Contact: +91 844 894 1008
bgwebsite_logo
Bhagavad Gita
The Song of God

Bhagavad Gita: Chapter 6, Verse 22

யம் லப்3த்4வா சா11ரம் லாப4ம் மன்யதே1 நாதி41ம் த11: |

யஸ்மின்ஸ்தி2தோ1 ந து2:கே2ன கு3ருணாபி1 விசா1ல்யதே1 ||22||

யம்--—எதை; லப்த்வா—--பெற்று; ச—--மற்றும்; அபரம்--—வேறு எந்த; லாபம்--—ஆதாயம்; மன்யதே--—கருத்தில்; ந--—இல்லை;அதிகம்--—அதிகமான; ததஹ—--அதைவிட; யஸ்மின்--—இதில்;ஸ்திதஹ--—இருப்பது; ந—ஒருபோதும் இல்லை துஹ்கேன--—துக்கத்தால்;குருணா--—அளவிலா(மூலம்);அபி--—கூட; -விசால்யதே--—நிலைகுலைய

Translation

BG 6.22: அந்த நிலையைப் பெற்ற பிறகு, எந்த ஒரு ஸாதனையையும் பெரியதாகக் கருதுவதில்லை. இவ்வாறு நிலைநிறுத்தப்பட்டதால், மிகப்பெரிய பேரிடரின் மத்தியிலும் ஒருவர் அசைவதில்லை.

Commentary

பொருள் உலகில் எவ்வளவு அடைந்தாலும் அது ஒரு நபரை முழுவதுமாக திருப்திப் படுத்தாது. ஒரு ஏழை பணக்காரன் ஆவதற்கு கடினமாக பாடுபடுகிறான், அவனால் ஒருகோடீஸ்வரனாக முடிந்தால் திருப்தி அடைகிறான். ஆனால் அதே கோடீஸ்வரன் 10 கோடி வைத்திருக்கும் கோடீஸ்வரனை பார்க்கும்போது, ​​மீண்டும் அதிருப்தி அடைகிறான். 10 கோடிக்கு அதிபதியான கோடீஸ்வரர் அவரைவிட இன்னும் பணக்காரனை பார்த்து அதிருப்தி அடைகிறார். நாம் எந்த மகிழ்ச்சியைப் பெற்றாலும், மகிழ்ச்சியின் அடுத்த நிலையை விரும்பும் மனம் நிறைவேறாத மகிழ்ச்சியின் அதிருப்தியை உணருகிறது. ஆனால் யோக நிலையிலிருந்து அடையப்படும் மகிழ்ச்சி என்பது கடவுளின் எல்லையற்ற பேரின்பம். அதைவிட உயர்ந்தது எதுவும் இல்லை என்பதால், அந்த எல்லையற்ற பேரின்பத்தை அனுபவிக்கும் போது, ​​ஆன்மா தன் இலக்கை அடைந்துவிட்டதை இயல்பாகவே உணர்கிறது.

கடவுளின் தெய்வீக ஆனந்தமும் நித்தியமானது, அதை ஒருமுறை அடைந்த யோகியிடம் இருந்து அதை ஒருபோதும் பறிக்க முடியாது. அத்தகைய கடவுள்-உணர்ந்த ஆன்மா, பொருள் உடலில் வசித்தாலும், தெய்வீக உணர்வின் நிலையில் உள்ளது. சில நேரங்களில் ஒரு துறவி, வெளிப்புறமாக நோய், விரோதமான மக்கள், அல்லது அடக்குமுறையான சூழல் போன்ற வடிவங்களில் இன்னல்களை எதிர்கொள்கிறார் என்று தோன்றலாம், ஆனால் மனதளவில் துறவி தெய்வீக உணர்வைத் தக்க வைத்துக் கொள்கிறார் மற்றும் கடவுளின் பேரின்பத்தை தொடர்ந்து அனுபவிக்கிறார். எனவே, பெரிய சிரமம் கூட அத்தகைய துறவியை அசைக்க முடியாது. கடவுளுடன் ஒன்றிணைந்து நிலைநிறுத்தப்பட்ட துறவி உடல் உணர்வுக்கு மேலாக உயர்கிறார் மற்றும் உடல் ரீதியான தீங்குகளால் பாதிக்கப்படுவதில்லை. பாம்புகளின் குழியில் வீசப்பட்டபோதும், ஆயுதங்களால் சித்திரவதை செய்யப்பட்டபோதும், நெருப்பில் வைக்கப்பட்டபோதும், குன்றிலிருந்து தூக்கி எறியப்பட்டபோதும் பிரஹலாதனின் உள் நிலை அப்படித்தான் இருந்தது, ஆனால் இந்த சிரமங்கள் எதுவும் கடவுளுடனான பக்தி ஐக்கியத்தைத் துண்டிக்க முடியவில்லை.

Bookmark this Verse

Sign in to save your favorite verses.

Add a Note
Swami Mukundananda
6. த்யான யோகம்

Quick Jump to Any Verse

Navigate directly to the wisdom you seek

Book with feather

Stay Connected!

Verse of the Day

Start your day with the timeless inspiring wisdom from the Holy Bhagavad Gita delivered straight to your email!

Thanks for subscribing to "Bhagavad Gita - Verse of the Day"!