Contact: +91 844 894 1008
bgwebsite_logo
Bhagavad Gita
The Song of God

Bhagavad Gita: Chapter 8, Verse 11

யத3க்ஷரம் வேத3விதோ3 வத3ன்தி1 விஶன்தி1 யத்3யத1யோ வீத1ராகா3: |

யதி3ச்12ன்தோ1 ப்3ரஹ்மச1ர்யம் ச1ரன்தி11த்1தே113ம் ஸங்க்3ரஹேண ப்1ரவக்ஷ்யே ||11||

யத்—--எதை; அக்ஷரம்—--அழியாதது; வேத-விதஹ—--வேதங்களின் அறிஞர்கள்; வதந்தி-—விவரிக்கின்றனர்; விஶந்தி--—நுழைகின்றனர்; யத்---எதை; யதயஹ—உயர்ந்த துறவிகள்; வீத-ராகாஹா----பற்றற்ற; யத்—-எதை; இச்சந்தஹ-—விரும்பி; ப்ரஹ்மசர்யம் —ப்ரஹ்மச்சர்யத்தை; சரந்தி—கடைபிடிக்கின்றனர்; தத்—அதை; தே—--உனக்கு; பதம்--—இலக்கை; ஸங்க்ரஹேண—--சுருக்கமாக; ப்ரவக்ஷ்யே—--நான் விளக்குகிறேன்

Translation

BG 8.11: வேத அறிஞர்கள் அவரை அழியாதவர் என்று வர்ணிக்கின்றனர்; பெரிய துறவிகள் ப்ரஹ்மச்சரியத்தின் சபதத்தை கடைப்பிடித்து, உலக இன்பங்களைத் துறந்து அவருக்குள் நுழைகிறார்கள். அந்த இலக்கை அடையும் பாதையை இப்பொழுது சுருக்கமாக உனக்கு விளக்குகிறேன்.

Commentary

வேதங்களில் கடவுள் பல பெயர்களில் குறிப்பிடப்பட்டுள்ளார். அவற்றில் சில: ஸத், அவ்யாக்ரித், பிரான், இந்திரன், தேவ், ப்ரஹ்மன், பரமாத்மா, பகவான் மற்றும் புருஷ். பல்வேறு இடங்களில், கடவுளின் உருவமற்ற அம்சத்தைக் குறிப்பிடுகையில், அவர் அக்ஷர் என்ற பெயரிலும் அழைக்கப்படுகிறார், அதாவது 'அழியாதவர்'. பி3ருஹதா3ரண்யக1 உப1நிஷத3ம் கூறுகிறது:

ஏத1ஸ்ய வா அக்ஷரஸ்ய ப்1ரஶாஸநே கா3ர்கி3 ஸூர்யாச1ந்த்3ரமஸௌ

வித்3ரிதௌ1 தி1ஷ்டத1ஹ (3.8.9)

‘அழியாதவர்களின் வலிமையான கட்டுப்பாட்டின் கீழ், சூரியனும் சந்திரனும் அவற்றின் போக்கில் வைக்கப்பட்டுள்ளனர்.’ இந்த வசனத்தில், ஸ்ரீ கிருஷ்ணர் கடவுளின் உருவமற்ற அம்சத்தை அடைவதற்கான யோக்-மிஸ்ர பக்தியின் பாதையை விவரிக்கிறார். ஸங்கரஹேண என்ற வார்த்தைக்கு 'சுருக்கமாக' என்று பொருள். அவர் பாதையை சுருக்கமாக மட்டுமே விவரிப்பார் மற்றும் அதை வலியுருத்த மாட்டார், ஏனெனில் பாதை அனைவருக்கும் பொருந்தாது.

இந்த வழியில், ஒருவர் கடுமையான துறவறங்களைச் செய்ய வேண்டும், உலக ஆசைகளைத் துறந்து, ப்ரஹ்மச்சரியத்தை கடைப்பிடிக்க வேண்டும், மற்றும் கடுமையான மன உறுதியுடன் வாழ வேண்டும். ப்3ரஹ்மச1ரியம் என்பது ப்ரஹ்மசரியத்தின் சபதம். அதன் மூலம், ஒரு நபரின் உடல் ஆற்றல் பாதுகாக்கப்படுகிறது, பின்னர் பயிற்சியின் மூலம் ஆன்மீக ஆற்றலாக மாற்றப்படுகிறது. ப்ரஹ்மச்சரியத்தை கடைப்பிடிக்கும் ஆன்மீக பயிற்சியாளரின், ஆன்மீக விஷயங்களைப் புரிந்துகொள்வதற்கான நினைவாற்றலையும் அறிவாற்றலையும் அதிகரிக்கிறது. இது முன்னர் 6.14 வசனத்தில் விரிவாக விளக்கப்பட்டுள்ளது.

Bookmark this Verse

Sign in to save your favorite verses.

Add a Note
Swami Mukundananda
8. அக்ஷர ப்ரஹ்ம யோகம்

Quick Jump to Any Verse

Navigate directly to the wisdom you seek

Book with feather

Stay Connected!

Verse of the Day

Start your day with the timeless inspiring wisdom from the Holy Bhagavad Gita delivered straight to your email!

Thanks for subscribing to "Bhagavad Gita - Verse of the Day"!