ஏவம் ப3ஹுவிதா4 யஞ்ஞா வித1தா1 ப்1ரஹ்மணோ முகே2 |
க1ர்மஜான்வித்3தி4 தா1ன்ஸர்வானேவம் ஞாத்வா விமோக்ஷ்யஸே ||32||
ஏவம்—--இவ்வாறு; பஹு-விதாஹா---பல்வேறு வகையான; யஞ்ஞாஹா---தியாகங்கள்; விததாஹா—--விவரிக்கப்பட்டது; ப்ரஹ்மணஹ--—வேதங்களின்; முகே--—வாய் வழியாக; கர்ம-ஜான்—--செயல்களில் இருந்து தோன்றுவது; வித்தி—--அறிக; தான்—--அவர்கள்; ஸர்வான்--—அனைத்து; ஏவம்--—இவ்வாறு; ஞாத்வா—--அறிந்து; விமோக்ஷ்யஸே----நீ விடுதலை பெறுவாய்
BG 4.32: இந்த பல்வேறு வகையான தியாகங்கள் அனைத்தும் வேதங்களில் விவரிக்கப்பட்டுள்ளன. அவை பல்வேறு வகையான வேலைகளிலிருந்து தோன்றியவை என அறிந்து கொள்; இந்த புரிதல் பொருள் அடிமைத்தனத்தின் முடிச்சுகளை வெட்டுகிறது.
ஏவம் ப3ஹுவிதா4 யஞ்ஞா வித1தா1 ப்1ரஹ்மணோ முகே2 |
க1ர்மஜான்வித்3தி4 தா1ன்ஸர்வானேவம் ஞாத்வா விமோக்ஷ்யஸே ||32||
இந்த பல்வேறு வகையான தியாகங்கள் அனைத்தும் வேதங்களில் விவரிக்கப்பட்டுள்ளன. அவை பல்வேறு வகையான வேலைகளிலிருந்து தோன்றியவை என அறிந்து கொள்; இந்த புரிதல் பொருள் அடிமைத்தனத்தின் முடிச்சுகளை …
Sign in to save your favorite verses.
Sign InStart your day with the timeless inspiring wisdom from the Holy Bhagavad Gita delivered straight to your email!
வேதங்களின் அழகிய அம்சங்களில் ஒன்று, அவை பல்வேறு வகையான மனித இயல்புகளை அடையாளம் கண்டு அவற்றைப் பூர்த்தி செய்வதாகும். வெவ்வேறு வகையான தியாகங்கள். வெவ்வேறு வகையான வினையாற்றுபவர்களுக்காக இவ்வாறு விவரிக்கப்பட்டுள்ளன. கடவுளுக்கு காணிக்கையாக பக்தியுடன் செய்யப்பட வேண்டும் என்பது அவற்றில் இயங்கும் பொதுவான கருத்து. இந்த புரிதலுடன், வேதங்களில் உள்ள பலதரப்பட்ட அறிவுரைகளால் ஒருவன் திகைக்காமல், தன் இயல்புக்கு ஏற்ற குறிப்பிட்ட யாகத்தைப் பின்பற்றுவதன் மூலம், பொருள் அடிமைத்தனத்திலிருந்து விடுபடலாம்.