் பலனைப் பெறுகிறார்கள்.

ஒரு பயணி சாலையோரத்தில் உள்ள ஒரு ஹோட்டலில் இரவு ஓய்வெடுக்க பயணத்தை முறித்துக் கொள்ளலாம். ஆனால் அவர் எழுந்ததும், ஏற்கனவே கடந்துவிட்ட தூரத்தை மீண்டும் பிரயாணிக்க தேவையில்லை. மீதமுள்ள வழியை கடப்பதற்குகு அவர் முன்னோக்கி நகர்கிறார். அதுபோலவே, கடவுளின் அருளால், கடந்த ஜென்மத்தின் யோகி, முன்பு திரட்டப்பட்ட ஆன்மீகச் சொத்துக்களைப் பெறுகிறார், தூக்கத்திலிருந்து எழுந்த ஒருவரைப் போல, தான் விட்டுச் சென்ற பயணத்தைத் தொடர முடியும். அதனால்தான் அத்தகைய யோகி ஒருபோதும் தொலைந்து போவதில்லை.

Bookmark this Verse

Sign in to save your favorite verses.

Add a Note
Swami Mukundananda
6. த்யான யோகம்

Quick Jump to Any Verse

Navigate directly to the wisdom you seek

Book with feather

Stay Connected!

Verse of the Day

Start your day with the timeless inspiring wisdom from the Holy Bhagavad Gita delivered straight to your email!

Thanks for subscribing to "Bhagavad Gita - Verse of the Day"!