மன்மனா ப4வ மத்3ப4க்1தோ1 மத்3யாஜீ மாம் நமஸ்கு1ரு |
மாமேவைஷ்யஸி யுக்1த்1வைவமாத்1மானம் மத்1ப1ராயண: ||34||
மத்-மனஹ——எப்பொழுதும் என்னையே நினைத்து; பவ——இருக்கவும்; மத்——என்; பக்தஹ——பக்தர்; மத்——என்; யாஜீ——வழிபடுபவர்; மாம்——என்னை; நமஸ்குரு——வணங்கி; மாம்——என்னை; ஏவ——நிச்சயமாக; ஏஷ்யஸி---நீ வருவாய்; யுக்த்வா——என்னுடன் ஐக்கியமாகி; ஏவம்——இவ்வாறு; ஆத்மானம்——உன் மனதாலும் உடலாலும்; மத்-பராயணஹ—— என்னிடம் அர்ப்பணம் செய்யப்பட்ட
BG 9.34: எப்பொழுதும் என்னையே நினைத்து, என்னிடம் பக்தி செலுத்தி, என்னை வணங்கி, என்னை தலை வணங்கு. என்னிடம் அர்ப்பணம் செய்யப்பட்ட மனதுடனும் உடலுடனும் நீ என்னிடமே வருவாய்.
மன்மனா ப4வ மத்3ப4க்1தோ1 மத்3யாஜீ மாம் நமஸ்கு1ரு |
மாமேவைஷ்யஸி யுக்1த்1வைவமாத்1மானம் மத்1ப1ராயண: ||34||
எப்பொழுதும் என்னையே நினைத்து, என்னிடம் பக்தி செலுத்தி, என்னை வணங்கி, என்னை தலை வணங்கு. என்னிடம் அர்ப்பணம் செய்யப்பட்ட மனதுடனும் உடலுடனும் நீ என்னிடமே வருவாய்.
Sign in to save your favorite verses.
Sign InStart your day with the timeless inspiring wisdom from the Holy Bhagavad Gita delivered straight to your email!
இந்த அத்தியாயம் முழுவதும் பக்தியின் பாதையான பக்தியை வலியுறுத்திய ஸ்ரீ கிருஷ்ணர் இப்பொழுது அர்ஜுனனை தன் பக்தனாக ஆகும்படி பரிவோடு வினவி அதை முடிக்கிறார். அவரை வழிபடுவதன் மூலமும், அவரது தெய்வீக ரூபத்தில் தியானத்தில் மனதை ஈடுபடுத்துவதன் மூலமும், அவருக்குத் தூய பணிவுடன் வணக்கம் செலுத்துவதன் மூலமும், உண்மையான யோகத்தில் கடவுளுடன் தனது உணர்வை ஒன்றிணைக்குமாறு அர்ஜுனனை கேட்கிறார்.
நமஸ்கு1ரு (அடக்கமான வணக்கத்தின் செயல்) பக்தியின் செயல்பாட்டில் எழக்கூடிய அகங்காரத்தின் அடையாளங்களை திறம்பட நடுநிலையாக்குகிறது. எனவே, அகங்காரத்திலிருந்து விடுபட்டு, பக்தியில் ஆழ்ந்த இதயத்துடன், ஒருவர் தனது எண்ணங்களையும் செயல்களையும் ஒப்புயர்வற்ற கடவுளிடம் அர்ப்பணிக்க வேண்டும். பக்தியோகத்தின் மூலம் அவருடன் அர்ஜுனனின் அத்தகைய முழுமையான தொடர்பு நிச்சயமாக கடவுள் உணர்தலுக்கு வழிவகுக்கும் என்று ஸ்ரீ கிருஷ்ணர் உறுதியளிக்கிறார்; இதில், எந்த சந்தேகமும் இருக்கக்கூடாது.